ஆளும் தரப்பினர் மீதான குற்றச்சாட்டுக்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன ; பொதுஜன பெரமுன குற்றச்சாட்டு

அரசாங்கத்தின் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை பொலிஸார் கிடப்பில் போட்டுள்ளார்கள். முறைப்பாடளிப்பவர்களை குற்றவாளிகளாக்கும் போக்கு தற்போது காணப்படுகிறது. பொலிஸ்மா அதிபர் தேசிய மக்கள் சக்தியின்  பொலிஸ்மா அதிபராக செயற்படுகிறாரென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகப் பேச்சாளர் சஞ்ஜீவ எதிரிமான்ன தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தனியார் தொலைக்காட்சி தொடர்பில் அரசாங்கம் வெறுப்புடன் செயற்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.சகல ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

சிறந்த அரசியல் கலாசாரத்தையும், நிர்வாக கட்டமைப்பையும் உருவாக்குவதாக குறிப்பிட்டுக் கொண்டே தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தது. அரசாங்கம் ஆட்சி;க்கு வந்து ஒருவருட காலத்தில் ஆளும் தரப்பின் ஊழல் மோசடிகள் வெளியாகின. ஒருசிலர் இல்லாத கலாநிதி பட்டங்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டார்கள்.

2 thoughts on “ஆளும் தரப்பினர் மீதான குற்றச்சாட்டுக்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன ; பொதுஜன பெரமுன குற்றச்சாட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *