gurueaswar

zoo

மஞ்சள் அனகொண்டா பாம்புக் குட்டி மாயம் !

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் இருந்து மஞ்சள் அனகொண்டா பாம்புக் குட்டி ஒன்று காணாமல் போயுள்ளது. இந்நிலையில், மிருகக்காட்சிசாலையில் வைக்கப்பட்டிருந்த மஞ்சள் அனகொண்டா பாம்புக் குட்டி  காணாமல் போயுள்ளதாக மிருகக்காட்சிசாலையின் அதிகாரிகள் தெஹிவளை பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளனர். இந்த மஞ்சள் அனகொண்டா உட்பட மூன்று பாம்பு இனங்களைச் சேர்ந்த ஆறு பாம்புகளை  பெண் ஒருவர் செப்டம்பர் 12 ஆம் திகதி தாய்லாந்திலிருந்து நாட்டுக்கு சட்டவிரோதமாக கொண்டு வந்தார்.  இதன்போது, குறித்த பாம்புகள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்கத் திணைக்கள அதிகரிகளால்…

Read More

கிழக்கு மாகாணத்தில் சீரற்ற காலநிலையினால் 10 பேர் உயிரிழப்பு

சீரற்ற காலநிலை காரணமாக கிழக்கு மாகாணத்தில் 10 பேர் உயிரிழந்ததுடன், 45,420 குடும்பங்களைச் சேர்ந்த 147,885 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட பலத்த காற்று மற்றும் மழை  வெள்ளப் பெருக்கினால்  கிழக்கு மாகாணத்தில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த  நலன்புரி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு இடம்பெயர்ந்த மக்கள் தங்களுடைய வீடுகளுக்குச் சென்றுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ நிலையம்  செவ்வாய்க்கிழமை  (09) தகவல் வெளியிட்டுள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக கிழக்கு மாகாணத்தில் 10 பேர் உயிரிழந்ததுடன் 45,420…

Read More

இந்தியாவின் மற்றுமொரு அனர்த்த நிவாரண சேவை விமானம் கட்டுநாயக்கவை வந்தடைந்தது!

இந்திய அரசாங்கத்தின் மற்றுமொரு அனர்த்த நிவாரண சேவை விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று செவ்வாய்க்கிழமை (9) பிற்பகல் வந்தடைந்துள்ளது. அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவு பொருட்கள் மற்றும் அனர்த்த நிவாரண பொருட்கள் இந்த விமானத்தில் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விமானத்தில் உள்ள பொருட்களின் மொத்த நிறை  600 கிலோ எனவும் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கத்தில் இந்திய அரசாங்கத்தினால் அனர்த்த நிவாரண…

Read More

ட்ரம்புக்கு நன்றி தெரித்தார் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க

தேவையான நேரத்தில் இலங்கையுடன் துணைநின்றமைக்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நன்றி தெரிவித்துள்ளார். தித்வா சூறவளியினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு பேரனர்த்தங்களை தொடர்ந்து இலங்கையில் அவசர நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவி அளிக்கும் முகமாக  அமெரிக்கா 2 மில்லியன் டொலர்களை வழங்குவதாக உறுதியளித்துள்ளது. அத்துடன்,  நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவுவதற்கு அமெரிக்கா இரண்டு C-130J சூப்பர் ஹெர்குலஸ் விமானங்களையும் அனுப்பி வைத்துள்ளது. இந்நிலையில்,  C-130 விமானங்களை விரைவாகப் பணியில் ஈடுபடுத்தியமை மற்றும்  2 மில்லியன் அமெரிக்க…

Read More

வீதி விபத்துக்களால் 2570 பேர் உயிரிழப்பு 

இவ்வருடம் ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில்  நாடளாவிய ரீதியில் உயிரிழப்புகளை ஏற்படுத்தக் கூடிய அபாயகரமான 2427 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதுடன் அவ்வாறான விபத்துகளில் சிக்கி 2570 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர்  உதயகுமார வுட்லர் தெரிவித்துள்ளார். செவ்வாய்க்கிழமை (9) பொலிஸ் ஊடகப் பிரிவில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது கலந்துக் கொண்ட அவர் மேலும் தெரிவிக்கையில், இவ்வருடம் ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில்  நாடளாவிய ரீதியில் உயிரிழப்புகளை ஏற்படுத்தக் கூடிய…

Read More

 43 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை!

