கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் டிட்வா சூறாவளியால் பெரும் சொத்து சேதம் ஏற்பட்டது, அதனனால் தனது ஊழியர்கள் தங்கள் வீடுகளை புதுப்பித்துக் கொள்வதற்கு HNB FINANCE PLC நிதி நன்கொடைகளை வழங்கியுள்ளது. டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட HNB FINANCE ஊழியர்களுக்கு இரண்டு கட்டங்களாக நிவாரணம் வழங்கப்பட்டது, மற்றும் அவசர உதவி உணவு உட்பட 8 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டது. பதுளை, கண்டி, நுவரெலியா, நாவலப்பிட்டி, கடுவலை மற்றும் வலபனை ஆகிய பகுதிகளில் முழுமையாக அல்லது பகுதியளவில் சேதமடைந்த…
சிறுவர் இல்லங்களிலுள்ள சிறுவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்க நடவடிக்கை
இலங்கையிலுள்ள அரச மற்றும் தனியார் நன்னடத்தை இல்லங்களில் பராமரிக்கப்பட்டு வரும் 16 வயதுக்குட்பட்ட சுமார் 3,000 சிறுவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ் இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுத்தப்பட்ட அல்லது பாலியல் வன்முறைகளுக்கு உள்ளான நிலையில் நீதிமன்ற உத்தரவின் பேரில் இல்லங்களில் ஒப்படைக்கப்பட்ட இச்சிறுவர்களுக்கு, முறையான அடையாள ஆவணங்கள் இல்லாததால் அவர்களைப் பாடசாலைகளில் இணைப்பதிலும் எதிர்கால வேலைவாய்ப்புகளைப் பெறுவதிலும் பாரிய சிக்கல்கள் எழுந்துள்ளன….

