50 பேருடன் பயணித்த நேபாளம் விமானம் விபத்து!

காத்மாண்டுவில் இருந்து சுமார் 50 பேருடன் பயணித்த நேபாளம் விமானம் ஒன்று நேபாளத்தின் பத்ராபூர் விமான நிலையத்தில் வைத்து வெள்ளிக்கிழமை (02) இரவு 9 மணியளவில் தரையிறங்கியபோது ஓடுபாதையைத் தாண்டிச் சென்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

நேபாளம் விமானம் வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் பத்ராபூர் விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது, விமானம் ஓடுபாதையில் இருந்து சுமார் 200 மீட்டர் தூரம் வழுக்கிச் சென்று, அங்கிருந்த ஒரு சிறிய ஓடைக்கு அருகில் நின்றதாகத் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தின் பேச்சாளர் ரின்ஜி ஷெர்பா தெரிவித்தார்

One thought on “50 பேருடன் பயணித்த நேபாளம் விமானம் விபத்து!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *