2028 லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கின் போது தெற்கு கலிபோர்னியாவின் போமோனாவில் உள்ள ஃபேர்கிரவுண்ட்ஸ் மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடைபெறும் என்பதை சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐசிசி) உறுதிப்படுத்தியுள்ளது.
128 வருட இடைவெளிக்குப் பின்னர் கிரிக்கெட் மீண்டும் ஒலிம்பிக்கில் இடம்பெறும் என்பது உறுதி செய்யப்பட்டதிலிருந்து, கிரிக்கெட்டின் ஒலிம்பிக் மறுபிரவேசம் குறித்த உற்சாகம் அதிகரித்து வருகிறது.
கடந்த ஏப்ரல் ஒன்பதாம் திகதி சர்வதேச ஒலிம்பிக் பேரவையின் (ஐ.ஓ.சி) நிர்வாகக் குழு 2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டிற்கான வீரர் ஒதுக்கீடுகள் மற்றும் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கையை உறுதிப்படுத்தியது.
இதன்படி, ஆண்கள் மற்றும் பெண்கள் டி20 போட்டிகளில் தலா ஆறு அணிகள் இடம்பெறும் எனவும் ஒவ்வொரு நாடும் 15 வீரர்கள் கொண்ட அணியை அறிவிக்க முடியும் எனவும் கூறப்பட்டிருந்தது.
ஒரு அணியில் 15 பேர் என மொத்தம் 90 விளையாட்டு வீரர்கள் பங்கேற்பார்கள். இது 1900 இல் காணப்பட்ட ஒற்றை-போட்டி வடிவத்தில் இருந்து குறிப்பிடத்தக்க பரிணாமத்தை குறிக்கிறது.
எனினும், முழு போட்டி அட்டவணையும் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதற்கு அருகில் இறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், “2028 லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டதை நாங்கள் வரவேற்கிறோம் என சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
இது கிரிக்கெட்டின் ஒலிம்பிக் மறுபிரவேசத்திற்கான தயாரிப்புகளில் ஒரு முக்கியமான படியாகும் என்று கூறினார். வேகமான டி20 வடிவம் மூலம் விளையாட்டின் வரம்பை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்பை அவர் வலியுறுத்தினார்.
“சர்வதேச கிரிக்கெட் பேரவை சார்பாக, LA28 மற்றும் சர்வதேச ஒலிம்பிக் பேரவையின் ஆதரவிற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் LA28க்குத் தயாராகி அங்கு கிரிக்கெட்டை மிகப்பெரிய வெற்றியடையச் செய்வதில் அவர்களுடனும் சர்வதேச கிரிக்கெட் பேரவை உறுப்பினர்களுடனும் ஒத்துழைக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து சிறைச்சாலை உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத்…
அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக நோர்டன் பிரிட்ஜில் இருந்து கினிகத்தேன, தியகல வழியாக ஸ்ரீபாத வரையிலான சாலை 10 நாட்களுக்கு…
அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் உடனடியாக கையெழுத்திட வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானின் அணு…
ஈரான் சிவப்புக் கோட்டைத் தாண்டிவிட்டது இந்த தாக்குதல்களுக்கு, மிகப் பெரிய விலையை கொடுக்க நேரிடும் என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர்…
பருவநிலை மாற்றத்தால் புவி வெப்பநிலை உயர்வு அன்டார்டிகா பனிப்பாறைகளை வேகமாக உருகச் செய்வதால் பென்குயின்கள் அழிந்து வருவதாக தெரியவந்துள்ளது. அன்டார்டிகாவின்…
ரஷ்யாவின் குறில் தீவுகளில் ஒரு வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் கடலில்…