Doneproduction

மெக்சிகோ எல்லையை கண்காணிக்க குதிரைகளைப் பயன்படுத்தும் வீரர்கள்

அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மற்றும் மெக்சிகோவின் ச்சிவாவா எல்லையில், கண்காணிப்புப் பணிகளுக்கு அமெரிக்க எல்லைப் பாதுகாப்புப் படையினர் குதிரைகளைப் பயன்படுத்தி வருகின்றனர். பல்வேறு நிலப்பரப்புகளில் தொலைதூரப் பகுதிகளில் ரோந்துப் பணிகளை மேற்கொள்ளவும், அவசர உதவிகளை விரைவாக கொண்டு செல்லவும் குதிரைகள் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர். சட்டவிரோத குடியேறிகள் மீதான நடவடிக்கை காரணமாக, அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் மார்ச் மாதத்தில் பிடிபட்டவர்களின் எண்ணிக்கை முன் எப்போதும் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

Read More

உக்ரைன் போரை நிறுத்த நடவடிக்கை எடுப்பேன் – டிரம்ப்

உக்ரைன் மீதான போரை நிறுத்த நடவடிக்கை எடுப்பேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்தார். ரஷ்ய – உக்ரைன் போர் அர்த்தமற்ற போர் என்றும், அதை நிறுத்துவதற்கான அனைத்துவிதமான நடவடிக்கைகளிலும் ஈடுபட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். போரில் சராசரியாக வாரம்தோறும் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழப்பதாகவும், அவர்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் இல்லை என்றாலும், அவர்களும் மனிதர்கள்தான் என்றும் அவர் தெரிவித்தார்.

Read More

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவமனை அமைத்த இந்திய ராணுவம்

நிலநடுக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட மியான்மரின் இரண்டாவது பெரிய நகரமான மண்டலேயில், 60 படுக்கைகள் கொண்ட தற்காலிக மருத்துவமனையை இந்திய ராணுவம் அமைத்துள்ளது. இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தவர்களுக்கு அவசர அறுவை சிகிச்சைகள், அத்தியாவசிய மருத்துவ சேவைகள் அங்கு அளிக்கப்படுவதாக ராணுவத்தினர் தெரிவித்தனர். இதுவரை 200 பேர் சிகிச்சை பெற்றுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Read More

விபத்துக்களால் ஏற்படும் மரணங்கள் அதிகரிப்பு

இந்த வருடம் ஜனவரி முதல் மார்ச் வரையிலான 3 மாதங்களில் மாத்திரம் 565 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் விளைவாக 592 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டில் வாகன விபத்துகளைக் குறைப்பதற்காக கொழும்பில் இன்று (3) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் பிரதானி, பிரதிப் பொலிஸ்மா அதிபர் இந்திக ஹபுகொட இதனைத் தெரிவித்தார். பல்வேறு தேவைகளுக்காக வீடுகளை விட்டு வெளியேறிச் செல்லும் 7 முதல் 8 பேர் வரை நாளாந்தம்…

Read More

அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு குறித்து ஜனாதிபதியுடன் சந்திப்பு

அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு குறித்து அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழு மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (02) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த வரி விதிப்பு பின்னணி அடிப்படையிலும், சிறிய பொருளாதாரத்தைக் கொண்ட இலங்கையைப் போன்ற நாடுகள் பாரிய அளவில் வரி விதிப்பதால் எதிர்கொள்ளும் பொருளாதார சவால்கள் குறித்தும் இங்கு விரிவாக ஆராயப்பட்டது. ஏற்பட்டிருக்கும் நிலை தொடர்பில், ஒரு நாடு என்ற வகையில் எவ்வாறு செயற்படுவது மற்றும்…

Read More

ஹிக்கடுவ துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

ஹிக்கடுவ – குமாரகந்த பகுதியில் இன்று (03) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தில் பலத்த காயமடைந்த கணவன், மனைவி இருவரும் காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக காலி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கணவன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஹிக்கடுவ – குமாரகந்த பகுதியில் இன்று (3) இரவு 7 மணியளவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீதிக்கு அருகில் உள்ள…

Read More

சூர்யாவையும் விடாத Ghibli ஃபீவர்..! கொஞ்சம் இத பாருங்க

நடிகர் சூர்யாவின் 44வது படம் ரெட்ரோ. இந்த படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படம் வரும் மே மாதம் 1ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் டப்பிங் பணிகள் முடிந்ததை, Ghibli ஸ்டைலில் அப்டேட் கொடுத்து அசத்தி உள்ளார்கள். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த படத்தின் இரண்டு பாடல்களும் டீசரும் ரசிகர்கள் மத்தியில், நல்ல…

Read More

முதல் இந்திய விண்வெளி வீரரை சந்திரனுக்கு அழைத்து செல்ல திட்டம்

2040ம் ஆண்டுக்குள் முதல் இந்திய விண்வெளி வீரரை சந்திரனுக்கு அழைத்து செல்லும் “மூன் மிஷன்” திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக இஸ்ரோ முன்னாள் தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். ஸ்ரீரங்கம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், NGLV என பெயரிடப்பட்டுள்ளபெரிய ராக்கெட்டுகளை வடிவமைத்து தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்டார்.

Read More

நவீன போர்க்கப்பலை உருவாக்கிய வடகொரியா

வடகொரியா உருவாக்கி உள்ள புதிய போர்க்கப்பல் ஏராளமான ஏவுகணைகளை தாங்கி செல்லும் வல்லமை கொண்டது என தகவல்கள் வெளியாகி உள்ளன. சோங்ஜின் மற்றும் நம்போ கப்பல் கட்டும் தளங்களில் கட்டப்பட்ட 4000 டன் எடை கொண்ட பெயரிடப்படாத கப்பலை, கடந்த மூன்று மாதங்களுக்கு முன் வடகொரியா கடற்பயணத்தில் ஈடுபடுத்தியது. அமெரிக்காவின் ஆர்லீ பர்க் நாசகாரி கப்பலின் அளவில் பாதியை கொண்டுள்ள வடகொரிய கப்பலில் இருந்து செங்குத்தாக ஏவுகணைகளை ஏவும் அமைப்புகள் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Read More

பட்டலந்த வதைமுகாம் தொடர்பில் மனுவொன்று சமர்ப்பிப்பு

பட்டலந்த வதைக்கூடம் தொடர்பில் விசாரணை ஒன்றைக் கோரி முன்னிலை சோஷலிஸக் கட்சியின் நிர்வாக உறுப்பினர் இந்திரானந்த டி சில்வா குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார். குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் நேற்று மனுவொன்றைச் சமர்ப்பித்து அவர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்தார். பட்டலந்த வதைக்கூடம் தொடர்பில் கடந்த அரசாங்கத்தைப் போன்று தற்போதைய அரசாங்கமும் விசாரணைகளை மேற்கொள்ளாமல் இருப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். அத்துடன் அரசாங்கம் இவ்வாறு நடந்துகொள்கின்றமை மிகவும் வருத்தமளிப்பதாக முன்னிலை சோஷலிஸக் கட்சியின் நிர்வாக உறுப்பினர் இந்திரானந்த டி…

Read More