Prime Lands Residencies PLC, the real leader in the modern real estate, the condominium development arm of Prime Group, has reached another significant milestone with the successful completion and official handover of The Palace Gampaha the largest planned gated community in Gampaha. The grand handover ceremony marked the official handover of the residences to the…
ஆடைத் துறையில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பை உறுதி செய்ய JAAF மற்றும் ILO இணைந்து ‘Inclusive Threads’ஐ அறிமுகம் செய்துள்ளன
சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) மற்றும் சர்வதேச நிதி நிறுவனம் (IFC) ஆகியவற்றின் கூட்டு முயற்சியான ‘Better Works Sri Lanka’வின் ‘Inclusive Threads’ திட்டத்தின் கீழ், பணிச்சூழலில் மாற்றுத்திறனாளிகளை உள்ளடக்குவதை ஊக்குவிக்க 13 ஆடை உற்பத்தி நிறுவனங்கள் கொழும்பில் தன்னிச்சையான உறுதிமொழியில் கையெழுத்திட்டுள்ளன. இந்த முயற்சி மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக வேலைவாய்ப்புகளை வழங்குவதையும், அவர்களுக்கு உகந்த உட்கட்டமைப்பை உருவாக்குவதையும் இலக்காகக் கொண்டுள்ளது.
இந்த உறுதிமொழியின் மூலம், அதில் கையெழுத்திட்டுள்ள நிறுவனங்கள் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை ஊக்குவித்தல், பாகுபாடுகளைத் தடுத்தல், பணியிடத்தில் நியாயமான வசதிகளை உறுதி செய்தல் மற்றும் உள்ளடக்கிய வேலைவாய்ப்பை மேம்படுத்துவதற்காக அரசு நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை பங்காளிகளுடன் இணைந்து பணியாற்றுதல் உள்ளிட்ட எட்டு முக்கியக் கொள்கைகளை நடைமுறைப்படுத்த ஒப்புக்கொண்டுள்ளன.
இந்தக் கைச்சாத்திடும் நிகழ்வில், கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு, இலங்கை முதலாளிமார் சம்மேளனம் (EFC), ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றம் (JAAF) ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன், ஆடைத் துறையைச் சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள், அரசாங்க அதிகாரிகள் மற்றும் அபிவிருத்திப் பங்காளிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான ILO வின் பணிப்பாளர் ஜோனி சிம்சன், இந்த உறுதிமொழியானது அனைத்து சவால்களும் ஏற்கனவே தீர்க்கப்பட்டுவிட்டன என்ற கூற்றை விட, முன்னேற்றத்தை நோக்கிய ஒரு கூட்டு அர்ப்பணிப்பையே பிரதிபலிக்கிறது என்று கூறினார்.
“ஆடைத் துறை நிறுவனங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்புத் தடைகளை நீக்கி, உள்ளடக்கிய சூழலை உருவாக்கப் பகிரங்கமான உறுதிப்பாட்டை ஏற்றுக்கொண்டுள்ளன. இந்த முயற்சி அரசு, முதலாளிகள், தொழிலாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி நல அமைப்புகளின் கூட்டுப் பங்களிப்பின் மூலம் மட்டுமே உண்மையான மற்றும் நிலையான முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்று சிம்சன் வலியுறுத்தியுள்ளார்.”
சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் தர்ஷனி கருணாரத்ன, Inclusive Threads திட்டத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகள் நலன்புரிப் பார்வையில் இருந்து பொருளாதார வலுவூட்டல் பார்வையாக மாற்றமடைந்துள்ளதாகக் குறிப்பிட்டார். நவம்பர் 2025 முதல் Better Work உடனுடனான கூட்டு முயற்சி, மாற்றுத்திறனாளிகளைச் சுயசார்புடைய பொருளாதாரக் குடிமக்களாக மேம்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் தர்ஷனி கருணாரத்னவின் கூற்றுப்படி, “ஆடை உற்பத்தித் துறையில் சிறப்பு கவனம் செலுத்தி, தொழிற்பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புகள் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்குச் சமமான வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. 17,000 க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சென்றடைந்துள்ள இந்தத் திட்டம், மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 12 முறையான வேலைவாய்ப்புகளை உருவாக்கி, வெற்றிகரமான மாதிரியாக நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.” என மேலும் தெரிவித்தார்.
