Colombo, 13 August 2026: The Indian Cultural Association (ICA) today announced the launch of the third edition of the ICA International Marathon, scheduled to take place on 13 December 2026 at Galle Face Green, Colombo. The event is set to bring together runners, fitness communities, corporate teams, and international participants for a certified road-running experience…
பாரம்பரியம்மற்றும்நிலைத்தன்மையுடன்முன்னேறும் Dunsinane Estate
கடல் மட்டத்திலிருந்து உயரமான இடத்தில் அமைந்துள்ள இலங்கையின் பழையான தோட்டங்களில் ஒன்றான Dunsinane Estate ஒரு தனித்துவமான நிலையைப் பெற்றுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த எஸ்டேட் 1879ஆம் ஆண்டு போன்ற தொன்மையான காலத்திலிருந்து செயல்பட்டு வருகிறது. இந்த தோட்டத்தின் மொத்த பரப்பளவு 790 ஹெக்டேயராக இருந்தாலும், அதில் 494 ஹெக்டேயர் பரப்பளவில் தேயிலை செய்கை மேற்கொள்ளப்படுகிறது.
தற்போது, இந்த எஸ்டேட்டின் நிர்வாகம் Aitken Spence பெருந்தோட்ட குழுமத்தின் கீழ் உள்ள எல்பிட்டிய பெருந்தோட்டக் கம்பெனியால் நிர்வகிக்கப்படுகிறது. இந்த தோட்டத்தின் ஒரு பகுதியான கொத்மலை பெருநதோட்டப் பகுதி, உயிரியல் பல்வகைமை மற்றும் வளமான கலாச்சார பின்னணியைக் கொண்ட பூண்டுல் ஓயா பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. இப்பகுதி மேல் நாட்டு வனக் காப்பகங்கள் மற்றும் இலங்கையின் பாரம்பரிய கிராமங்களால் சூழப்பட்டுள்ளது. இன்றும், இந்தப் பகுதி தனது பாரம்பரியங்களையும் தனித்துவமான அடையாளங்களையும் பேணிக்கொண்டே, தனது செயல்பாடுகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.
தனது நீண்டகால செயல்பாட்டில், Dunsinane Estate மேல் நாட்டு CTC தேயிலை உற்பத்தியில் (Crush, Tear, Curl – நொறுக்குதல், கிழித்தல், சுருட்டுதல்) ஒரு முன்னோடியாக செயல்பட்டு வருகிறது. 1989ஆம் ஆண்டில் ஒரு வணிக முக்கியத்துவம் வாய்ந்த திருப்புமுனையை எட்டிய இத்தோட்டம், பாரம்பரிய கருந்தேயிலை உற்பத்தியிலிருந்து மேல் நாட்டு CTC தேயிலை உற்பத்தியை நோக்கி மாறியது. அதன் பின்னர், இத்தோட்டம் CTC தேயிலை உற்பத்தியில் ஒரு சிறப்பான பெயரை ஈட்டியுள்ளது. 2016ஆம் ஆண்டு முதல் இன்று வரை, CTC உற்பத்தி வகைப்பாட்டில் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.
1920ஆம் ஆண்டில், கடல் மட்டத்திலிருந்து 4,600 அடிகள் உயரத்தில் கட்டப்பட்ட இந்த தேயிலை தொழிற்சாலை, இன்று தினசரி 27,000 கிலோ பச்சை தேயிலை கொழுந்துகளை செயலாக்குகிறது. இது ஆண்டுக்கு 1.3 மில்லியன் கிலோ தேயிலை உற்பத்தி திறனைக் கொண்டுள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு தேயிலை தயாரிப்புளும், ISO உள்ளிட்ட சர்வதேச தரநிர்ணயங்களுக்கு (Food Safety & Quality Standards) இணங்க உற்பத்தி செய்யப்படுகிறது.
