gurueaswar

பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தலில் விசேட நடவடிக்கை – ஆயிரக்கணக்கானோர் சோதனை

பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, நாடளாவிய ரீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய, 29,995 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் 659 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 15 பேர் குற்றங்களுடன் தொடர்புடைய மற்றும் நேரடியாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேநேரம், கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளுக்கமைய 279 பேரும், திறந்த பிடியாணைகளுக்கமைய 171 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, மதுபோதையில் வாகனம் செலுத்திய 539…

Read More

“முழு நாடுமே ஒன்றாக”: 956 பேர் கைது!

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நாடு முழுவதும் போதைப்பொருளை தடுக்கும் “முழு நாடுமே ஒன்றாக” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுடன், இலங்கை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டுவரும் தொடர்ச்சியான, போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் போது பலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. அதன்படி, நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளுக்கமைய, 486 கிராம் ஹெரோயின், 544 கிராம் ஐஸ், 10 கிலோகிராம் 83 கிராம் கஞ்சா, 15,511 கஞ்சா செடிகள், 02 கிராம் குஷ்ரக போதைப்பொருள், 224…

Read More

யாழில் வெளிநாட்டில் வசிப்பவரின் சொகுசு வீட்டில் தவறான தொழில் ; கைதானவர்கள் விளக்கமறியலில்

வெளிநாட்டில் வசிப்பவரின் சொகுசு வீட்டினை வாடகைக்கு பெற்று வீட்டினை விபச்சார நடவடிக்கைக்கு பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வெளி மாவட்டத்தை சேர்ந்த மூன்று பெண்கள் உள்ளிட்ட நால்வரையும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலி பகுதியில் வெளிநாட்டில் வசிக்கும் நபர் ஒருவரின்  சொகுசு வீட்டினை கிளிநொச்சியை சேர்ந்த நபர் ஒருவர் வாடகைக்கு பெற்றுள்ளார்.      அந்நிலையில் குறித்த வீட்டிற்கு சந்தேகத்திற்கு இடமான முறையில் பெண்கள் ஆண்கள் என பலர் மோட்டார்…

Read More

நுரைச்சோலையின் மின் பிறப்பாக்கி ஒன்று வழமைக்கு திரும்பியது!

பராமரிப்பு பணிகள் காரணமாக தற்காலிகமாக செயலிழக்கச் செய்யப்பட்டிருந்த நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மின் பிறப்பாக்கி ஒன்று மீண்டும் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் குறித்து, தற்போது கணினியில் சேர்க்கப்படவில்லை எனவும், எதிர்வரும் சில நாட்களில் அது கணினியில் சேர்க்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் 03 மின் பிறப்பாக்கிகள் மூலம் 900 மெகாவோட் மின்சாரத்தை தேசிய மின்சார கட்டமைப்புக்கு  வழங்கிவந்த நிலையில், தற்போது ஒரு மின் பிறப்பாக்கி மட்டுமே தேசிய மின்சார…

Read More

வாகனப் பதிவு மற்றும் உரிமை மாற்றத்திற்கு ‘TIN’ இலக்கம் கட்டாயம்: மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அதிரடி

இலங்கையில் வாகனப் பதிவு மற்றும் வாகன உரிமை மாற்றங்களின் போது வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை (TIN) சமர்ப்பிப்பது  ஜனவரி 5 ஆம் திகதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் (DMT) அறிவித்துள்ளது. புதிய நடைமுறையின் முக்கிய விபரங்கள்: விலக்கு அளிக்கப்பட்ட வாகனங்கள்: மோட்டார் சைக்கிள்கள், கை உழுயந்திரங்கள் (Hand Tractors), டிராக்டர்கள், டிராக்டர் டிரெய்லர்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் தவிர்ந்த ஏனைய அனைத்து வாகனங்களுக்கும் இந்த விதிமுறை பொருந்தும். புதிய உரிமையாளரின் தேசிய அடையாள…

Read More

வரியை குறைப்பதாகக் கூறிவிட்டு, 500 சதவீதத்தால் அரசாங்கம் வரியை அதிகரித்துள்ளது – சமிந்திரானி கிரியெல்ல

