gurueaswar

போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது – பொலிஸ் போக்குவரத்து பிரிவின் பிரதி பொலிஸ் மாஅதிபர்

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பிரதி பொலிஸ் மாஅதிபர் டபிள்யு. ஜி. ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார். பொலிஸ் ஊடகப் பிரிவில் திங்கட்கிழமை (26) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் இதனை தெரிவித்துள்ளார். பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு…

Read More

“முழு நாடுமே ஒன்றாக” போதைப்பொருள் சுற்றிவளைப்பில் 851 பேர் கைது!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நாடளாவிய ரீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (25) மேற்கொள்ளப்பட்ட “முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய செயற்பாட்டின் போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 851 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 844 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்போது, 184 கிலோ 778 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 116 கிலோ 860 கிராம் ஐஸ் போதைப்பொருளும், 02 கிலோ 175 கிராம் கஞ்சா போதைப்பொருளும், 1524 கஞ்சா…

Read More

வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள குற்றவாளிகளை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

நீதிமன்றத்தைப் புறக்கணித்து வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை  நாட்டுக்கு மீண்டும் அழைத்து வருதல் மற்றும் அவர்களுக்கு எதிராகச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக உதவி பொலிஸ் அத்தியட்சகர் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப்.யு.வுட்லர் தெரிவித்தார். பத்தரமுல்லை பகுதியில் திங்கட்கிழமை (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். நீதிமன்றத்தைப் புறக்கணித்து வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை நாட்டுக்கு  மீண்டும் அழைத்து…

Read More

மல்வத்தை விபுலானந்தா மகா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மாபெரும் நடைபவணி

மல்வத்தை கமு/சது/ விபுலானந்தா மகா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மாபெரும் நடைபவணி கடந்த ஞாயிற்றுக்கிழமை (18) வெகு சிறப்பாக பாடசாலை அதிபர் கௌசல்யா கணேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது. இதிலே 25 ற்கும் மேற்பட்ட பழைய Batch கள் சார்பான மாணவர்களும், வாகன ஊர்திகளும் இப்பாடசாலை, மல்வத்தையின் பெருமைகளை பறைசாற்றும் வகையிலும் சமூக விழிப்புணர்வு கருத்துக்களுடனும் அலங்கரிக்கப்பட்டு இவ் ஊர்வலம் வெகு சிறப்பாக அதிகமான மாணவர்களின் பங்குபற்றலுடன் சிறப்பாக இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது

Read More

அனுமதியின்றி தொல்பொருள் அடையாளப் பலகைகள் : அகற்ற சட்ட நடவடிக்கை எடுக்க செங்கலடி பிரதேச சபை தீர்மானம்

மட்டக்களப்பு  ஏறாவூர் பற்று செங்கலடி சபை  பிரிவிற்குட்பட்ட பகுதிகளில், பிரதேச சபையின் எந்தவித அனுமதியுமின்றி தொல்பொருள் திணைக்களம் தன்னிச்சையாக அடையாளப் பலகைகளை நாட்டி வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளதுடன் அனுமதிபெறப்படாமல் நடப்பட்ட பதாகைகளை சட்டத்தின் கீழ் அகற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சியின் ஆட்சியின் கீழுள்ள செங்கலடி பிரதேச சபையின் மாதாந்த அமர்வு வியாழக்கிழமை (22)  தவிசாளர் மு.முரளிதரன் தலைமையில் இடம்பெற்றது.   இதன்போது வீதிப்பிரச்சினை, வடிகான் பிரச்சினை, தொல்பொருள் பொயர்ப்பலகை உனவிவகாரம் மற்றும் பன்குடாவெளி வட்டாரப்பகுதியில்…

Read More

கிளிநொச்சியில் கடந்த வருடம் கசிப்பு சார் குற்றங்கள் ; மூவாயிரம் பேர் கைது!

கிளிநொச்சியில் கடந்த வருடம் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள் கசிப்பு சார்ந்த குற்றச் செயல்களுக்காக நடவடிக்கைக்கு உட்பட்டுள்ளனர். கிளிநொச்சியில் கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட போதைக்கு எதிரான நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். இதன்போதே, கடந்த வருடம் கசிப்புக் காய்ச்சிய, விற்பனையில் ஈடுபட்ட 3 ஆயிரத்து 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைவிட, சாராயத்தை சட்டவிரோதமாக வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தமை தொடர்பில் 21 பேரும், போதை மாத்திரைகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் 19 பேரும் கைது செய்யப்பட்டு…

Read More

இலஞ்சம் கொடுக்க முயன்ற மோட்டார் சைக்கிள் செலுத்துனருக்கு விளக்கமறியல்!

போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் செலுத்துனரை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ்.போதரகம இன்று வியாழக்கிழமை (22) உத்தரவிட்டுள்ளார்.  விளக்கமறியலில் வைக்கப்பட்டவர் கம்பஹா கலகெடிஹேன பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார்.  குறித்த மோட்டார் சைக்கிள் செலுத்துனர் புதன்கிழமை (21) காலை 10.50 மணியளவில் போக்குவரத்து பொலிஸாரால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார். இதன்போது மோட்டார் சைக்கிள் செலுத்துனரிடம்…

Read More

ஹம்பேகமுவ மற்றும் ஹல்துமுல்ல பகுதிகளில் பாரிய கஞ்சா வேட்டை : 3 பேர் கைது!

ஹம்பேகமுவ – சிரிபுர வனப்பகுதியில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட கஞ்சா தோட்டம் ஒ்ன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இரண்டு சந்தேகநபர்கள் ஹல்துமுல்ல பொலிஸாரால் நேற்று வியாழக்கிழமை (22) கைது செய்யப்பட்டுள்ளனர். சுற்றிவளைப்பில் சுமார் 12,580 கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டு, சான்றுகளாக மாதிரிகளை எடுக்கப்பட்ட பின்னர், தீ வைத்து அழிக்கப்பட்டன. கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஹம்பேகமுவ பகுதியைச் சேர்ந்த, 51 மற்றும் 63 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹம்பேகமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

“புத்த பெருமானின் புனித சின்னங்கள் தரிசனம்” பெப்ரவரி 04 ஆம் திகதி ஆரம்பம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தலையீட்டின் கீழ் இந்திய அரசாங்கத்தின் முழு அனுசரணையுடன் இலங்கைக்குக் கொண்டுவரப்படவுள்ள “புத்த பெருமானின் புனித சின்னங்கள்” தரிசனம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை ஏழு நாட்கள் கொழும்பு, ஹுனுப்பிட்டி கங்காராம விகாரையில்  நடைபெறும். அதன், ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் இன்று (21) முற்பகல் ஜனாதிபதி அலுலகத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் ஜனாதிபதியின் செயலாளர்…

Read More

கல்வி மறுசீரமைப்புகளை மேற்கொள்ளும்போது நிபுணர்களைக் கொண்ட பொறிமுறை நிறுவப்படும் – ஜனாதிபதி

கல்வி மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்துவதில் எழுந்துள்ள பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், நிபுணர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினர்களையும் ஒன்றிணைத்த, முறையான சட்டக் கட்டமைப்புடன் கூடிய  பொறிமுறையை நிறுவுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனத்துடன் இன்று புதன்கிழமை (21) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார். தற்போதுள்ள சட்ட திட்டங்கள் மற்றும் விதிமுறைகளின்படி, தேசிய கல்வி நிறுவகத்தை…

Read More