நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
ட்ரம்பின் இலக்கை பிரிட்டன் ஆதரிப்பதாகக் கூறியுள்ளது
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் இலக்கை பிரிட்டன் ஆதரிப்பதாகக் கூறியுள்ளது. அமெரிக்கா தயாரித்த அமைதி வரைவுக்கு உக்ரைன் ஒப்புக்கொள்ள வாஷிங்டன் அழுத்தம் கொடுத்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்ட நிலையில், பிரிட்டன் இவ்வாறு தெரிவித்துள்ளது. எனினும், ரஷ்யா தனது படைகளை விலக்கிக் கொண்டு, இந்தச் சட்டவிரோதப் படையெடுப்பை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று பிரிட்டன் வலியுறுத்தியுள்ளது.

