அனைத்து சிறைச்சாலை உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைகளைத் தொடங்கியுள்ளன. சிறைச்சாலை அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரி பல்வேறு தனிநபர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட புகார்களைத் தொடர்ந்து இந்த விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி, நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில், வங்கிக் கணக்குகள், வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் உள்ளிட்ட அனைத்து சொத்துக்களிலும் முழுமையான விசாரணை நடத்தப்படும். அனைத்து சிறைச்சாலை அதிகாரிகளும்…
கிரீன்லாந்தை உரிமைகோரும் டிரம்ப் – வெடித்த போராட்டங்கள்

டென்மார்க் நாட்டின் ஒரு அங்கமாக இருப்பதை கிரீன்லாந்து மக்கள் விரும்பமாட்டார்கள் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
இயற்கை வளங்கள் நிறைந்த கிரீன்லாந்தை அமெரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்போவதாக டிரம்ப் கூறிவருகிறார். டிரம்புக்கு, கிரீன்லாந்து மற்றும் டென்மார்க் நாட்டு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். அங்கு வசிக்கும் மக்களும் மிகப்பெரிய அளவில் போராட்டங்களை முன்னெடுத்தனர்.
இந்நிலையில், டென்மார்க் அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமா என்பதை கிரீன்லாந்து மக்கள் தான் முடிவெடுக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.