கொழும்பு, செவ்வாய், 25 ஆகஸ்ட் 2026: இலங்கையின் பெருந்தோட்டத் துறையில் பிளாஸ்டிக் கழிவு முகாமைத்துவத்தை மறுவரையறை செய்யும் வகையில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், கழிவு மறுசுழற்சி, சமூக வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்த ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தலவாக்கலை டீ எஸ்டேட்ஸ் பிஎல்சி நிறுவனத்திற்குச் சொந்தமான ரதெல்லையில் உள்ள சமர்செட் தோட்டத்தில் சமர்செட் சுற்றுச்சூழல் பொருள் சேகரிப்பு மற்றும் பதப்படுத்தும் நிலையம் (MCPC) நிறுவப்பட்டுள்ளது. இலங்கையில் ‘முறசாரா கழிவு முகாமைத்துவத்தில் பெண்கள் மற்றும் இளைஞர்களின்…
நுரைச்சோலையின் மின் பிறப்பாக்கி ஒன்று வழமைக்கு திரும்பியது!
பராமரிப்பு பணிகள் காரணமாக தற்காலிகமாக செயலிழக்கச் செய்யப்பட்டிருந்த நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மின் பிறப்பாக்கி ஒன்று மீண்டும் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இதன்மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் குறித்து, தற்போது கணினியில் சேர்க்கப்படவில்லை எனவும், எதிர்வரும் சில நாட்களில் அது கணினியில் சேர்க்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் 03 மின் பிறப்பாக்கிகள் மூலம் 900 மெகாவோட் மின்சாரத்தை தேசிய மின்சார கட்டமைப்புக்கு வழங்கிவந்த நிலையில், தற்போது ஒரு மின் பிறப்பாக்கி மட்டுமே தேசிய மின்சார கட்டமைப்புக்கு மின்சாரத்தை வழங்குகிறது.
எனினும், மற்றொரு மின் பிறப்பாக்கி இன்னும் செயலிழந்த நிலையிலேயே உள்ளதாகவும், அதனை இயல்பு நிலைக்கு கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.