அண்டை வீட்டாருடன் தகராறு – நபரொருவர் கொலை

மாரவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டங்கன்னாவ பகுதியில் 22-12-2025 ,38 வயது நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

உயிரிழந்தவர் டங்கன்னாவ பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. 

இக் கொலை தொடர்பாக 43 வயதான சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பில் மாரவில பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

One thought on “அண்டை வீட்டாருடன் தகராறு – நபரொருவர் கொலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *