7 News Pulse

விலங்கு கணக்கெடுப்பை குறைந்த செலவில் நடத்த திட்டம்.

கால்நடை கணக்கெடுப்பு தொடர்பாக வெளியிடப்பட்ட செலவின அறிக்கைகள் குறித்து, வேளாண்மை, கால்நடை, நிலங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சகத்தின் செயலாளர் டி. பி. விக்கிரமசிங்க நேற்று (மார்ச் 10) ஒரு தெளிவுபடுத்தலை வெளியிட்டார். இந்தப் பணி மிகக் குறைந்த செலவில் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், சேவைகளை வழங்கும் அதிகாரிகள் தன்னார்வத் தொண்டு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் மேலும், விவசாயத் துறையில் விலங்கு சேதம் குறித்த தகவல்கள் நீண்ட காலமாகப் பதிவாகியிருந்தாலும், இன்றுவரை இந்தப் பிரச்சினை குறித்த துல்லியமான மதிப்பீடு இல்லாததால், இந்தக்…

Read More

கரிம உற்பத்தியை நெறிப்படுத்துவதற்கான திட்டம்

சந்தையில் விற்பனைக்கு வழங்கப்படும் கரிமப் பொருட்களை ஒழுங்குபடுத்துவதற்காக சர்வதேச வர்த்தக ஆணையமும் நுகர்வோர் விவகார ஆணையமும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளன. இது சர்வதேச வர்த்தக ஆணையத்திற்கும் நுகர்வோர் விவகார ஆணையத்திற்கும் இடையிலான கலந்துரையாடலின் போது நடந்தது. சர்வதேச சந்தைக்கு ஏற்றவாறு தற்போதுள்ள சட்டங்களை புதுப்பிப்பதே முக்கிய நோக்கம் என்று அமைப்பின் பிரதிநிதிகள் தெரிவித்தனர். அதே நேரத்தில், நுகர்வோரை தவறாக வழிநடத்தாமல், தேவையான தரமான பொருட்கள் சந்தையில் நியாயமான விலையில் விற்கப்படுவதை உறுதி செய்வதற்காக விழிப்புணர்வை ஏற்படுத்துதல்…

Read More

இழந்த வளர்ச்சி வாய்ப்புகளின் மதிப்பை இலங்கை கணக்கிடுகிறது

இலங்கையிலிருந்து முதலீடுகளின் வெளியேற்றம் அபிவிருத்தி சிக்கல்களை ஏற்படுத்துகிறது கிஷோர் ரெட்டி இலங்கையின் பொருளாதார வளர்ச்சி, தொடர்ந்து பல ஆண்டுகளாக, பல முக்கிய உட்கட்டமைப்பு மற்றும் முதலீட்டுத் திட்டங்களின் பின்வாங்கலால் குறிப்பிடத்தக்க பின்னடைவுகளைச் சந்தித்துள்ளது. அண்மையில் அதானி கிரீன் நிறுவனம் USD 1 பில்லியன் மதிப்புள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டத்திலிருந்து வெளியேறியமை இதனை மேலும் கேள்விக்குறியாக்குகிறது. ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (JICA) நிதியுதவிடனான அளித்த கொழும்பு இலகு ரயில் போக்குவரத்து திட்டம் ரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்க தாக்கத்தை…

Read More

நீலங்களுக்கு இடையிலான 146ஆவது சமருடன் கைகோர்த்த Domino’s Sri Lanka!

இலங்கை, கொழும்பு, 2025 மார்ச் 03: உலகின் மிகப்பெரிய பீட்சா சங்கிலியும், தரம் மற்றும் புத்தாக்கங்களில் முன்னணியில் உள்ள நிறுவனமுமான Domino’s Sri Lanka (டோமினோஸ் ஸ்ரீ லங்கா) நீலங்களுக்கிடையிலான 146ஆவது (146th Battle of the Blues) கிரிக்கெட் சமருக்கான உத்திகயோகபூர்வ அனுசரணையாளராக இணைவதன் மூலம் அதன் பெருமையை நிலை நிறுத்துகிறது. உலகின் மிகப் பழமையான மற்றும் மிகவும் மதிப்புமிக்க பாடசாலைப் போட்டிகளில்  ஒன்றான இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க கிரிக்கெட் தொடர், கல்கிஸ்ஸை புனித…

Read More

Academy with RBL USA and Deepal to develop Leaders at Hemas.

