அனைத்து சிறைச்சாலை உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைகளைத் தொடங்கியுள்ளன. சிறைச்சாலை அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரி பல்வேறு தனிநபர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட புகார்களைத் தொடர்ந்து இந்த விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி, நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில், வங்கிக் கணக்குகள், வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் உள்ளிட்ட அனைத்து சொத்துக்களிலும் முழுமையான விசாரணை நடத்தப்படும். அனைத்து சிறைச்சாலை அதிகாரிகளும்…
இரவுநேர நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு – இருவர் உயிரிழப்பு

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணம் சியாட்டல் நகரின் டகோமா பகுதியிலுள்ள வீட்டில் நேற்று, இரவுநேர கேளிக்கை நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்ததாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க நேரப்படி, இரவு 12 மணியளவில் நடைபெற்ற கேளிக்கை நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், திடீரென அங்கிருந்தவர்கள் மீது சிறுவன் ஒருவன் துப்பாக்கிச் சூடு நடத்தினான். இந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்ததுடன், 4 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
மேலும், துப்பாக்கிச் சூடு நடத்திய சிறுவனைக் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.