நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
கடல் சீற்றம் அதிகரிப்பு – திருகோணமலை
திருகோணமலை கடற்பரப்பில் கடல் அலையின் சீற்றம் அதிகரித்து வருவதால் மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் தமது படகுகளை கரையோரத்தில் இருந்து வீதிக்கு அப்பறப்படுத்தி வருகின்றார்கள்.
திருகோணமலை வீரநகர் உள்ளிட்ட கரையோரப்பகுதியில் உள்ள மீனவர்கள் கடல் சீற்றம் காரணமாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வதை தவிர்த்துள்ளதோடு தமது படகுகளை பாதுகாப்பு கருதி வீதியோரங்களுக்கு அப்புறப்படுத்தியும் வருகின்றார்கள்.
தமது படகுகளை பாதுகாப்பா வைத்திருப்பதற்கு தமக்கு இடம் இல்லை எனவும் இதனால் வீதிக்கு கொண்டு வரவேண்டி இருப்பதாகவும், எதிர்வரும் 10ஆம் திகதிக்குப் பின்னர் கடல் அலையைப் பார்த்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கின்றார்கள்.
இதேவேளை, வீரநகர் பகுதியில் கடலரிப்பு காரணமாக இதுவரை 4 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் மீனவ சங்க கட்டிடமும் அபாய நிலையில் காணப்படுகின்றது.
இது தொடர்பாக அண்மையில் கள விஜயம் மேற்கொண்டிருந்த பிரதியமைச்சர் அருண், கரையோர பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் குறித்த பகுதியில் கடலரிப்பை தடுப்பதற்காக கற்களை போடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து சென்றிருந்தனர்.






Bet88vietnam, alright! Been checking them out. Seems like a decent place to throw down some bets. Gotta say, interface ain’t bad. Might give it a go. Check them out yourself: bet88vietnam