DEATH

நாகொடை துப்பாக்கிச் சூடு ; காயமடைந்த “ரஜவத்தே சத்துவா” போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவரா?

களுத்துறையில் நாகொடை வைத்தியசாலையில் இன்று புதன்கிழமை (31) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பல தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் தெரியவருவதாவது,  நாகொடை வைத்தியசாலைக்குள் இன்று காலை 6.00 மணியளவில் நுழைந்த இனந்தெரியாத ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.  துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் களுத்துறை சிறைச்சாலையைச் சேர்ந்த கைதி ஒருவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

Read More
colombo municipal council

கொழும்பு மாநகர சபையின் வரவு – செலவு திட்டம் வெற்றி!

தேசிய மக்கள் சக்தி ஆட்சியின் கீழ் இயங்கும் கொழும்பு மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்தின் இரண்டாவது வாக்கெடுப்பு இரண்டு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. கொழும்பு மாநகர சபையின் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 58 வாக்குகளும் எதிராக 56 வாக்குகளும் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Read More

டித்வா சூறாவளி பாதிப்பு: சுகாதாரத் துறைக்கு 21 பில்லியன் ரூபாய் இழப்பு!

டித்வா சூறாவளியின் தாக்கத்தால் நாட்டின் சுகாதாரத் துறைக்கு 21 பில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். வைத்தியசாலைகள் உள்ளிட்ட 8 சுகாதார நிறுவனங்கள் சீரமைக்கப்பட வேண்டியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். சுகாதார அமைச்சில் நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனை தெரிவித்துள்ளார். 

Read More
Parliament

பாராளுமன்றத்தில் 26 சட்டங்கள் நிறைவேற்றம்

2025ஆம் ஆண்டு ஜனவரி 01ஆம் திகதி முதல் 2025ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி வரையான ஒருவருட காலப்பகுதியில் பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரில் அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட 26 சட்டமூலங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. 

Read More

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் இரு இயந்திரங்கள் செயலிழப்பு!

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் உள்ள மூன்று மின் உற்பத்தி இயந்திரங்களில் இரண்டு மின் உற்பத்தி இயந்திரங்கள் செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு மின் உற்பத்தி இயந்திரம் கடந்த நவம்பர் மாதம் முதல் செயலிழந்துள்ளது. அதேநேரம், மற்றைய மின் உற்பத்தி இயந்திரம் அதன் கொதிகலனில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக செயலிழந்துள்ளது. இந்த இரண்டு மின் உற்பத்தி இயந்திரங்களும் செயலிழந்ததால் தேசிய மின் கட்டமைப்புக்கு 600 மெகாவோட் மின்சார இழப்பு ஏற்பட்டுள்ளது

Read More

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு: 600க்கும் அதிகமானோர் கைது!

பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, நாடளாவிய ரீதியில் நேற்று திங்கட்கிழமை (29) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய, 30,134 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் 635 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 38 பேர் குற்றங்களுடன் தொடர்புடைய மற்றும் நேரடியாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேநேரம், கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளுக்கமைய 294 பேரும், திறந்த பிடியாணைகளுக்கமைய 196 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read More

யாழ். நல்லூர் பிரதேச சபையின் உறுப்பினர் கஞ்சாவுடன் கைது!

நல்லூர் பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் செவ்வாய்க்கிழமை (30) 4 கிலோ 800 கிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார். அரியாலை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய குறித்த உறுப்பினர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

வீதி பாதுகாப்பு விழிப்புணர்வுத் திட்டம் 2025

இலங்கையில் அதிகரித்து வரும் வீதி விபத்துகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், “வாகனப் பரிசோதனை உயிர்களைக் காக்கும்” (Vehicle Testing Can Save Lives) என்ற விசேட விழிப்புணர்வு செயற்திட்டத்தை சிலோன் வாகனச் சங்கம் (AA Ceylon) ஆரம்பித்துள்ளது. சர்வதேச வாகனச் சம்மேளனம் (FIA) மற்றும் ஐக்கிய நாடுகளின் ‘வீதிப் பாதுகாப்புக்கான தசாப்த கால நடவடிக்கை’ (Decade of Action for Road Safety) ஆகியவற்றுடன் இணைந்து இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இலங்கையில் தற்போது 8 மில்லியனுக்கும் அதிகமான வாகனங்கள்…

Read More

காலி மாநகர சபையில் குழப்பநிலை!

காலி மாநகர சபையில் இன்று செவ்வாய்க்கிழமை (30) நடைபெற்ற விசேட கூட்டத்தில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. காலி மாநகர சபையின் மேயர் இன்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட கூட்டத்தை  ஆரம்பிக்க முயன்ற போது அங்கிருந்த காலி மாநகர சபை உறுப்பினர்கள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது காலி மாநகர சபை உறுப்பினர்கள் சிலர்  “ எங்களது வாக்குகளை கொள்ளையிட்ட கொள்ளையர்கள் ” என சத்தமிட்டு கூச்சலிட்டுள்ளனர்.  ஆனாலும் காலி மாநகர சபையின் மேயர் விசேட கூட்டத்தை ஆரம்பித்துள்ள…

Read More

சிறுவர் இல்லங்களிலுள்ள சிறுவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்க நடவடிக்கை

இலங்கையிலுள்ள அரச மற்றும் தனியார் நன்னடத்தை இல்லங்களில் பராமரிக்கப்பட்டு வரும் 16 வயதுக்குட்பட்ட சுமார் 3,000 சிறுவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ் இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுத்தப்பட்ட அல்லது பாலியல் வன்முறைகளுக்கு உள்ளான நிலையில் நீதிமன்ற உத்தரவின் பேரில் இல்லங்களில் ஒப்படைக்கப்பட்ட இச்சிறுவர்களுக்கு, முறையான அடையாள ஆவணங்கள் இல்லாததால் அவர்களைப் பாடசாலைகளில் இணைப்பதிலும் எதிர்கால வேலைவாய்ப்புகளைப் பெறுவதிலும் பாரிய சிக்கல்கள் எழுந்துள்ளன….

Read More