வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி

இலங்கை பல்கலைக்கழகங்களை உலகளாவிய தரப்படுத்தல் குறிகாட்டிகளுக்கமைய தரமுயர்த்துவதற்கும், சர்வதேசமயப்படுத்துவதற்கும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் உயர்கல்வி ஒத்துழைப்புக்களை ஏற்படுத்திக் கொள்வது அவசியமானதென அடையாளங்காணப்பட்டுள்ளது.

அதற்கமைய, இலங்கை பல்கலைக்கழகங்களுக்கும்; வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கும் இடையில் ஐந்தாண்டு காலப்பகுதிக்கு கீழ்வரும் வகையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்காக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது 

One thought on “வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *