gurueaswar

காலி மாநகர சபையில் குழப்பநிலை!

காலி மாநகர சபையில் இன்று செவ்வாய்க்கிழமை (30) நடைபெற்ற விசேட கூட்டத்தில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. காலி மாநகர சபையின் மேயர் இன்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட கூட்டத்தை  ஆரம்பிக்க முயன்ற போது அங்கிருந்த காலி மாநகர சபை உறுப்பினர்கள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது காலி மாநகர சபை உறுப்பினர்கள் சிலர்  “ எங்களது வாக்குகளை கொள்ளையிட்ட கொள்ளையர்கள் ” என சத்தமிட்டு கூச்சலிட்டுள்ளனர்.  ஆனாலும் காலி மாநகர சபையின் மேயர் விசேட கூட்டத்தை ஆரம்பித்துள்ள…

Read More

தைவான் ஆயுத விற்பனை: அமெரிக்க பாதுகாப்பு நிறுவனங்களுக்கு

தைவானுக்கு ஆயுதங்கள் விற்றதற்காக அமெரிக்காவின் 20 பாதுகாப்பு நிறுவனங்களுக்கும் 10 முக்கிய நபர்களுக்கும் சீனா தடை விதித்துள்ளது.  போயிங் உள்ளிட்ட நிறுவனங்களின் சீனாவில் உள்ள சொத்துகள் முடக்கப்பட்டு, சீன நிறுவனங்களுடன் வணிகம் செய்ய தடை செய்யப்பட்டுள்ளது.  கடந்த வாரம் அமெரிக்கா அறிவித்த 11.1 பில்லியன் டாலர் ஆயுத ஒப்பந்தமே இதற்குக் காரணம். தைவான் விவகாரம் சீனாவின் முக்கிய நலன் என பெய்ஜிங் எச்சரித்துள்ளது.

Read More

1MDB ஊழல் வழக்கு: மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் குற்றவாளி எனத் தீர்ப்பு

மலேசியாவின் 1MDB நிதி மோசடி தொடர்பான மிகப்பெரிய வழக்கில், முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பணமோசடி செய்ததாக நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. சுமார் 4.5 பில்லியன் டாலர் ஊழல் செய்யப்பட்ட இந்த நிதியிலிருந்து, ஒரு பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகை நஜிப்பின் கணக்குகளுக்குச் சென்றதாகக் குற்றம் சாட்டப்பட்டது. தற்போது சிறையில் இருக்கும் அவருக்கு, இந்த புதிய தீர்ப்பின் மூலம் மேலும் 15 முதல் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்….

Read More

தெற்கு சுவிட்சர்லாந்தில் காய்ச்சல் பாதிப்பு தீவிரம்

சுவிட்சர்லாந்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தெற்குப் பகுதியில் உள்ள டிசினோ (Ticino) மண்டலம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.  கடந்த வார புள்ளிவிவரங்களின்படி, 100,000 குடியிருப்பாளர்களுக்கு சுமார் 66 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் சுமார் 2,000-க்கும் மேற்பட்டோர் இந்த விடுமுறை காலத்தில் காய்ச்சலால் அவதியுற்று வருகின்றனர். கடந்த ஆண்டை விட தற்போது பாதிப்பு இரண்டு மடங்கு உயர்ந்துள்ளதாக பொது சுகாதார அலுவலகம் தெரிவித்துள்ளது. காய்ச்சலுடன் சேர்த்து கொரோனா மற்றும் ஆர்.எஸ்.வி (RSV) வைரஸ்களும்…

Read More

சுவிட்சர்லாந்தின் ‘நெஸ் ரூஜ்’ சேவை: 9,100 பேர் பாதுகாப்பாக வீடு திரும்பினர்

சுவிட்சர்லாந்தில் ‘நெஸ் ரூஜ்’ (Nez Rouge) என்ற தன்னார்வ போக்குவரத்து சேவை மூலம் இந்த ஆண்டு கிறிஸ்மஸ் பண்டிகையின் போது 9,134 பேர் பாதுகாப்பாக வீடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சுமார் 766 தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து 5,000-க்கும் மேற்பட்ட பயணங்களை மேற்கொண்டுள்ளனர். இலவசமாக வழங்கப்படும் இச்சேவை வரும் புத்தாண்டு இரவு வரையிலும் தொடரும். எனினும், அன்றைய தினம் அதிகப்படியான கூட்ட நெரிசல் இருக்கும் என்பதால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும் என்றும், மாற்று ஏற்பாடுகளை முன்கூட்டியே திட்டமிடுமாறும் அதன்…

