Doneproduction

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு விலைகளை திருத்தியமைக்க நடவடிக்கை!

இலங்கை நாடாளுமன்ற ஊழியர்களின் கோரிக்கைகளைத் தொடர்ந்து, நாடாளுமன்ற ஊழியர்களுக்கான சமீபத்தில் உயர்த்தப்பட்ட உணவு விலைகளை திருத்தியமைக்க நாடாளுமன்ற அவைக் குழு முடிவு செய்துள்ளதாக நாடாளுமன்றத் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது. ஜூன் 1, 2025 முதல் நிர்வாக தர அதிகாரிக்கு மாதம் ரூ. 4,000 மற்றும் நிர்வாகமற்ற ஊழியர் உறுப்பினருக்கு மாதம் ரூ. 2,500 வசூலிக்க நாடாளுமன்ற அவைக் குழு முன்னதாக முடிவு செய்திருந்தது. இருப்பினும், நாடாளுமன்ற ஊழியர்களின் கோரிக்கைகளைக் கருத்தில் கொண்ட பிறகு, ஜூலை 1 முதல்…

Read More

மத்திய கிழக்கில் நாளுக்கு நாள் மோசமாகும் நிலைமை : இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!

ஈரானின் அணு மின் நிலையங்களுக்கு அருகிலுள்ள பகுதிகளில் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, இஸ்ரேலின் வடக்கு மற்றும் மத்திய நகர்ப்புறங்களில் பல ஈரானிய ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதர் நிமல் பண்டாரா கூறுகிறார். மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் குறித்து அறிக்கை வெளியிட்ட அவர், நாள் முழுவதும் நிலைமை உருவாகக்கூடும் என்று இஸ்ரேலிய பாதுகாப்பு ஆணையம் எச்சரித்துள்ளதாகக் கூறினார். அதன்படி, இந்த சூழ்நிலையில் சாத்தியமான தாக்குதல்களில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள இஸ்ரேலில் வசிக்கும்…

Read More

ஆபரேஷன் சிந்து நடவடிக்கையில் 6-வது சிறப்பு விமானம் டெல்லி வருகை

ஆபரேஷன் சிந்து மூலமாக ஈரானில் இருந்து இந்தியர்களை வெளியேற்றும் நடவடிக்கையை வெளியுறவு அமைச்சகம் மேற்கொண்டுள்ளது.நேற்றிரவு 310 பயணிகளை அழைத்துக் கொண்டுசிறப்பு விமானம் டெல்லி விமானநிலையத்தை வந்தடைந்தது. நள்ளிரவில் மேலும் 290 இந்தியர்களுடன் மற்றொரு விமானம் டெல்லிக்கு வந்துள்ளது. ஈரானில் இருந்து இதுவரை 1,117 பேர் மீட்கப்பட்டதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்திய மாணவர்களுடன் நேபாளம், இலங்கையைச் சேர்ந்த சிலரும் இந்தியாவால் மீட்கப்பட்டுள்ளனர். இதன் பொருட்டு நேபாளம் மற்றும் இலங்கை அரசுகள் இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துள்ளன

Read More

டிஜிட்டல் கற்றலை அறிமுகப்படுத்த தீர்மானம்

சகல பாடசாலைகளிலும் மனித மற்றும் பௌதிக வளங்களின் நியாயமான விநியோகத்தை உறுதி செய்யும் அதேவேளை டிஜிட்டல் கற்றல் முறைமைகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய வலியுறுத்தினார். உயர் கல்வி, கல்வி மற்றும் தொழில்சார் பயிற்சி அமைச்சர் என்ற வகையில் பிரதமர், டிஜிட்டல் கல்வி நிலை மாற்றத்தை (வகுப்புகள் 6-13) மேற்பார்வையிட அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட பணிக்குழுவுடன் அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த கருத்துகளை வெளியிட்டார். உரிய சவால்களை எதிர்கொண்டு தேவையான கொள்கைகளை செயற்படுத்து…

Read More

யாழில் போதைப்பொருளுடன் பெண் உட்பட இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நாவாந்துறை பகுதியை சேர்ந்த பெண் ஒருவரையும் இளைஞன் ஒருவரையும் பொலிஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவர்களிடம் இருந்து 440 மில்லி கிராம் ஐஸ் போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

Read More

பிரியங்கா மோகன் சேலையில் கியூட் போட்டோஷூட்

நடிகை பிரியங்கா மோகன் சேலையில் அழகிய போட்டோஷூட். ரசிகர்களை கவரும் கியூட் ஸ்டில்கள் இதோ. https://www.instagram.com/p/DLH1wqEJLbS/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

Read More

முதல் நாள் குபேரா படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி நேற்று திரையரங்கில் வெளிவந்த படம் குபேரா. இப்படத்தில் தனுஷுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா மற்றும் நாகர்ஜுனா நடித்திருந்தனர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி திரையரங்கில் வெளிவந்த இப்படத்திற்கு மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளது. இதற்கு காரணம் படத்தின் நீளம் என பலரும் கூறி வருகிறார்கள். இந்த நிலையில், தனுஷின் குபேரா திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது….

Read More

அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்கவில்லை – வருத்தத்தில் டிரம்

தான் என்ன செய்தாலும், தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காதென அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். உலக விருதுகளில் மிக உயரியது நோபல் பரிசு. மருத்துவம், இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கீழ் சாதனை படைத்தவர்களுக்கு இந்த நோபல் பரிசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. நோர்வே நாட்டு நோபல் குழுவினர் இந்த பணியை செய்து வருகின்றனர். ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் நோர்வே தலைநகர் ஆஸ்லோவில் அறிவிக்கப்படுகிறது நடப்பாண்டில், அமைதிக்கான நோபல் பரிசு பெற…

Read More

இணைய வரலாற்றில் முதன்முறையாக 1600 கோடி கடவுச்சொற்கள் திருட்டு

இணைய வரலாற்றில் இதுவரையில் இல்லாத வகையில், முதன்முறையாக 16 பில்லியன் (1600 கோடி) கடவுச்சொற்கள் திருடு போயிருப்பதாக சமீபத்திய ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. மில்லியன் கணக்கானோரின் கடவுச்சொற்கள் கசிந்ததால், உலகளவில் அவர்களின் விவரங்களைக் கொண்டு மோசடி, திருட்டு, இணைய வழி திருட்டு முதலானவற்றில் சட்டவிரோதமான முறையில் பயன்படுத்த வாய்ப்புகள் உள்ளன. கடவுச்சொற்களைத் திருடி, அவற்றை ஹேக்கர்களிடம் கொடுத்து விடுகின்றனர். திருடப்பட்ட கடவுச்சொற்களை டார்க் வெப் (Dark Web) தளங்களில் விற்று, தவறான பயன்பாட்டுக்கு உட்படுத்துகின்றனர். மின்னஞ்சல், கூகுள்,…

Read More

ஈரானில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

வடக்கு ஈரானில் செவ்வாய்க்கிழமை இரவு 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செம்னான் மாகாணத்திற்கு தென்மேற்கே 37 கிலோமீட்டர் (23 மைல்) தொலைவில் 10 கிலோமீட்டர் (6 மைல்) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சேதம் ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் எதுவும் இல்லை, ஆனால் செம்னான் மாகாணத்தில் உள்ள சோர்கே நகரைச் சுற்றியுள்ள பகுதியிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. சோர்கேவிலிருந்து சுமார் 150 கிலோமீட்டர்…

Read More