Hemas Holdings has launched its groundbreaking Leadership Academy, partnering with RBL USA and renowned consultant Deepal Sooriyaarachchi to cultivate a new generation of world-class leaders. The academy, built on RBL’s acclaimed ‘Leadership Code’ framework, aims to deliver a transformative leadership experience across the Hemas Group. In addition, to the Leadership Code based competencies the participants…

Read More

பிரபல நடிகை “மாலினி பொன்சேகா” வைத்தியசாலையில் அனுமதி.

இலங்கை சிங்கள சினிமாவின் நடிப்பரசி என மகுடம் சூட்டப்பட்ட மாலினி பொன்சேகாவின் உடல்நிலை மோசமடைந்து நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில காலமாக அவர் புற்று நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார் எனவும் அதற்க்கான உரிய சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள கவனயீனமாக இருந்ததாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையிலேயே நோயின் வீரியம் அதிகரித்தமையினால் தற்பொழுது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Read More

மாணவர்களுக்கு 2028-ல் அறிமுகமாகவுள்ள புதிய பரீட்சை.

மாணவர்களின் மன உளைச்சலை குறைக்கும் விதமான பரீட்சை ஒன்றை 2028ம் ஆண்டு நடத்த உள்ளதாக நாடளுமன்றத்தின் இன்றைய(மார்ச் 10) அமர்வின் போது பிரதமர் மற்றும் கல்வி அமைச்சரான ஹரிணி அமரசூரிய மாணவர்களின் மன உளைச்சலை குறைக்கும் விதத்திலான பரீட்சை ஒன்றை 2028ல் அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்ததுடன் இதன்போது தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானம் தொடர்பிலும் தெளிவூட்டினார், புலமைப்பரிசில் பரீட்சை மூலம் ஏற்படும் குழந்தைகளின் மன அழுத்தத்தை குறைக்க அரசாங்கம் நிபுணர் குழுவொன்றை நியமிக்கும் எனவும்…

Read More

இலங்கையில் சூடுபிடித்த பராசக்தி(தீ)

இலங்கையில் நடைபெற்று வரும் பராசக்தி திரைப்படத்தின் காட்சிகளை ரசிகர்கள் படப்பிடிப்புத்தளத்தில் இருந்து வெளியிட்டுள்ளார்கள். காணொளி இங்கு பதிவிடப்பட்டுள்ளது

Read More

வவுணதீவில் வீட்டில் உறங்கியநிலையில் குழந்தை இறப்பு.

மட்டக்களப்பு- நாவற்காடு கிராமத்தில் வீட்டில் தாயுடன் உறக்கத்திலிருந்த குழந்தை இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிறந்து மூன்று மாதமான குழந்தை நேற்று (மார்ச் 9) இரவு தாயாரிடம் பால் அருந்திவிட்டு தாவுடனே உறங்கியுள்ளது. இன்று (மார்ச் 10) அதிகாலை குழந்தைக்கு பால் கொடுப்பதற்காக எழுப்பிய போது குழந்தை மூச்சு சுவாசம் இல்லாமல் இருந்துள்ளது. உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது, குழந்தை முன்னரே இறந்து விட்டதாக வைத்தியர் தெரிவித்துள்ளார். வவுணதீவு பொலிஸாரின் வேண்டுகோளுக்கு அமைய…

Read More

அநாகரிகமாக செயற்பட்ட யூடியூப்பர் உள்ளடங்கலாக நால்வருக்கு 14 நாட்களுக்கு விளக்கமறியல்.

அண்மையில் யூடியூப்பர் ஒருத்தர் உதவி செய்வதாக கூறி அநாகரிகமாக நடந்துகொண்ட காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி மக்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து குறிப்பிட்ட யூடியூப்பர் உட்பட நால்வர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவர்கள் வெளியிட்ட காட்சி சர்ச்சைக்குள்ளானதை தொடர்ந்து அந்த குழு மீண்டும் அந்த குறிப்பிட்ட வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 9) சென்றவேளை ஊர் இளைஞர்கள் அவர்களை மடக்கி பிடித்து இளவாலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இந்நிலையிலேயே…

Read More