டிக்கோயா, போடைஸ் தோட்டப் பகுதியில் 74 வயது மூதாட்டியொருவர் 24 வயது இளைஞர் ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டார் எனக் கூறப்படும் சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போடைஸ் பிரதேச மக்கள், இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குற்றவாளியை கைது செய்யுமாறும், தண்டனை வழங்குமாறும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷம் எழுப்பினர்.
போராட்டம் நடைபெற்ற இடத்துக்கு வருகை தந்த ஹட்டன் பொலிஸார், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை சந்தித்து சம்பவம் தொடர்பாக தெளிவுபடுத்தினர். பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.
குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டு, நேற்று (22) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்தைத் தொடர்ந்து , அவரை எதிர்வரும் மே மாதம் 04ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
ஏப்ரல் 20 ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஐஸ் போதைப்பொருளை நுகர்ந்த இளைஞன் ஒருவன், மூதாட்டியின் வீட்டுக்குள் புகுந்து அவரை வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளார் எனக் கூறப்படுகின்றது.
பாதிக்கப்பட்ட 74 வயது மூதாட்டி கிளங்கன் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றார்.
அனைத்து சிறைச்சாலை உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத்…
அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக நோர்டன் பிரிட்ஜில் இருந்து கினிகத்தேன, தியகல வழியாக ஸ்ரீபாத வரையிலான சாலை 10 நாட்களுக்கு…
அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் உடனடியாக கையெழுத்திட வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானின் அணு…
ஈரான் சிவப்புக் கோட்டைத் தாண்டிவிட்டது இந்த தாக்குதல்களுக்கு, மிகப் பெரிய விலையை கொடுக்க நேரிடும் என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர்…
பருவநிலை மாற்றத்தால் புவி வெப்பநிலை உயர்வு அன்டார்டிகா பனிப்பாறைகளை வேகமாக உருகச் செய்வதால் பென்குயின்கள் அழிந்து வருவதாக தெரியவந்துள்ளது. அன்டார்டிகாவின்…
ரஷ்யாவின் குறில் தீவுகளில் ஒரு வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் கடலில்…