சமூகத்தை ஊக்கப்படுத்தி, நிலையான வளர்ச்சிப் பாதையில் முன்னேறுகிறது
தேயிலை செய்கை நடவடிக்கைகளுக்கு அப்பால், Dunsinane Estate அதன் சுற்றியுள்ள சமூகத்துடன் நெருக்கமாக இணைந்து செயல்படுகிறது. இத்தோட்டத்தின் 5 முக்கிய வலயங்களான மேல் மண்டலம், மத்திய மண்டலம், தேயிலை தொழிற்சாலை, வடக்கு மண்டலம் மற்றும் கீழ் மண்டலம் ஆகிய பகுதிகளில் பல வேலைவாய்ப்பு வசதிகளை உருவாக்கியுள்ளது. மேலும், இத்தோட்டம் தனது செயல்பாடுகளுக்குத் தேவையான வெளிப்புற சேவைகளை (outsourcing) வழங்குவதன் மூலம் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் நேரடியாக பொருளாதார நலன்களைப் பெறுகின்றனர்.
இந்த எஸ்டேட் அதன் ஊழியர்களின் நலனுக்காக தீவிரமாக பங்களிக்கிறது மற்றும் இதற்காக பல சமூக மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. கல்வித் திட்டத்தின் மூலம், பாடசாலை அப்பியாசப் புத்தகங்கள் வழங்கப்படுகின்றன, பாடசாலை சீருடைகள் வழங்கப்படுகின்றன, ஒன்லைன் கல்விக்காக மொபைல் ஃபோன்கள் மற்றும் பிற தொடர்பு சாதனங்கள் வழங்கப்படுகின்றன, சுகாதார மருத்துவமனைகள் வழங்கப்படுகின்றன, இரத்த தான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன, மேலும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த ஊட்டச்சத்து திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
திறன் பயிற்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்துதல், பொருளாதார பங்களிப்புகள் மற்றும் தலைமைத்துவத்திற்கான ஊக்கம் உள்ளிட்ட இந்தத் திட்டங்களின் முக்கிய கவனம் பெண்களை மேம்படுத்துவதாகும். குழந்தைகளின் நலனில் அதிக முக்கியத்துவம் அளிக்கும் Dunsinane Estate, தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்துடன் இணைந்து பல திட்டங்களைத் தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சமூக நலத்திட்டங்களில் சிறப்புத் திட்டமான சமூக சமையலறை திட்டம், தோட்டத் தொழிலாளர் குடும்பங்களின் ஊட்டச்சத்தை மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட ஒரு நடைமுறைத் திட்டமாகும். ஒவ்வொரு பெருந்தோட்ட வலயத்திலும் ஷிப்ட் அடிப்படையில் செயல்படும் இந்த திட்டம், தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு நலன்புரி விலையில் புதிதாக தயாரிக்கப்பட்ட உணவை வழங்குகிறது. இந்த திட்டத்தை உள்ளூர் தன்னார்வலர்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் ஆதரிக்கின்றனர்.
உட்கட்டமைப்பைப் பொறுத்தவரை, Dunsinane Estate, சுத்தமான குடிநீர், மேம்படுத்தப்பட்ட வீதி அமைப்புகள் போன்றவற்றை வழங்குவதற்குத் தேவையான வசதிகளை வழங்கியுள்ளது. EWHCS விருது வழங்கும் நிகழ்வில், 2024 உட்பட 2 ஆண்டுகளுக்கு நுவரெலியா பிராந்தியத்தில் உள்ள எஸ்டேட் வீடுகளில் சிறந்த எஸ்டேட் வீட்டுவசதி மற்றும் சமூக மேம்பாட்டிற்கான விருதையும் எஸ்டேட் தொழிலாளர் வீட்டுவசதி கூட்டுறவு சங்கம் வென்றுள்ளது.
Dunsinane Estateஇன் அன்றாட நடவடிக்கைகளில் நிலைத்தன்மைக்கான அர்ப்பணிப்பு, அது அடைந்துள்ள தரநிலைகளாலும் நிரூபிக்கப்படுகிறது. இந்த எஸ்டேட் ISO 22000:2005 உணவு பாதுகாப்பு சான்றிதழ், 2009 உணவு பாதுகாப்பு சான்றிதழ் மற்றும் 2014இல் மழைக்காடு கூட்டாண்மை சான்றிதழ் ஆகியவற்றைப் பெற்றுள்ளது. இந்த தரநிலைகளை பூர்த்தி செய்யும் தேயிலை தொழிற்சாலையில் உள்ள அனைத்து செயல்பாடுகளும் ஆற்றல் திறன் கொண்டவை, மேலும் களப்பணிக்கு இயந்திரங்களைப் பயன்படுத்துதல், சுற்றுச்சூழலுக்கு உகந்த மண் பாதுகாப்பு திட்டங்கள் மற்றும் நீர் நிர்வகிப்பு திட்டங்கள் ஆகியவை அடங்கும். தேயிலை செய்கையில் இலை உரங்களைப் பயன்படுத்துதல், மேம்படுத்தப்பட்ட கத்தரித்தல் முறைகள் மற்றும் இயந்திரமயமாக்கப்பட்ட தேயிலை கொழுந்து அறுவடை மூலம் Dunsinane Estate நிலைத்தன்மை மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிக்க முடிந்தது.
