Colombo, 13 August 2026: The Indian Cultural Association (ICA) today announced the launch of the third edition of the ICA International Marathon, scheduled to take place on 13 December 2026 at Galle Face Green, Colombo. The event is set to bring together runners, fitness communities, corporate teams, and international participants for a certified road-running experience…
இலங்கையில் புகையிலை வரிவிதிப்பின் பகுத்தறிவற்ற தன்மை
இலங்கையின் உத்தியோகபூர்வ சிகரெட் உற்பத்தியாளரான Ceylon Tobacco Company PLC – (CTC) இன் 2024 ஆம் ஆண்டு நிதி அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கை நிறுவன செயல்திறன் தரவுகளை மட்டுமே வழங்கவில்லை – அதிக வரி சுமையால் சுருங்கி வரும் உத்தியோகபூர்வ சிகரெட் தொழில்துறையிலிருந்து, அரசு எதிர்பார்க்கும் வருவாயை எதிர்காலத்திலும் பராமரிக்க முடியுமா என்பதைக் கேள்வி எழுப்புகிறது. இந்த கேள்வி எழுப்பப்படும் பின்னணியில், அரசின் மொத்த வருவாயில் 6% வரை உத்தியோகபூர்வ சிகரெட்டுகளுக்கு விதிக்கப்படும் வரிகளிலிருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
2024 மற்றும் 2025 ஆண்டுகளில் புகையிலை மற்றும் மதுபான வரி விகிதங்கள் நாட்டின் பணவீக்கத்தை விட 4% அதிகரித்துள்ளதாக அரச நிதி பொறுப்பாண்மைக் குழு அண்மையில் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு நிதி அறிக்கையின்படி, CTCஇன் 2025 ஆம் ஆண்டு முதல் காலாண்டில் நிகர இலாபம் 6.7 பில்லியன் ரூபா வரை வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த நிலைமை அரசுக்கு CTCஇல் இருந்து வசூலிக்கப்படும் வருவாயையும் கடுமையாக பாதித்துள்ளது. CTCஇன் நிகர வருவாய் வீழ்ச்சி குறித்து சமூகத்தில் விவாதம் இருந்தபோதிலும், 2025 ஆம் ஆண்டு முதல் காலாண்டில் குறிப்பிடத்தக்க வருவாயை அரசுக்கு வழங்கியுள்ளது. 2025 முதல் காலாண்டில் அரசின் வருவாயில் இந்த நிறுவனத்தின் பங்களிப்பு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 5% அதிகரித்து 34.1 பில்லியன் ரூபாவாக உள்ளது. இந்த தொகை அந்த ஆண்டு நிறுவனத்தின் நிகர இலாபத்தை விட ஐந்து மடங்கு அதிகமாகும்.
CTCஇன் 2024 ஆண்டு அறிக்கையின்படி, உள்நாட்டு சிகரெட் நுகர்வு அளவு 2023 உடன் ஒப்பிடும்போது 1.91 பில்லியன் வரை வீழ்ச்சியடைந்துள்ளது. இது 17% வீழ்ச்சியைக் குறிக்கிறது. அதே ஆண்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட சிகரெட்டுகளின் எண்ணிக்கை 1.2 பில்லியனாக அதிகரித்துள்ளது, இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 40% அதிகரிப்பாகும். இந்த நிலைமையில், உத்தியோகபூர்வ சிகரெட்டுகளுக்கான சந்தைத் தேவை குறைவதை தெளிவாகக் காணலாம். இது உத்தியோகபூர்வ சிகரெட் உற்பத்தியின் நீண்டகால நிலைத்தன்மை மற்றும் நிலைத்திறனை பாதிக்கும். மேலும், அரசுக்கான நம்பகமான வருவாய் ஆதாரம் படிப்படியாக குறைந்துவரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
சட்டவிரோத சிகரெட் விற்பனையால் எழும் சவால்கள் மற்றும் பீடி தொழில்துறையின் வளர்ச்சி, உத்தியோகபூர்வ சிகரெட் சந்தையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலைமைக்கு முக்கிய காரணம் பீடி விலை நிலைமையாகும். 2025 ஏப்ரல் மாதத்தில் பீடிக்கான வரி 2 ரூபாவிலிருந்து 3ரூபாவாக அதிகரிக்கப்பட்டது. இது ஒரு சாதகமான தொடக்கமாக இருந்தாலும், பீடி விற்பனையுடன் ஒப்பிடும்போது இந்த வரி இன்னும் அதிகமாக இருக்க வேண்டும் என்ற வாதத்திற்கு இடமில்லை. பீடி தொழில்துறையிலிருந்து வருவாய் ஈட்டுவதற்கு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் சரியான முன்னெடுப்பாகும். பீடி தொழில்துறை ஏற்றுக்கொள்ளப்பட்ட தரமான உற்பத்தி அல்ல என்பதோடு, கடுமையான சட்ட அமலாக்கம், அபராதம் விதித்தல் போன்ற முறைகளை செயல்படுத்தி இந்தத் தொழிலை ஒழுங்குபடுத்துவது அவசியமான ஒன்றாகும். தற்போதும் ஒரு பீடிக்கு 4 ரூபா அல்லது 5 ரூபா சில்லறை விற்பனை இலாபம் கடைக்காரர்களுக்கு கிடைப்பதால், செலுத்த வேண்டிய வரி தொகையை சரியாக அரசுக்கு செலுத்தாததால் பீடி குறைந்த விலையில் விற்கப்படுகிறது என்பதற்கான சான்றுகள் உள்ளன.
