இலங்கையில் தான் வழங்கும் நிதியியல் ஆதரவை அனைவரும் அடைவதற்கு வழிவகுப்பதற்கு தொடர்ச்சியாக உழைத்து வருகின்ற மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் அன்ட் ஃபைனான்ஸ் பிஎல்சி, தனது 80வது கிளையை சமீபத்தில் அழகிய நுவரெலியா நகரில் திறந்து வைத்துள்ளது. புகழ்பூத்த நுவரெலியா கிரான்ட் ஹோட்டலுடனான உறவு காரணமாக, இக்கிளையை திறந்து வைத்துள்ளமை மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்திற்கு மிக முக்கியமான ஒரு நிகழ்வாக மாறியுள்ளது. நுவரெலியா ஹோட்டல்கள் நிறுவனத்திற்கு சொந்தமான, அதனால் இயக்கப்பட்டு வருகின்ற இந்த பிரசித்தி பெற்ற ஹோட்டல், மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ்…
ஹௌதி இயக்கம் அமெரிக்காவிற்கு கடும் எச்சரிக்கை

ஈரானின் அணு நிலையங்களை தாக்கியதன் மூலம் அமெரிக்கா இந்த போரை முடிக்க முடியும் என நினைத்தால் அது பிழையான நம்பிக்கை என யேமனின் ஹௌதி இயக்கத்தின் அரசியல் பிரிவு உறுப்பினர் முகமட் அல்-ஃபராஹ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
டிரம்ப் விரைவில் தாக்குதல்களை முடித்து போரை முடிக்க விரும்புகிறார் என்பது தெளிவாக உள்ளது. ஆனால் ஒரு அணு தளத்தை அழிப்பது போரின் முடிவு இல்லை, அது ஒரு தொடக்கமே என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தாக்கு-ஓடு” எனப்படும் பழைய போர் முறைமை இப்போது உண்டாகாது என்றும், எதிராளிகளிடம் கடும் பதிலடி இருக்கும் என்றும் அல்-ஃபராஹ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு ஹௌதி இயக்கம், அமெரிக்கா ஈரானை இஸ்ரேலுடன் இணைந்து தாக்கினால், சிவப்பு கடலில் அமெரிக்க கப்பல்களை தாக்குவோம் என எச்சரிக்கை விடுத்தது.
ஈரான்-இஸ்ரேல் மோதல் ஏற்கனவே மத்திய கிழக்கு வட்டாரத்தில் பதற்றம் ஏற்படுத்தியுள்ள நிலையில், ஹௌதி இயக்கத்தின் இந்த எச்சரிக்கை, மண்டலத்திற்கு மேலும் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தும் என சர்வதேச ரீதியில் கவலை எழுந்துள்ளது.