Read More

சூரிக்கில் வலதுசாரி அரசியல்வாதிகளின் வீடுகள் சேதப்படுத்தப்பட்டன

சுவிஸ் மக்கள் கட்சியின் (SVP) கூற்றுப்படி, சூரிக்கில் உள்ள அக்கட்சி அரசியல்வாதிகளின் வீடுகளின் நுழைவாயில்களில் அடையாளம் தெரியாத நபர்கள் பெயிண்ட் கொண்டு கோஷங்களை எழுதியுள்ளனர். குறிப்பாக, கிறிஸ்மஸ் தினத்தன்று நாடாளுமன்ற உறுப்பினர் லோரென்ஸ் ஹபிச்சர் மற்றும் ஸ்டீபன் டூல் ஆகியோரின் வீடுகள் இவ்வாறு சேதப்படுத்தப்பட்டுள்ளன. இச்சம்பவத்திற்கு இடதுசாரி தீவிரவாதிகளே காரணம் என SVP குற்றம் சாட்டியுள்ளதுடன், இது கட்சி நிர்வாகிகளை அச்சுறுத்தும் முயற்சி என்றும் தெரிவித்துள்ளது.  பாதிக்கப்பட்டவர்கள் இது குறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். ஒரு தாக்குதல்…

Read More

இலங்கையின் ரத்தினக்கல் மற்றும் ஆபரண நிபுணர்கள் இந்தியாவில் சிறப்பு பயிற்சி

இலங்கையின் ரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையைச் சேர்ந்த 20 நிபுணர்கள் அடங்கிய குழு, 2025 டிசம்பர் முதலாம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை இந்தியாவிற்கு விஜயம் செய்து, சிறப்பு பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.. இந்தக் குழுவில், இலங்கை ரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையின் இரத்தினம் வெட்டுதல் மற்றும் மேம்படுத்துதல் (cutting & polishing) பிரிவுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் நிபுணர்கள் இடம்பெற்றிருந்தனர். இந்த பயிற்சி நிகழ்ச்சி, 2025 ஏப்ரல் மாதம் இந்திய பிரதமர்…

Read More

ஆளும் தரப்பினர் மீதான குற்றச்சாட்டுக்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன ; பொதுஜன பெரமுன குற்றச்சாட்டு

அரசாங்கத்தின் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை பொலிஸார் கிடப்பில் போட்டுள்ளார்கள். முறைப்பாடளிப்பவர்களை குற்றவாளிகளாக்கும் போக்கு தற்போது காணப்படுகிறது. பொலிஸ்மா அதிபர் தேசிய மக்கள் சக்தியின்  பொலிஸ்மா அதிபராக செயற்படுகிறாரென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகப் பேச்சாளர் சஞ்ஜீவ எதிரிமான்ன தெரிவித்தார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தனியார் தொலைக்காட்சி தொடர்பில் அரசாங்கம் வெறுப்புடன் செயற்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.சகல ஊடக நிறுவனங்கள் மற்றும்…

Read More

இடைத்தங்கல் முகாம்களிலிருந்து பலவந்தமாக வெளியேற்றம் ; லக்ஷ்மன் கிரியெல்ல குற்றச்சாட்டு

இயற்கை அனர்த்தங்களால் கண்டி மாவட்டமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் தற்போதும் சுமார் 6000க்கும் மேற்பட்டோர் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தற்காலிக இருப்பிடங்கள் கூட அமைத்துக் கொடுக்கப்படாத நிலையில், அவர்கள் குறித்த இடைத்தங்கல் முகாம்களிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களால் மலையகத்துக்கு, குறிப்பாக கண்டி மாவட்டத்திற்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. அனர்த்த நிவாரணப் பணிகளுக்காக ஐக்கிய மக்கள் சக்தி என்ற ரீதியில்…

Read More

2026 க்கான வாக்காளர் கணக்கெடுப்பு நடவடிக்கைகள் பெப்ரவரி ஆரம்பமாகும் ; பெப்ரல் அமைப்பு அறிவிப்பு

2026ஆம் ஆண்டுக்கான வாக்காளர் கணக்கெடுப்பு நடவடிக்கைகள் 2026 பெப்ரவரி 1ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.  கடந்த ஆண்டுகளைப் போலவே, கணக்கெடுப்பு அதிகாரிகள் ஒவ்வொரு வீட்டிற்கும் செல்ல மாட்டார்கள். புதிதாக சேர்க்கப்பட்ட மற்றும் நீக்கப்பட்ட பெயர்களை உள்ளடக்கிய ‘ A ‘ மற்றும் ‘Aa’ பட்டியல்களைப் புதுப்பிப்பதற்குத் தேவையான வீடுகளுக்கு மட்டுமே அவர்கள் விஜயம் செய்வார்கள். வாக்காளர் தகவல்கள் சேகரிக்கப்பட வேண்டிய வீடுகளுக்கு மட்டுமே அதிகாரிகள் செல்வார்கள் என பெப்ரல் அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

Read More