பீடி தொழில்துறையில் நிலவும் இந்த ஒழுங்கீனமான நிலைமையின் காரணமாக, இத்துறையிலிருந்து அரசுக்கு செலுத்த வேண்டிய மொத்த வரித் தொகை சரியாக வசூலிக்கப்படவில்லை என்பது தெளிவாகிறது. புகையிலை சார்ந்த இந்த உற்பத்திகள் வரி விதிப்பிலிருந்து தப்பிக்கும் போதும், அரசாங்கத்தின் சுகாதாரச் செலவுகளில் ஏற்படுத்தும் பாதிப்பு குறைவானதல்ல.
புகையிலை சார்ந்த பொருட்கள் சுகாதாரப் பிரச்சினைகளை உருவாக்குகின்றன என்பது அனைவரும் அறிந்த உண்மை. சரியான ஒழுங்குமுறை அல்லது தரநிலையின்றி உற்பத்தி செய்யப்படும் பீடிகளால் ஏற்படும் தீங்கு மிகவும் கடுமையானது. பீடி உற்பத்தியில் பெரும்பாலானவை நாட்டில் சிகரெட்களுக்கான சுகாதார ஒழுங்குமுறைகளை சரியாகப் பின்பற்றுவதில்லை. இந்த பொருட்களின் விலை மிகவும் குறைவாக இருப்பதால், நாட்டின் இளைஞர்கள் மத்தியில் பீடி பயன்பாடு மிகவும் பிரபலமாக உள்ளது. இந்த உற்பத்தித் துறையை முறைப்படுத்துவதன் மூலம் வருவாயைப் பெறுவது மட்டுமல்லாமல், இந்தத் தொழிலுக்கு திறந்த சந்தை வரம்புகளும் விதிக்கப்பட வேண்டும்.
சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரப்படும் சிகரெட்டுகளுக்கு எதிரான சட்டங்களை கடுமையாக செயல்படுத்த வேண்டும். விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் சோதனைகளை அதிகரித்து, இந்த பொருட்கள் நாட்டிற்குள் நுழைவதை முடிந்தவரை கட்டுப்படுத்த வேண்டும்.
அரசின் வருவாய் இலக்குகளை சரியான நேரத்தில் அடைய, சட்டவிரோத சிகரெட்டுகள் மற்றும் பீடிகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை உடனடியாக கடுமையாக்க வேண்டும். உத்தியோகபூர்வ சிகரெட்டுகளுக்கு தொடர்ச்சியாக வரி உயர்த்துவதால் ஏற்படும் விலை உயர்வு, நுகர்வோரை சட்டவிரோத சிகரெட்டுகளை வாங்கத் தூண்டுகிறது. மேலும் இது பீடி பயன்பாட்டை அதிகரிக்கும் ஒரு ஊக்கமாகவும் செயல்படுகிறது என்பதை கொள்கை வகுப்பாளர்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
எனவே, எதிர்காலத்தில் சிகரெட் தொழிற்துறைக்கான அரசின் அணுகுமுறை சமச்சீராக இருக்க வேண்டும் மற்றும் உத்தியோகபூர்வ சிகரெட் தொழிற்துறையின் நிலையான நிலைப்பாட்டை உறுதிப்படுத்த வேண்டும். சந்தையில் உள்ள பிற புகையிலை சார்ந்த பொருட்களுடன் போட்டியிடும் போது, அந்த பொருட்களுக்கு நியாயமான சந்தை போட்டியை உருவாக்குவதற்கான தேவையான ஒழுங்குமுறைகளை செயல்படுத்துவதும் இங்கு வலியுறுத்தப்பட வேண்டியதாகும்.
**mitolyn**
Mitolyn is a carefully developed, plant-based formula created to help support metabolic efficiency and encourage healthy, lasting weight management.
Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.
Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me. https://www.binance.com/register?ref=IXBIAFVY
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.
Your article helped me a lot, is there any more related content? Thanks!
Your article helped me a lot, is there any more related content? Thanks! https://www.binance.bh/futures/ref?code=GGYHGRE