2025 ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தின் முதல் ஏழு நாட்களில் 43,329 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. டிசம்பர் மாதத்தின் முதல் நான்கு  நாட்களில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 8,989 ஆகும். அத்துடன், ஜெர்மனியிலிருந்து 4,399 சுற்றுலாப் பயணிகளும், ரஷ்யாவிலிருந்து 4,735  சுற்றுலாப் பயணிகளும்,  ஐக்கிய இராச்சியத்திலிருந்து 3,053 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 2,128 சுற்றுலாப் பயணிகளும்,…

Read More

சீரற்ற வானிலை ; தொலைத்தொடர்பு கேபிள்களுக்கு சேதம் ஏற்படும் அபாயம்!

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் தொலைத்தொடர்பு கேபிள்களுக்கு சேதம் ஏற்படும் அபாயம் குறித்து பொதுமக்களுக்கு அறிவிக்குமாறு டயலொக் நிறுவனம், பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டின் பல பகுதிகளை பாதித்த அனர்த்த சூழ்நிலையின் விளைவாக, ஃபைபர்-ஆப்டிக் மற்றும் செப்பு கம்பிகள் உள்ளிட்ட அத்தியாவசிய தொலைத்தொடர்பு கேபிள்கள் பொது இடங்களில் சேதமடைந்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.  பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட வீதி பழுதுபார்க்கும் பணிகளின் போது சில நிலத்தடி தொலைத்தொடர்பு கேபிள்கள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள்…

Read More

பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகள் இன்னும் ஆபத்துகளை ஏற்படுத்தும் நிலையில் இருப்பதால், வலுவான நீருள்ள இடங்களில் இறங்குவதையோ அல்லது குளிப்பதையோ பொதுமக்கள் தவிர்க்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி வலியுறுத்தியுள்ளார். ஆபத்துகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், ஏதேனும் அவசரப் பிரச்சினைகள் இருந்தால் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் தொலைபேசி இலக்கங்களான  117 க்கு அழைப்பினை ஏற்படுத்தி தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். அதிக மழையினால் மேலும் மண்சரிவுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகரித்து வருவதாகவும்…

Read More

முட்டையின் விலை அதிகரிப்பு!

சந்தையில் முட்டையின் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.  நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தத்தினால் பல கோழிகள் உயிரிழந்துள்ளதுடன் முட்டைகள் அழிவடைந்துள்ளன.  இதனால் சந்தையில் முட்டை ஒன்றின் விலை 40 முதல் 50 ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது.  இதற்கு முன்னர் முட்டை ஒன்றின் விலை 25 முதல் 30 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டது.  எதிர்வரும் காலங்களில் முட்டை ஒன்றின் விலை 70 ரூபாவாக அதிகரிக்கலாம் என அகில இலங்கை முட்டை வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்திருந்தமை…

Read More

நிவாரண உதவிகளை வழங்குமாறு அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரிடம் எதிர்க்கட்சி தலைவர் கோரிக்கை

தித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்கும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இலங்கைக்கான அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் மேத்யூ டக்வொர்த்தை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். திங்கட்கிழமை (08) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இலங்கையின் தற்போதைய நிலைவரம் தொடர்பில் இரு தரப்பினரும் இங்கு பல கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளப்பட்டுள்ளன. புயலால் ஏற்பட்ட பேரழிவு காரணமாக தொழில் முயற்சிகள் அழிந்து போனமை, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளமை, பல உட்கட்டமைப்பு வசதிகளுக்கு ஏற்பட்ட…

Read More