நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கு கடுமையான சட்டம்
வரி ஏய்ப்பு மற்றும் வரியை ஏமாற்றும் அனைத்து வர்த்தகர்களுக்கும் எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துவதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அறிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று (21) இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போதே அவர் இதனை தெரிவித்தார்
மேலும் லஞ்சத்திற்கு எதிராக கடுமையான முடிவு எடுக்கப்படும் என்றார்.
ஒவ்வொரு அரசாங்க உத்தியோகத்தரும் மேலதிகக் கட்டணங்கள் இன்றி ஒதுக்கப்பட்ட கடமையை நிறைவேற்ற வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

