gurueaswar

படகில் இருந்து போதைப்பொருட்கள் மீட்பு

தெற்கு கடலில் கைப்பற்றப்பட்ட ஒரு படகிலிருந்து 376 கிலோ போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. அதில் 115 கிலோ ஹெராயின் (5 சாக்குகள், 100 பாக்கெட்டுகள்) மற்றும் 261 கிலோ ஐஸ் (13 சாக்குகள், 200 பாக்கெட்டுகள்) இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையில், 01 பிஸ்டல், 02 பத்திரிகைகள், 01 ரிவால்வர் மற்றும் 01 இரிடியம் செயற்கைக்கோள் பிஎச் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Read More

ஜப்பானில் பாரிய தீ – 170க்கு மேற்பட்ட கட்டடங்கள் எரிந்து நாசம்! – ஒருவர் பலி

ஜப்பானின் தெற்கு கடலோர நகரமான ஓய்டாவில் உள்ள சாகனோசெக்கி பகுதியில் நேற்று (18) மாலை திடீரென தீ பரவியதில் 170க்கும் மேற்பட்ட கட்டடங்கள், வீடுகள், கடைகள் தீயில் எரிந்து பெருமளவு சேதங்களை எதிர்கொண்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.  இந்த தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்திருக்கலாம் என தீயில் எரிந்த வீடொன்றிலிருந்து மனித உடல் எச்சங்களை கண்டுபிடித்த அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரவு முழுவதும் தீப்பிடித்து எரிந்த நிலையில், தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக…

Read More

மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு புதிய அரசியல் தீர்வொன்று அவசியம் – ஜனாதிபதி

தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுத்த கோரிக்கைக்கு அமைவாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் அந்தக் கட்சி பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு (19) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. மாகாண சபைத் தேர்தல் மற்றும் புதிய அரசியலமைப்பொன்றின் அவசியம் குறித்து இதன் போது ஆராயப்பட்டதோடு, வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தொடர்ந்தும் பழைய அரசியல் தீர்வு பொருத்தமற்றது என்பதால் அதற்காக புதிய அரசியல் தீர்வை நோக்கிச் செல்ல வேண்டுமென அரசாங்கம் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க…

Read More

வானிலையில் பாரிய மாற்றம்

இம் மாதம் 22ஆம் திகதியளவில் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் புதிய குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாகக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இக் குறைந்த அழுத்தப் பிரதேசம் மேலும் வலுவடைந்து இலங்கையின் வடக்கு கரையோரத்தை அண்டியதாக நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது.  இதனால் வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.  நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன்…

Read More

150 மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு!

அரச வைத்தியசாலைகளில்  தற்சமயம் சுமார் 150  மருந்துவகைகளுக்கு தட்டுப்பாடு நிலவிவருவதுடன், அவற்றுள் நுண்ணுயிர் கொல்லி,  மயக்க மருந்து, சுவாச நோய்க்கான மருந்து,  தொற்றாநோய்க்கான மருந்து, வலி நிவாரணி மற்றும் கண் நோய்களுக்கான மருந்து ஆகிய மருந்து வகைகளுக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக  அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. வைத்தியசாலை கட்டமைப்பில் தொடர்ச்சியாக நோயாளர்களுக்கு சிகிச்சை சேவைகளை வழங்குவதில் உருவாகியுள்ள நெருக்கடித் தொடர்பில புதன்கிழமை (19) அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, வைத்தியசாலைகளில்…

Read More

ஜனாதிபதியை சந்தித்து இலங்கை தமிழ் அரசுக் கட்சி

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர்கள் புதன்கிழமை (19) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். குறிப்பாக அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வருடம் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்புக் குறித்து இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் கருத்துத் தெரிவிக்கையில், ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க பதவியேற்று ஒரு வருட நிறைவில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி கடிதமொன்றை எழுதியிருந்தது. இந்த நிலையில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க…

Read More

புத்தர் சிலையை கைது செய்த முதல் ஆட்சியாளராக ஜனாதிபதி அநுர சாதனை – உதய கம்மன்பில

இலங்கையின் வரலாற்றில் புத்தர் சிலையை கைது செய்த முதல் ஆட்சியாளராக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க சாதனை படைத்துள்ளார். புத்தரை கைது செய்வதற்கு சமமாக இடம்பெற்ற இந்த சம்பவத்தால் ஒட்டுமொத்த பௌத்த சமூகமும் அதிர்ச்சியடைந்துள்ளது. எமது நாளைய பேரணியில் இவ்வாறான சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக இந்த அரசாங்கத்தின் முடிவை ஆரம்பிப்பிக்கின்றோம் என பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார். நாளை வெள்ளிக்கிழமை இந்த அரசாங்கத்தின் முடிவின் ஆரம்பிப்பதைக் குறிக்கும் நுகேகொடை பேரணியில், ஸ்ரீலங்கா பொதுஜன…

Read More

மாகாணசபைத் தேர்தல் முறைமை குறித்து வெகுவிரைவில் உரிய தீர்மானம் எடுக்கப்படும்

மாகாணசபைத் தேர்தலை நடத்த  தேர்தல் முறைமை ஒன்றை உருவாக்கிக் கொடுங்கள் என்று ஜனாதிபதி பாராளுமன்றத்தில் குறிப்பிட்டாரே தவிர எதிர்க்கட்சிகளிடம் கோரவில்லை. மாகாணசபைத் தேர்தல் முறைமை குறித்து வெகுவிரைவில் உரிய தீர்மானம் எடுக்கப்படும் என பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள் அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்தார். பாராளுமன்றத்தில்  புதன்கிழமை (19)  நடைபெற்ற   2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில்   பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள் அமைச்சு மற்றும்  தொழில்   அமைச்சுக்கான குழு…

Read More

‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாடு இன்று தங்காலையில்

தேசிய பேரழிவாக மாறியுள்ள போதைப்பொருட்களிலிருந்து இலங்கை சமூகத்தை விடுவிப்பதை நோக்கமாகக் கொண்ட ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாடு, இன்று (20) பிற்பகல் 3.00 மணிக்கு தங்காலை பொது விளையாட்டு மைதானத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெறும். இந்நாட்டின் இளைஞர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் போதைப்பொருள் அச்சுறுத்தல் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தை ஒழிக்கும் நோக்கில், நாடு முழுவதும் ஒன்பது மாகாணங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய நிகழ்ச்சித்திட்டம் ஒக்டோபர் 30…

Read More

மாகாணசபைத் தேர்தல் முறைமை குறித்து தற்போது விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது – பிமல் ரத்நாயக்க

மாகாண சபைத் தேர்தல் குறித்து புதிய தேர்தல் முறைமை ஒன்றை உருவாக்கும் போது சகல தரப்பினரது ஆலோசனைகளையும் கோர வேண்டும். எல்லை நிர்ணய பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும். அது தேர்தலை பிற்போடும் செயற்பாடாக அமையாது.  சகல தரப்பினருடனும்  கலந்துரையாடுவது ஜனநாயகமிக்கதாக அமையும் என அமைச்சரும், சபை முதல்வருமான  பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (19)  நடைபெற்ற அமர்வின் போது மாகாணசபைத் தேர்தல் குறித்து எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான கயந்த கருணாதிலக முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கையில்…

Read More