7 News Pulse

ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ் கோப்ரேஷன் ஜெனரல் லிமிடட் நிறுவத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக கலாநிதி.சமீர தர்மசேன நியமனம் பெற்றுள்ளார்

2025 ஒக்டோபர் 01ஆம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில் கலாநிதி. சமீர தர்மசேன அவர்களை பிரதம நிறைவேற்று அதிகாரியாக நியமித்திருப்பதாக ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ் கோப்ரேஷன் ஜெனரல் லிமிடட் நிறுவனம் அறிவித்துள்ளது. மூலோபாய மாற்றங்கள், செயற்பாட்டுத் திறமை மற்றும் தொழில்துறை கண்டுபிடிப்புக்கள் போன்றவற்றில் நிரூபிக்கப்பட்ட சாதனைகளைப் பதிவுசெய்துள்ள கலாநிதி தர்மசேன, இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான தலைமைத்துவ அனுபவத்தைக் கொண்ட ஒரு புகழ்பெற்ற காப்புறுதி நிபுணராவார். சிறந்த கல்வி மற்றும் துறைசார் அனுபவத்தைக் கொண்ட கலாநிதி தர்மசேனவின் இந்த நியமனம்…

Read More

City of Dreams Sri Lanka, NÜWA இல் “The Grand Pâtisserie Affair”ஐ அறிமுகப்படுத்துகிறது, இது ஒரு இனிமையானதிருப்பத்துடன் ஒரு புதிய அனுபவத்தைக் கொண்டுவருகிறது

2025 நவம்பர் 10, கொழும்பு – கொழும்பு நகரத்தின் அழகும் வசதியும் நிறைந்த City of Dreams Sri Lanka, அதன் புதிய விருந்தோம்பல் அனுபவமான “ The Grand Pâtisserie Affair” அண்மையில் ஆரம்பிக்கப்பட்டது. NÜWAவின் The Crystal Lounge The Crystal Loungeஇல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த தனித்துவமான அனுபவம், சுற்றுலாத்துறைக்காக அறிமுகப்படுத்தப்பட்ட நவீனத்துவம் கலந்த விருந்தோம்பலின் ஒரு எடுத்துக்காட்டாக காணப்படுகிறது. கடந்த நவம்பர் 8ம் திகதி, சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட இந்த சிறப்பு விருந்தோம்பல் அனுபவம்,…

Read More

குழந்தைப் பருவத்தை ஆர்வ உணர்வுடன்கொண்டாடிய Sunshine Holdings

நம்பிக்கைமிக்க எதிர்காலத்திற்கான அடித்தளம் குழந்தைகளின் உரிமைகள் மற்றும் ஆர்வத்தைப் புரிந்துகொள்வதில் உள்ளது என்பதை வலியுறுத்தும் வகையில், ‘எதிர்காலத்தைக் கேளுங்கள். குழந்தைகளின் உரிமைகளுக்காக எழுந்து நில்லுங்கள்’ என்ற தொனிப்பொருளின் கீழ் சன்ஷைன் ஹோல்டிங்ஸ் நிறுவனம் சர்வதேச சிறுவர்கள் தினத்தை தனது ஊழியர்களின் குழந்தைகளுடன் கொண்டாடியது. பத்தரமுல்லையில் அமைந்துள்ள ‘அப்பே கம’வில் நடைபெற்ற இந்த நிகழ்வில், குழுமத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 250 க்கும் மேற்பட்ட குழந்தைகளும் அவர்களுடைய பெற்றோர்களும் கலந்து கொண்டனர். மகிழ்ச்சியான புத்தாக்கங்கள் மற்றும் ஒற்றுமை நிறைந்த…

Read More

நுகேகொடை போராட்டம் ஆட்சிக் கவிழ்ப்புக்கான பேரணியா – சரத் வீரசேகர

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறவுள்ள பேரணியானது ஆட்சிக் கவிழ்ப்புக்குரிய போராட்டம் அல்ல என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முக்கியஸ்தரும் முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருமான சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள எதிரணியின் பேரணி தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “நவம்பர் 21 ஆம் திகதி பேரணி வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும். இது ஆட்சிக் கவிழ்ப்புக்குரிய போராட்டம் அல்ல என்பதை மீண்டும் வலியுறுத்துகின்றோம்.

Read More
arrest

இரு வாரங்களில் 16000இற்கும் மேற்பட்டோர் கைது!

நாடு முழுவதும் ஒக்டோபர் 30ஆம் திகதி முதல் நவம்பர் 13 ஆம் வரை மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் சுற்றிவளைப்பின்போது 16 ஆயிரத்து 738 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்தச் சுற்றிவளைப்பில் நாடளாவிய ரீதியில் 16 ஆயிரத்து 915 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் 110 கிலோ 556 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 600 கிலோ 947 கிராம் ஐஸ் போதைப்பொருளும், 10 கிராம் கொக்கேயின் போதைப்பொருளும், 458 கிலோ 216 கிராம் கஞ்சா போதைப்பொருளும்…

Read More

வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 118 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

கடந்த 7ஆம் திகதி தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்ட எதிர்வரும் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 118 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவு திட்டம் தொடர்பிலான விவாதம், தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், இன்று (14.11.2025) வாக்கெடுப்பு இடம்பெற்றது. அதன்படி, 118 வாக்குகளுடன் வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனினும், குறித்த வாக்கெடுப்பில் 42 உறுப்பினர்கள், வரவு செலவு திட்டத்துக்கு எதிராக வாக்களித்திருந்தனர். இதேவேளை,…

Read More

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக லங்கா ரைட் 2025

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக ஒழுங்கு செய்யப்படும் ‘லங்கா ரைட் 2025’ சைக்கிள் ஓட்டப் போட்டி எதிர்வரும் டிசம்பர் 18 முதல் 20 ஆம் திகதி வரை நடைபெறும் என விளையாட்டுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது. டிசம்பர் 18ஆம் திகதி லேக் ஹவுஸ் வளாகத்தில் தொடங்கி, பேலியகொடை பொலிஸ் நிலையம் வரை சென்று அங்கிருந்து உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கும் இப்போட்டியின் முதல் நாளில் 106 கி.மீ. பயணித்து கன்னொருவயை அடைந்து இரண்டாம் நாள் கண்டியில் இருந்து அனுராதபுரம் வரையிலும், மூன்றாம் நாள்…

Read More

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு! மேலும் இருவர் கைது.

கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டிற்கு உதவிய குற்றச்சாட்டில் மேலும் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவினரால் நேற்றையதினம் குறித்த (13) கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர், இந்தக் குற்றத்தைச் செய்ய துப்பாக்கிதாரி வந்த காரின் சாரதியாக இருந்தவர் என்றும், சந்தேகநபரான பெண், இந்தக் குற்றத்தைச் செய்ய சந்தேகநபர்களுக்குத் தங்குமிட வசதிகளை வழங்கியவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் சந்தேகநபருக்கு 27 வயது எனவும்,…

Read More