நிகழ்வில் உரையாற்றிய JAAF அமைப்பின் பொதுச் செயலாளர் யொஹான் லோரன்ஸ், ஆடை உற்பத்தித் துறையில் மாற்றுத்திறனாளிகளை உள்ளடக்குவது என்பது ஒரு புதிய முயற்சி அல்ல, மாறாக இது ஒட்டுமொத்த தொழில்துறையிலும் பல தசாப்தகால அனுபவத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ஒன்றாகும் என்று கூறினார்.
“மாற்றுத்திறனாளிகளை வேலைக்கு அமர்த்துவது என்பது ஒரு தொண்டு அல்லது தர்ம காரியம் அல்ல. இது இந்தத் தொழிலின் திறன்களைக் கற்றுக்கொள்ள அர்ப்பணிப்புடன் இருக்கும் மற்றும் பணியிடங்களில் பெரும்பாலும் சிறந்து விளங்கும் நபர்களுக்கான ஒரு சிறந்த முதலீடாகும்” என்று யொஹான் கூறினார். “மிகப் பல சமயங்களில், மாற்றுத்திறனாளிகள் தங்களது திறமைக் குறைவினால் தடைகளை எதிர்கொள்வதில்லை; மாறாக, அவர்களுக்கான குறைந்தபட்ச அணுகல் மற்றும் வரையறுக்கப்பட்ட வாய்ப்புகள் காரணமாகவே தடைகளைச் சந்திக்கின்றனர். முதலாளிகள் அனைவரையும் உள்ளடக்கிய பணிச்சூழலை உருவாக்கும்போது, அவர்கள் இந்தத் தடைகளை நீக்க உதவுவதுடன், அந்த நபர்கள் தங்களது முழுத் திறனையும் தேசியப் பொருளாதாரத்திற்குப் பங்களிக்க அனுமதிக்கிறார்கள்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதுவரை, Inclusive Threads திட்டமானது சமூக சேவைகள் திணைக்களத்தின் கீழ் உள்ள மூன்று தொழிற்பயிற்சி நிறுவனங்களின் பயிற்சிகளை நவீனமயமாக்கியுள்ளதுடன், 140க்கும் மேற்பட்ட ஆடைத்துறை பணியாளர்களுக்கு சைகை மொழிப் பயிற்சியையும் வழங்கியுள்ளது. மேலும், பல ஆடை உற்பத்தி நிறுவனங்களில் பயிற்சி பெறுபவர்களுக்கான தொழிற்சாலை அடிப்படையிலான பயிற்சிப் பணித் திட்டங்களுக்கும் வழிவகுத்துள்ளது.
இந்த நிகழ்வில் பதிமூன்று ஆடை உற்பத்தி நிறுவனங்கள் தன்னிச்சையான இந்த உறுதிமொழியில் கையெழுத்திட்டன: Brandix Apparel PVT LTD, Filotex Lanka (Pvt) Ltd, Hirdaramani International Exports (Pvt) Ltd, Inqube Global (Pvt) Ltd, Maliban Wovens (Pvt) Ltd, Martex M F G (Pvt) Limited, Miami Clothing (Pvt) Ltd, Original Apparel (Pvt) Ltd, Q Collection (Pvt) Ltd, Sumithra Garments (Private) Limited, Sun Queen Apparel (Pvt) Ltd, Vogue Tex (Pvt) Ltd, மற்றும் Winterquilts (Pvt) Ltd.
பங்கேற்ற நிறுவனங்களிடமிருந்து கையொப்பமிடப்பட்ட உறுதிமொழி ஆவணங்களை முறைப்படி கையளித்ததோடு நிகழ்வு நிறைவடைந்தது; அதனைத் தொடர்ந்து நன்றியுரையும் வணிகத் தொடர்புகளைப் புதுப்பித்துக் கொள்ளும் நிகழ்வும் இடம்பெற்றன. மாற்றுத்திறனாளிகளுக்கான உள்ளடக்கிய வேலைவாய்ப்பு உறுதிமொழி நிகழ்வு, ஆடை உற்பத்தி நிறுவனங்களின் ஒப்பந்த ஒப்படைப்புடன் முடிவடைந்து, சிற்றுந்து விருந்துடன் நிறைவுற்றமை குறிப்பிடத்தக்கது.