அனைத்து சிறைச்சாலை உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைகளைத் தொடங்கியுள்ளன. சிறைச்சாலை அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரி பல்வேறு தனிநபர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட புகார்களைத் தொடர்ந்து இந்த விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி, நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில், வங்கிக் கணக்குகள், வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் உள்ளிட்ட அனைத்து சொத்துக்களிலும் முழுமையான விசாரணை நடத்தப்படும். அனைத்து சிறைச்சாலை அதிகாரிகளும்…
பொலிஸ் காவலில் இருந்த இளைஞன் திடீர் மரணம்

வெலிக்கடை பொலிஸ் காவலில் இருந்த இளைஞர் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
வெலிக்கடை பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் அந்த இளைஞன் நுழைந்ததாக கூறி, அப்பகுதி மக்கள் 119 என்ற பொலிஸ் அவசர எண்ணுக்கு அழைத்துள்ளனர்.
அத்துடன் அவரைப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைக்க மக்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
காவலில் இருந்தபோது அவர் மிகவும் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும், முல்லேரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக வெலிக்கடை பொலிஸ் அதிகாரிகள் உட்பட சுமார் 20 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நுகேகொட குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர் மீகஹகிவுல பகுதியைச் சேர்ந்த “சத்சர நிமேஷ்” என்கின்ற 26 வயதுடைய இளைஞர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மருத்துவமனை தாதி தொடர்பான பாடத்திட்டத்தை கற்று வருகின்றார். குறித்த இளைஞன் ஒரு நடனக் கலைஞர் எனவும் குறிப்பிடப்படுகின்றது.