For more than three decades, Selyn Group has continuously evolved by responding to the realities of the communities connected to its operations. Since its founding in 1991 as a small handloom enterprise, Selyn has grown into a diversified fair-trade business spanning ethical manufacturing, retail, exports, sustainable product innovation, and community development. At the heart of…
MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது
- வரிக்குப் பிந்தைய இலாபம், ஆண்டுக்கு ஆண்டு (YoY) 228% உயர்ந்து 478 மில்லியன் ரூபாயை எட்டியுள்ளது
- வழங்கப்பட்ட கடன்கள் ஆண்டுக்கு ஆண்டு 98% உயர்ந்து 57.6 பில்லியன் ரூபாயாக உள்ளது.
- மொத்த நிலை 3 கடன் விகிதம் 1.73% ஆகக் குறைந்து முன்னேற்றமடைந்துள்ளது.
Mahindra Ideal Finance, 2026 மார்ச் 31 உடன் முடிவடைந்த நிதியாண்டில் தனது மிகச்சிறந்த நிதிச் செயல்பாட்டைப் பதிவு செய்துள்ளது. இந்நிறுவனம் இலாபம், கடன் வழங்கல் அளவு மற்றும் செயல்பாட்டுத் திறன் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளது.
நிறுவனம் வரிக்கு முந்தைய இலாபமாக (PBT) 818 மில்லியன் ரூபாயை ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 193% அதிகமாகும். வரிக்கு பிந்தைய இலாபம் (PAT) 478 மில்லியன் ரூபாயாக உயர்ந்துள்ளது. இது 228% வளர்ச்சியைக்காட்டுகிறது. 2025-26 நிதியாண்டில் வழங்கப்பட்ட மொத்த கடன்கள் 57.6 பில்லியன் ரூபாயை எட்டியுள்ளன. இது 98% உயர்வாகும். நிறுவனத்தின் கடன் வழங்கும் சேவைகளின் தொடர்ச்சியான வளர்ச்சியே இதற்கு முக்கிய காரணமாகும்.
Mahindra Ideal Finance லிமிடெட் (MIFL) நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான Mufaddal A. Choonia கூறுகையில்,
“கடந்த ஆண்டில், மேம்பட்டு வரும் பொருளாதாரச் சூழலும் வாகனக் கடன் துறையில் நிலவும் தொடர்ச்சியான வேகமும், எங்களது அனைத்து கடன் பிரிவுகளிலும் வலுவான தேவையை ஏற்படுத்தியுள்ளன. இதனுடன், கடன் தரம், செலவுக் கட்டுப்பாடு மற்றும் வாடிக்கையாளர்களைச் சென்றடைவதை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் நாங்கள் காட்டிய தீவிர கவனம், கடன் வழங்கல் மற்றும் இலாபத்தின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளது. நாங்கள் தொடர்ந்து விரிவடைந்து வரும் வேளையில், எமது வாடிக்கையாளர்களுக்கு நம்பகமான மற்றும் எளிதில் அணுகக்கூடிய நிதி தீர்வுகளை வழங்குவதோடு, இந்த வளர்ச்சியைத் தக்கவைப்பதற்கே முன்னுரிமை அளிக்கிறோம்.” என தெரிவித்தார்.
இந்த ஆண்டில் நிறுவனத்தின் செயல்பாட்டுத் திறன் அதிகரித்துள்ளது. செலவு-வருமான விகிதம் (Cost-to-income ratio) கடந்த ஆண்டின் 68.9%-லிருந்து 50.5% ஆகக் குறைந்துள்ளது. அதேபோல், செயல்பாட்டுச் செலவு விகிதமும் (Opex ratio) 8.0%-லிருந்து 5.6% ஆகக் குறைந்துள்ளது. சொத்துகளின் மீதான இலாபம் (ROA) 1.88%-லிருந்து 3.40% ஆகவும், பங்கு மூலதனத்தின் மீதான இலாபம் (ROE) 4.85%-லிருந்து 14.40% ஆகவும் உயர்ந்துள்ளன. இது நிறுவனத்தின் லாபத்திறன் மற்றும் மூலதனப் பயன்பாட்டின் வளர்ச்சியை காட்டுகிறது.
MIFL நிறுவனத்தின் வலுவான கடன் வழங்கும் வேகத்தால், அதன் மொத்த கடன் அளவு 82% உயர்ந்து 26.95 பில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், நிறுவனத்தின் மொத்த சொத்துகள் 81% உயர்ந்து 30.98 பில்லியன் ரூபாயை எட்டியுள்ளன. முறையான கடன் மதிப்பீடு மற்றும் வலுவான வசூல் முறைகளால் சொத்து தரக் குறியீடுகள் மேம்பட்டுள்ளன. இதனால் மொத்த ஸ்டேஜ் 3 கடன் விகிதம் கடந்த ஆண்டின் 1.86%-லிருந்து 1.73% ஆகக் குறைந்துள்ளது.
பல்வேறு தயாரிப்புகளுக்கான கடன் வழங்கும் சேவைகளின் தொடர்ச்சியான விரிவாக்கம், டிஜிட்டல் கடன் வழங்கும் தொழில்நுட்ப முதலீடுகள் மற்றும் வாடிக்கையாளர் சேவை உள்கட்டமைப்பு மேம்பாடுகள் ஆகியவை தங்களை அதிகப்படியான வாடிக்கையாளர்களுக்குச் சேவை செய்ய தயார்படுத்தியுள்ளதாக MIFL தெரிவித்துள்ளது. அதே வேளையில், கடன் வழங்குவதில் விவேகமான, பொறுப்பான மற்றும் தரம் சார்ந்த அணுகுமுறையைத் தொடர்ந்து பின்பற்றுவதாகவும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
Mahindra Ideal Finance Ltd. தொடர்பாக
Mahindra Ideal Finance Ltd. (MIFL), இலங்கையின் மத்திய வங்கியால் உரிமம் பெற்ற, வங்கி அல்லாத நிதி நிறுவனம் (NBFI) ஆகும். இது இந்தியாவின் Mahindra & Mahindra Financial Services Ltdஇன் துணை நிறுவனமாகும். நாடு முழுவதும் விரிவடைந்து வரும் கிளை வலையமைப்பைக் கொண்டுள்ள இந்நிறுவனம் பல்வேறு வர்த்தக நாமங்களுக்கான வாகன நிதி, லீசிங், தங்கக் கடன் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர (SME) அளவிலான தொழில் கடன் உள்ளிட்ட பலதரப்பட்ட நிதித் தீர்வுகளை எளிய முறையிலும் நவீன தொழில்நுட்ப வசதியுடனும் வழங்கி வருகிறது. ‘Fitch AA– (Outlook Stable)’ தரவரிசை அங்கீகாரத்துடன், MIFL நிறுவனம் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை ஆதரிப்பதோடு, நடைமுறைக்கு ஏற்ற வாடிக்கையாளர் மைய நிதிச் சேவைகளை வழங்குவதிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது.
