பயணப்பொதியில் மறைத்து வைத்துக் கொண்டுவரப்பட்ட தோட்டாக்களுடன், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த 30 வயதுடைவரே கைதாகியுள்ளார். குறித்த நபர் குவைத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குவைத்தில் இருந்து கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்துக்கு வந்து, சென்னை நோக்கிப் பயணிக்கவிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டதாக விமான நிலைய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வெளியானது முதலாவது உத்தியோகபூர்வ தேர்தல் முடிவு…
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அம்பாந்தோட்டை – தங்காலை நகர சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இதன்படி, கட்சிகள் பெற்றுக்கொண்டுள்ள வாக்குகள் தேசிய மக்கள் சக்தி 2260 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி 1397 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது. பொதுஜன பெரமுன 795 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி 265 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது. சர்வஜன அதிகார கட்சி 177 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.