மக்களின் வரிச் சுமையை குறைப்பதாகக் கூறிவிட்டு, வரியை 500 சதவீதத்தால் அரசாங்கம் அதிகரித்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்திரானி கிரியெல்ல தெரிவித்தார்.  ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்திரானி கிரியெல்ல செவ்வாய்க்கிழமை (06) எதுல்கோட்டேயிலுள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றினார். அங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள அதிகப்படியான வரிகளை ஆட்சிக்கு வந்தவுடன் நீக்குவதாக தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நாட்டு மக்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால்,…

Read More

வெனிசுலா இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிக்ஸ்

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் கைது செய்யப்பட்டதை அடுத்து, அந்நாட்டின் இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிக்ஸ் (Delcy Rodriguez) நியமிக்கப்பட்டதை ரஷ்யா வரவேற்றுள்ளது.  இது குறித்துப் பேசிய ரஷ்ய வெளியுறவு அமைச்சகம், அமெரிக்காவின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல், “நவீன காலனித்துவ அச்சுறுத்தல்களை” கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளது. வெனிசுலா தனது எதிர்காலத்தை வெளிநாட்டுக் குறுக்கீடு இன்றித் தீர்மானிக்க வேண்டும் என்றும், அந்நாட்டிற்குத் தேவையான அனைத்து ஆதரவுகளையும் ரஷ்யா தொடர்ந்து வழங்கும் என்றும் மாஸ்கோ உறுதி அளித்துள்ளது.

Read More

50 பேருடன் பயணித்த நேபாளம் விமானம் விபத்து!

காத்மாண்டுவில் இருந்து சுமார் 50 பேருடன் பயணித்த நேபாளம் விமானம் ஒன்று நேபாளத்தின் பத்ராபூர் விமான நிலையத்தில் வைத்து வெள்ளிக்கிழமை (02) இரவு 9 மணியளவில் தரையிறங்கியபோது ஓடுபாதையைத் தாண்டிச் சென்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். நேபாளம் விமானம் வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் பத்ராபூர் விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது, விமானம் ஓடுபாதையில் இருந்து சுமார் 200 மீட்டர் தூரம் வழுக்கிச் சென்று, அங்கிருந்த…

Read More

கடல் சீற்றம் அதிகரிப்பு – திருகோணமலை

திருகோணமலை கடற்பரப்பில் கடல் அலையின் சீற்றம் அதிகரித்து வருவதால் மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் தமது படகுகளை கரையோரத்தில் இருந்து வீதிக்கு அப்பறப்படுத்தி வருகின்றார்கள்.  திருகோணமலை வீரநகர் உள்ளிட்ட கரையோரப்பகுதியில் உள்ள மீனவர்கள் கடல் சீற்றம் காரணமாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வதை தவிர்த்துள்ளதோடு தமது படகுகளை பாதுகாப்பு கருதி வீதியோரங்களுக்கு அப்புறப்படுத்தியும் வருகின்றார்கள்.  தமது படகுகளை பாதுகாப்பா வைத்திருப்பதற்கு தமக்கு இடம் இல்லை எனவும் இதனால் வீதிக்கு கொண்டு வரவேண்டி இருப்பதாகவும், எதிர்வரும் 10ஆம் திகதிக்குப் பின்னர் கடல்…

Read More

கிரான்ஸ்-மொன்டானாவில் நிகழ்ந்த தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது

ஜனவரி 1 அன்று கிரான்ஸ்-மொன்டானாவில் நிகழ்ந்த தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. இதில் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த 22 பேர், பிரான்ஸ் (8), இத்தாலி (6) உட்படப் பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் உயிரிழந்துள்ளனர். விபத்து குறித்து முதன்முறையாகப் பேசிய ‘Le Constellation’ பாரின் உரிமையாளர்கள், இது ஒரு பயங்கரமான துயரம் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தங்களின் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளனர். 2020 முதல் 2025 வரை அந்த பாரில் முறையான பாதுகாப்பு ஆய்வுகள் நடத்தப்படவில்லை…

Read More