Hayleys Mobility Limited, the mobility arm of Hayleys Fentons Limited, has introduced the all-new JAECOO J5 HEV, broadening its range of high-performance hybrid SUVs to meet the evolving demands of Sri Lanka’s growing new-energy vehicle market. Designed to meet the needs of modern drivers, the JAECOO J5 HEV combines intelligent hybrid performance, advanced safety features,…
பிரதான 9 துறைகளில் சிறந்த திறமைகளை வெளிப்படுத்திய பெண்களை கௌரவப்படுத்தும் வகையில், 2026 ஆம் ஆண்டுக்கான IMRA விருது வழங்கும் விழாவிற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன
IMRA Foundation Guarantee Ltd நிறுவனத்தால் மூன்றாவது முறையாக ஏற்பாடு செய்யப்படும் 2026 விருது வழங்கும் நிகழ்விற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருப்பதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, 2026 ஜூலை 01 ஆம் திகதி வரை விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். இலங்கை முழுவதும் வாழும், சிறந்த தன்மைகளும், தலைமைப் பண்புகளும் கொண்ட, சமூகத்திற்கு நல்ல சேவை செய்த முஸ்லிம் பெண்களை தேசிய மட்டத்தில் பாராட்டுவதே இந்த விருது வழங்கும் விழாவின் நோக்கமாகும்.
2026 IMRA விருது வழங்கும் நிகழ்வு எதிர்வரும் செப்டம்பர் 06 ஆம் திகதி மாலை 7 மணி முதல் கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இலங்கையில் முஸ்லிம் பெண்கள் குறித்து சமூகம் கொண்டுள்ள பார்வையை மாற்றியமைத்தல் மற்றும் அவர்களின் திறமைகளை மேலும் வெளிப்படுத்துதல் ஆகிய நோக்கங்களை முன்னிறுத்தி IMRA அறக்கட்டளை நிறுவப்பட்டுள்ளது. இதுவரை சரியான மதிப்பீட்டிற்கு உட்படாத, பல்வேறு துறைகளில் பணியாற்றும், தொழில்களை உருவாக்கிய, அறிவை வளர்த்த மற்றும் சமூகத்திற்குச் சேவை செய்த பெண்களை இத்திட்டத்தின் மூலம் மதிப்பீடு செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், சமூகத்திற்கு முன்மாதிரியான பெண்களை முன்னிறுத்துதல், வெவ்வேறு இனங்களிடையே புரிதலை வளர்த்தல் மற்றும் நாடு முழுவதற்கும் முன்மாதிரியாக விளங்கும் திறமையான பெண்களின் வலையமைப்பைக் கட்டியெழுப்புதல் மூலம் சமூக சமத்துவத்தை வலுப்படுத்துவதும் இந்த விருது வழங்கும் நிகழ்வின் நோக்கங்களாக உள்ளன.
இது குறித்து கருத்துத் தெரிவித்த IMRA அறக்கட்டளையின் பணிப்பாளர் ஃபாத்திமா அஸீஸ், “தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு துறைகளின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடும் பெண்களை தேசிய மட்டத்தில் மதிப்பீடு செய்வதற்கான மேடையாக 2026 IMRA விருது வழங்கும் நிகழ்வைக் குறிப்பிடலாம். இந்த சிறப்புமிக்க விருது வழங்கும் நிகழ்விற்கு இலங்கை முழுவதும் உள்ள அனைத்துப் பெண்களையும் நான் அழைக்கிறேன். மேலும், சமூகத்திற்காகக் குறிப்பிடத்தக்க சேவையாற்றிய தலைவிகளை, நிபுணர்களை மற்றும் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்திய நபர்களை இதற்குப் பரிந்துரைக்குமாறு நிறுவனத்தினரையும் சமூகத்தினரையும் கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறினார்.
இந்த விருதுகளுக்கு இலங்கைக் குடிமக்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும், மேலும் விண்ணப்பங்கள் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் கிடைக்கும். தேர்வுச் செயல்முறை மிகவும் தெளிவான மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ளப்படுகிறது. இதன் தொழில்நுட்பப் பணிகளை KPMG நிறுவனம் மேற்கொள்ளுகிறது, மேலும் பல்வேறு துறைகளில் உள்ள நிபுணர்களைக் கொண்ட நடுவர் மன்றம் ஒன்று இறுதிச் சுற்றுப் போட்டியாளர்களைத் தேர்ந்தெடுக்கும். இறுதித் தேர்வுகள் உறுதிப்படுத்தப்படுவதற்கு முன்னர், அந்தப் போட்டியாளர்கள் நேர்காணல் ஒன்றை எதிர்கொள்ள வேண்டும்.
சட்டம், சுகாதார சேவைகள், வங்கி மற்றும் நிதி, கல்வி, ஊடகம் போன்ற துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெண்களும், அத்துடன் சுற்றுலா மற்றும் ஹோட்டல் சேவைகள், கட்டிடக்கலை, கலை மற்றும் பண்பாடு மற்றும் தொழில்முனைவு ஆகிய துறைகளில் ஈடுபட்டுள்ள பெண்களும் 2026 IMRA விருது வழங்கும் விழாவிற்கு விண்ணப்பிக்கலாம்.
https://forms.gle/v64j47jw1vtSdNkU9 ஊடாக உங்கள் விண்ணப்பங்களை அனுப்ப முடியும்.
2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 07 ஆம் திகதி, பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்களின் பங்கேற்புடன் 2025 IMRA விருது வழங்கும் விழா மிக வெற்றிகரமாக நடைபெற்றது. அதில் பல்வேறு துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய சிறந்த பெண்கள் பலர் விருதுகளைப் பெற்றனர்.
2025 IMRA விருது வழங்கும் நிகழ்வில் விருது பெற்ற சிறந்த பெண்களில் எழுத்தாளரும் வெளியீட்டாளருமான அமீனா ஹுசைன், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் பேராசிரியர் பசீஹா நூர்தீன், திருமண நிகழ்வுத் திட்டமிடல் தொழில்முனைவோர் ஹம்னா கிஸார், இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் ஆங்கில மேற்படிப்பு நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி ரோமோலா ரசூல் ஆகியோர் அடங்குவர். மேலும், தேசிய டென்னிஸ் சாம்பியன் சாஜிதா ராசிக், மூத்த தொலைக்காட்சித் தயாரிப்பாளரும் இயக்குநருமான சீனத்துல் ஷியாமா யாகூப், கட்டிடக் கலைஞர் ஷேலா லத்தீஃப், வழக்கறிஞரும் கல்வியாளருமான ஷஹீதா பாரி, மற்றும் கல்வி கண்டுபிடிப்பாளர் ரிஸ்கா நுஷாட் ஆகியோரும் விருதுகளைப் பெற்றனர்.
IMRA விருது வழங்கும் விழாவில், வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும் சிறப்புப் பாராட்டு விருதினைப் பெறுவதற்கு அன்பேரியா ஹனீஃபா, சுனேலா ஜயவர்தன, சிவனந்தினி துரைசாமி மற்றும் செலின் எக்ஸ்போர்ட் நிறுவனத்தின் நிறுவனர் சாண்ட்ரா வந்துராகல ஆகிய சிறந்த பெண்கள் வெற்றி பெற்றனர்.