7 News Pulse

இலங்கையின் சுகாதார பயணத்தில் துணிச்சலான புதிய அத்தியாயத்தைக் குறிக்கும் வகையில் புதிய வர்த்தக இலச்சினையை வெளியிட்ட Lina Manufacturing

Sunshine Holdings PLCஇன் மருந்து உற்பத்தி பிரிவான Lina Manufacturing Limited, தனது புதிய வர்த்தக இலச்சினையை வெளியிட்டுள்ளது – ஒரு சிறந்த வர்த்தக இலச்சினையானது, நிறுவனத்தின் வளர்ச்சி, தூரநோக்குப் பார்வை மற்றும் மதிப்பிடத்தக்க, தரமான சுகாதார தீர்வுகளை வழங்கும் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. Linaவின் வர்த்தக இலச்சினைப் பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லைக் குறிக்கும் இந்த புதிய இலச்சினை, நிறுவனத்தின் பிரதான நோக்கத்துடன் இணைந்த ஒரு நவீன அடையாளத்தைக் கொண்டு ஒரு புதிய ஆரம்பத்தை சின்னமாகக் கொண்டுள்ளது….

Read More

விஜய் தொலைக்காட்சி தொகுப்பாளினி பிரியங்காவிற்கு திருமணம் முடிந்தாச்சு.

விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை மிக கச்சிதமாக தொகுத்துவழங்கும் திறமையான தொகுப்பாளினியும், எப்போதும் துரு துரு என்றும் உறவு , நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பவருமான பிரியங்கா தேஷ்பாண்டேக்கு கல்யாணம். வாழ்க்கையில் உண்மையான அன்புக்காக ஏங்கும் நபர் நான் என்று அடிக்கடி சொல்லுவதை நேர்காணலில் பார்த்திருக்கிறோம். இப்போதும் அவரின் அன்பை பெற்று அவர் ஏற்கும் அன்பைக்கொடுக்க மாப்பிள்ளை அமைந்தாச்சு. லண்டனில் வசித்துவரும் இலங்கை தமிழரான வசி என்பவரை காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் இறையருளோடு திருமணம் இன்று(ஏப்ரல் 16)…

Read More

தேர்தல் சட்டங்களை 164 முறையாடுகள் பதிவு

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் மார்ச் 03ம் திகதி முதல் ஏப்ரல் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 164 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 130 முறைப்பாடுகளும், தேர்தலுடன் தொடர்புடைய ஏனைய குற்றங்கள் தொடர்பில் 34 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன. இந்நிலையில், தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 16 வேட்பாளர்களும் 57 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Read More

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்கவேண்டும் – வஜிர அபேவர்தன

தற்போதைய அரசாங்கம் அரச ஊழியர்களின் சம்பளத்தை 50 ஆயிரம் ரூபாவாக அதிகரித்திருக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ள சம்பள அதிகரிப்பினால் எந்த பிரயோசனமும் இல்லை. ஏனெனில் 77 வருடங்களாக நாட்டில் தேங்காய் ஒன்றின் விலை 80 ரூபா முதல் 100 ரூபா வரை இருந்தது. அதனால் மக்களுக்கு வாழ்வது மிகவும் கஷ்டமான நிலை…

Read More

மின்சார கட்டண குறைப்பு சரியா? தவறா?

செலவுகள் குறையாமல் மின்சார கட்டணங்களை மேலும் குறைப்பது இலங்கை மின்சாரசபையின் நிதி செயல்திறனை கணிசமாக பாதிக்கக்கூடும் என இலங்கை மத்திய வங்கியின் வருடாந்த பொருளாதார விமர்சன அறிக்கையின் படி தெரியவந்துள்ளது. 2024 ஜனவரி மாதத்தில் மின்சார கட்டணங்கள் 20% இனால் குறைக்கப்பட்டு கட்டண திருத்தம் ஒன்று செய்யப்பட்டது. இருப்பினும், இந்த திருத்தம் உண்மையான செலவுகளை எவ்வளவு பிரதிபலிக்கிறது என்பதில் இன்னும் தெளிவின்மை உள்ளது என்று அறிக்கை குறிப்பிடுகிறது. 2024 இல் மின்சார கட்டணங்கள் இரு முறைகள் திருத்தப்பட்டுள்ளன….

Read More

ஹெலிக்கொப்டர் விபத்து ஒரேகுடும்பத்தை சேர்ந்த 5 உற்பட 6பேர் மரணம்.

அமெரிக்காவின் நியுயோர்க்கின் ஹட்சன் ஆற்றுப்பகுதியில் ஹெலிக்கொப்டர் விழுந்து நொருங்கியதில் அதில் பயணம் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சிறுவர்கள் உட்பட ஆறுபேர் உயிரிழந்துள்ளனர். ஸ்பெயினை சேர்ந்த சுற்றுலாப்பயணிகளே இந்த விபத்தில் சிக்குண்டுள்ளனர். ஸ்பெயினை சேர்ந்த ஐவர் உட்பட ஆறு பேர் பயணித்த ஹெலிக்கொப்டர் தலைகீழாக ஆற்றிற்குள் விழுவதை காண்பிக்கும் படங்கள் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. ஹெலிக்கொப்டர் விழுந்து நொருங்கிய தகவல் கிடைத்ததும் உடனடியாக மீட்பு படகுகளை அனுப்பியதாக தீயணைப்பு பிரிவின் ஆணையாளர் தெரிவித்துள்ளார். நீச்சல்…

Read More

பண்டிகை காலத்தில் போக்குவரத்து சேவைகள் தொடர்பில் தகவல் அறிய அழையுங்கள்.

பண்டிகை காலத்தில் போக்குவரத்து சேவைகள் தொடர்பில் தகவல் அறிந்துகொள்ளுவதற்கு அவசர தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த அவசர தொலைபேசி இலக்கங்கள் 24 மணிநேரமும் சேவையில் இருக்கும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, போக்குவரத்து சேவைகள் தொடர்பில் தகவல் அறிந்துகொள்ளுவதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் 1955 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்கு அல்லது 0712 595 555 என்ற வாட்ஸ்அப் இலக்கத்துக்கு தொடர்பு கொள்ள முடியும். மேலும், பஸ்…

Read More

24 மணி நேரமும் சேவையில் இருக்கும் அவசர தொலைபேசி இலக்கம்!

கடல்சார் பிரச்சினைகள் தொடர்பில் அறிவிப்பதற்கு 106 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளுமாறு இலங்கை கடற்கரையோர காவல் படையினர் தெரிவித்துள்ளனர். இந்த அவசர தொலைபேசி இலக்கத்தின் மூலம் கடல்சார் பாதுகாப்பு மற்றும் கடல்சார் அனர்த்தங்கள் தொடர்பில் அறிவிக்க முடியும். இந்த அவசர தொலைபேசி இலக்கமானது 24 மணிநேரமும் சேவையில் இருக்கும் எனவும் இலங்கை கடற்கரையோர காவல் படையினர் தெரிவித்துள்ளனர்.

Read More