அனைத்து சிறைச்சாலை உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைகளைத் தொடங்கியுள்ளன. சிறைச்சாலை அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரி பல்வேறு தனிநபர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட புகார்களைத் தொடர்ந்து இந்த விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி, நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில், வங்கிக் கணக்குகள், வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் உள்ளிட்ட அனைத்து சொத்துக்களிலும் முழுமையான விசாரணை நடத்தப்படும். அனைத்து சிறைச்சாலை அதிகாரிகளும்…
கனடாவின் 24ஆவது பிரதமர் பதவியேற்றார்.

கனடாவின் பிரதமர் பதவியை ஜஸ்டின் ட்ரூடோ அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்த நிலையில் அந்நாட்டின் 24ஆவது பிரதமராக மார்க் கார்னி நேற்று (மார்ச் 14) பதவியேற்றார்.
தனது பதவியை பிரெஞ்சு மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் ஏற்றார். கனடாவில் லிபரல் தலைவர் ஜஸ்டின் ட்ரூடோவின் ராஜினாமாவை தொடர்ந்து கார்னி புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நேற்று (மார்ச் 14) பதவி ஏற்கும் முன்பு மார்க் கார்னி தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை இட்டுள்ளார். அதில் இன்று நாம் காலத்தின் தேவைக்கு ஏற்ற ஒரு அரசாங்கத்தை உருவாக்குவோம் என கனடியர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதை இந்த குழு வழங்கும், சிறிய, அனுபவம் வாய்ந்த அமைச்சரவை வேகமாக செயல்பட்டு, நமது பொருளாதாரத்தையும் கனடாவின் எதிர்காலத்தையும் பாதுகாக்கும் என குறிப்பிட்டுள்ளார்.