நீர் மின்சாரம் மூலம் பசுமை ஆற்றல்
Dunsinane Estateஐ சொந்தமாகக் கொண்ட எல்பிட்டிய பிளாண்டேஷன்ஸ், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் முன்னணிப் பங்கை வகிக்கிறது. 2006ஆம் ஆண்டில், எல்பிட்டிய பிளாண்டேஷன்ஸ் 3 மெகாவொட் Dunsinane சிறிய நீர்மின் திட்டத்தில் 5% பங்குகளை வாங்க நடவடிக்கை எடுத்தது. சுத்தமான மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களை நோக்கி நகர்வதற்கான ஆரம்ப படியாக இதைக் காணலாம்.
அதைத் தொடர்ந்து, 2008 ஆம் ஆண்டில், எல்பிட்டிய பிளாண்டேஷன்ஸ் நிறுவனம் ஷீன் சிறிய நீர்மின் திட்டத்தைத் தொடங்கி, தேசிய மின் கட்டமைப்பில் மேலும் 560 கிலோவொட்களைச் சேர்த்தது. 2013 ஆம் ஆண்டில், Dunsinane கோட்டேஜ் சிறிய நீர்மின் திட்டம் தேசிய மின் கட்டமைப்பில் மேலும் 900 கிலோவொட்களைச் சேர்த்தது, மேலும் 2013 ஆம் ஆண்டின் இறுதியில், எல்பிட்டிய பிளாண்டேஷன்ஸ் நிறுவனம் அதன் எஸ்டேட்களில் இருந்து தேசிய மின் கட்டமைப்பிற்கு 1.6 மெகாவொட் நீர்மின் திறனை பங்களித்தது.
இந்த முயற்சிகள் அனைத்தும் எல்பிட்டிய பிளாண்டேஷன் குழுமம் தனது வணிகத்தை நிலையான முறையில் நடத்துவதற்கான உறுதிப்பாட்டையும், நிறுவனத்தின் நீண்டகால தொலைநோக்குப் பார்வையையும் நிரூபிக்கின்றன. முன்னோக்கிய தூரநோக்குப் பார்வை கொண்ட Dunsinane Estateஇன் எதிர்காலத் திட்டங்கள் முற்றிலும் தனிநபர்கள், சுற்றுச்சூழல் மற்றும் எதிர்கால சந்ததியினருக்கான ஒரு தொலைநோக்குப் பார்வையால் இயக்கப்படுகின்றன. சமூகத்தை மேம்படுத்துவதன் மூலமும், உலகத் தரம் வாய்ந்த தேயிலை உற்பத்தி செய்வதன் மூலமும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் தொடர்ந்து முதலீடு செய்வதன் மூலமும், பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் அதே வேளையில் புத்தாக்கங்களை நோக்கி நடவடிக்கை எடுப்பதற்கான நடைமுறை எடுத்துக்காட்டாக Dunsinane Estate உள்ளது. இந்த உதாரணம் இந்த நாட்டில் நெறிமுறை மற்றும் நிலையான விவசாயத்தில் மற்றொரு மதிப்புமிக்க அத்தியாயத்தைக் குறிக்கும்.
**breathe**
breathe is a plant-powered tincture crafted to promote lung performance and enhance your breathing quality.
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.
**mitolyn**
Mitolyn is a carefully developed, plant-based formula created to help support metabolic efficiency and encourage healthy, lasting weight management.
Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good. https://accounts.binance.com/de/register?ref=W0BCQMF1