Colombo, 13 August 2026: The Indian Cultural Association (ICA) today announced the launch of the third edition of the ICA International Marathon, scheduled to take place on 13 December 2026 at Galle Face Green, Colombo. The event is set to bring together runners, fitness communities, corporate teams, and international participants for a certified road-running experience…
மனிதர்களை நெருங்கும் புதிய HKU5 கொரோனா வைரஸ்
வௌவால்களில் காணப்படும் HKU5 எனும் கொரோனா வகை வைரஸ், சிறிய மரபணு மாற்றம் மூலமாகவே மனிதர்களில் பரவக்கூடிய ஆபத்தான நிலைக்கு மாறும் சாத்தியம் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வொஷிங்டன் மாநில பல்கலைக்கழகம், கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனம், வடகரோலினா பல்கலைக்கழகம் ஆகியவற்றின் கூட்டாய முயற்சியில் இந்த ஆய்வு நடைபெற்றுள்ளது.
முக்கிய அறிவியல் இதழான நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் இதை வெளியிட்டுள்ளது.
இந்த HKU5 வைரஸ், COVID-19 வைரசு போலவே மனித செல்களில் உள்ள ACE2 ஏற்பியைப் பயன்படுத்தக்கூடியதாகத் தெரிய வந்துள்ளது.
இது மனிதர்களுக்கு பரவும் வழியை திறக்கக் கூடியது. இந்த வைரஸ், MERS-CoV எனப்படும் முன்பு கண்டறியப்பட்ட கொடிய தொற்று வைரசுடன் தொடர்புடையது. குறிப்பிடத்தக்கவிதமாக, MERS நோயில் உயிரிழப்பு விகிதம் 34% ஆகும்.
HKU5 வைரஸ் முதலில் ஜப்பானிய வௌவால்களில் கண்டறியப்பட்டாலும், தற்போதைய கண்டுபிடிப்புகள், இது மின்க்ஸ் போன்ற இடைநிலை விலங்குகளுக்கு பரவி வருவதைக் காட்டுகின்றன. இதுவே மனிதர்களுக்குள் பரவ எளிதாக்கும் ஆரம்பமாக இருக்கலாம்.
WSU வைராலஜிஸ்ட் மைக்கேல் லெட்கோ, “இது இன்னும் மனிதர்களுக்கு நேரடியாக பரவவில்லை என்றாலும், அத்தகைய திறன் இருக்கிறது. எனவே கண்காணிப்பு அவசியம்,” என கூறுகிறார்.
ஆல்பாஃபோல்ட் 3 போன்ற AI கருவிகள், இந்த வைரஸ்களின் செல்களுடன் சேரும் விதத்தை ஆராய, கணிசமான உதவியாக உள்ளன. இவ்வாய்வு, எதிர்காலத்தில் உருவாகக்கூடிய புதிய தொற்றுக்களை தடுக்கும் முயற்சிக்கு முக்கிய அடித்தளமாக அமையும் என நிபுணர்கள் நம்புகின்றனர்.
Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.