யாழ். ஓமந்தை கார் விபத்தில் படுகாயமடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சுவாமிநாத ஐயா என்றழைக்கப்படும் சந்திரன் ஐயா என்பவரே நேற்றையதினம் வெள்ளிக்கிழமை(ஜூன் 20) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வவுனியா ஓமந்தை பகுதியில் கடந்த 26ஆம் திகதி அதிகாலை கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கார், எதிரே வந்த டிப்பருடன் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரக அலுவலர் பிரம்மஸ்ரீ சச்சிதானந்த குருக்கள் பிரபாகரசர்மா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்….

பப்புவா நியூ கினியா கடற்பகுதியில் நிலநடுக்கம்.
பப்புவா நியூ கினியா கடற்பகுதியில் நேற்று(ஏப்ரல் 04) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதுடன் இது ரிக்டர் அளவுகோலில் 6.9ஆக பதிவாகியுள்ளது. பூமிக்கடியில் 33 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அடுத்தடுத்து உலகலவியரீதியில் பல இடங்களில் 7 ரிக்டருக்கும் அதிகளவான நிலநடுக்கம் பதிவாவதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுவருகின்றது. பின் அவை தளர்த்தப்படுகின்றன.