உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் நடவடிக்கை நிறைவடைந்த நாளிலிருந்து 35 அல்லது 49 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேற்சை குழுக்கள் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு குறைந்தபட்சம் 35 நாட்கள் வழங்கப்படும். இதற்கமைய வேட்புமனுக்கள் தாக்கல்…
குற்றச்செயலை தடுப்பதற்கு பொலிஸாரால் தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

நீங்கள் அறிந்தவர்கள் அல்லது அயலவர்கள் மற்றும் சமூகத்தில் இடம்பெறும் குற்றச் செயல்கள் தொடர்பில் முறையிட பொலிஸாரால் தொலைபேசி இலக்கம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, 119 அல்லது 1997 என்ற அவசர தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ள முடியும் என பொலிஸார் பொதுமக்களிடம் தெரிவித்துள்ளனர்.
இந்த அவசர தொலைபேசி இலக்கங்களானது 24 மணிநேரமும் இயங்கும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.