நேற்றைய தினத்தில் மாத்திரம் வாகன விபத்துக்களில் ஆறு பேர் உயிரிழப்பு!

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று திங்கட்கிழமை (15) இடம்பெற்ற வாகன விபத்துக்களில் ஆறுபேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கணேமுல்ல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கணேமுல்ல – கடவத்த வீதியில் கொஸ்ஸின்ன பகுதியில் நேற்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கணேமுல்லவிலிருந்து கடவத்தை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டுவிலகி எதிர்த்திசையில் பயணித்த காருடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலத்த காயமடைந்து ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் ராகமை – படுவத்த பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

One thought on “நேற்றைய தினத்தில் மாத்திரம் வாகன விபத்துக்களில் ஆறு பேர் உயிரிழப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *