119 என்ற அவசர இலக்கம் குறித்து பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள விசேட அறிவித்தல் !

119 அவசர இலக்கத்தை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுத்தல் மற்றும் தேவையான குறுகிய தொலைபேசி இலக்கம்  குறித்து பொதுமக்களுக்கு விசேட அறிவித்தல் ஒன்றை பொலிஸ்துறையினர் விடுத்துள்ளனர். 119 அவசர இலக்கத்திற்கு அறிவிக்கப்பட்ட அழைப்புகளைக் கருத்தில் கொள்ளும்போது, உடனடி பொலிஸ் நடவடிக்கை தேவைப்படும் முறைப்பாடுகளுக்கு மேலதிகமாக, இந்த அவசர சேவை தவறாகப் பயன்படுத்தப்படும் சம்பவங்கள் காணப்படுகின்றன. தவறான முறைப்பாடுகள் மற்றும் பிற அவசர சேவைகளுக்கு பரிந்துரைக்கப்பட வேண்டிய முறைப்பாடுகள் இந்த இலக்கத்திற்கு அழைப்பெடுத்து தெரிவிக்கப்படுகின்றன.  அவசரகாலத்தில் பொலிஸ் 119 அவசர…

Read More

பேரிடர் காலத்தில் அரசாங்கம் எடுத்த சுகாதார நடவடிக்கைகளுக்கு உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் பாராட்டு!

பேரிடரினால் ஏற்படும் நோய் பரவலைக் கட்டுப்படுத்த அரசாங்கம் மற்றும் சுகாதாரத் துறை மேற்கொண்டுவரும் முயற்சிகளை உலக சுகாதார அமைப்பின் (WHO) பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதானோம் பாராட்டியுள்ளார். பாரம்பரிய மருத்துவம் குறித்து உலக சுகாதார அமைப்பின் (WHO) இரண்டாவது உலகளாவிய உச்சி மாநாடு புதன்கிழமை (17) இந்தியாவின் புதுடில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ஆரம்பமானது. அந்த வகையில் மாநாட்டில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜெயதிஸ்ஸவிற்கும் உலக சுகாதார அமைப்பின்…

Read More

காத்தான்குடியில் சிகை அலங்கார நிலையத்தில் கத்திக்குத்து : தாக்குதலை மேற்கொண்டவர் பொலிஸில் சரண்

காத்தான்குடியில் சிகை அலங்கார நிலையத்தில் சிகை அலங்காரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இளைஞன் மீது மேற்கொண்ட கத்திக்குத்து தாக்குதலில் அவர் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்ட இளைஞன் அங்கிருந்து தப்பியோடி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை (18) இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

நெருக்கடியான காலகட்டத்தில் இலங்கை மக்களுடன் ஜப்பான் முழு ஒற்றுமையுடன் நிற்கும் – ஜப்பான் தூதுவர்

நெருக்கடியான காலகட்டத்தில் இலங்கை மக்களுடன் ஜப்பான் அரசு முழு ஒற்றுமையுடன் நிற்கிறது என ஜப்பான் தூதுவர் அகியோ இசொமதா தெரிவித்தார். டித்வா சூறாவளி காரணமாக ஏற்பட்ட பேரிடருக்கு ஆதரவளிக்கும் வகையில், ஜப்பான் அரசு யுனிசெஃப் (UNICEF) ஊடாக இலங்கைக்கு சுகாதார உபகரணங்கள் மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளது. இதனடிப்படையில், டிசம்பர் 18 ஆம் திகதி இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசொமதா, ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் பிரதிநிதி எம்மா பிரிகாம் ஆகியோருடன் இணைந்து, வீடமைப்பு, நிர்மாணம்…

Read More

ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு யூரோ 2.35 மில்லியனுக்கும் அதிகமான மனிதாபிமான உதவி

இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான வலுவான பங்குதாரர்கள் மற்றும், இலங்கையை மீட்டெடுக்கும் செயல்முறைக்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்கும் வகையில், யூரோ 2.35 மில்லியனுக்கும் அதிகமான மனிதாபிமான நிவாரணப் பொருட்களை இந்நாட்டிற்கு அனுப்பியுள்ளது. இதில் IFRC இனால் யூரோ 500,000 மற்றும் DG-European Civil Protection and Humanitarian Aid Operations (ECHO) பங்குதாரர்கள் WFP மற்றும் UNICEF இனால் யூரோ1.85 மில்லியன் ஆகியவை அடங்கும். மேலும், Union Civil Protection Mechanism (UCPM) சேர்ந்த 37 நாடுகள்,…

Read More

‘சமூக சக்தி’ திட்டத்தை செயல்படுத்துவது குறித்து மாத்தறை மற்றும் மொனராகலை மாவட்ட அரச அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்த நடவடிக்கை

வறுமை ஒழிப்பை நோக்கமாகக் கொண்ட ‘சமூக சக்தி’ தேசிய திட்டத்தை அடிமட்ட அளவில் செயல்படுத்துவதற்கான அரச அதிகாரிகளுக்கான பயிற்சித் திட்டம், ரன்மினிதென்ன டெலி சினிமா கிராமத்தில் (16) ஆரம்பமானது. (17) தொடரும் இந்தப் பயிற்சியில் மாத்தறை மற்றும் மொனராகலை மாவட்டங்களைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர். ஒவ்வொரு கிராமத்திலும் சமூக அபிவிருத்தி சபைகளை நிறுவுவதன் மூலம் இத்திட்டத்தை முன்னெடுப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். இதில் பிரதேச மற்றும் மாவட்ட செயலக அதிகாரிகளுக்குப் பாரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. சமூக வலுவூட்டலுக்காக…

Read More

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் ஆர்ப்பாட்டம்!

அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக வைத்தியர்கள் மற்றும் ஏனைய பணியாளர்கள் இணைந்து புதன்கிழமை (17) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை ஏற்பாடு செய்து தருமாறு கோரி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அண்மையில், அநுராதபுரம் போதனா வைத்தியசாலையிலிருந்து பொலிஸாரால் தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன. இதனால் வைத்தியசாலையின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.  எனவே, அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை ஏற்பாடு செய்து தருமாறு வைத்தியர்கள் மற்றும் ஏனைய பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம்…

Read More

அனர்த்தத்தில் வீடு இழந்தவர்களுக்காக மஹகந்தவில் மாடிவீடு

அனர்த்தத்தில் வீடு இழந்தவர்களுக்கு கண்டி, மஹகந்த பிரதேசத்தில் மாடி வீட்டுத்திட்டம் ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கங்கவட்ட கோரளை பிரதேச சபைத் தலைவர் சேனாதீர தெரிவித்தார். கண்டி மாவட்ட செயலகத்தில், மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் தனுர திசாநாயக்கா தலைமையில் நடைபெற்ற கங்கவட்ட கோரளை பிரதேச அபிவிருத்தி சபைக் கூட்டத்திலே அவர் இதனைத் தெரிவித்தார்.  அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த அனர்த்தத்தின்போது கண்டி கங்கவட்ட கோரளைப் பிரதேசத்தில் வீடுகளை முற்றாக இழந்தவர்களுக்காக இந்த மாடிவீட்டுத் திட்டம் அமைக்கப்படவுள்ளதாக கூறினார்.

Read More

எழுவைதீவிற்கு விஜயம் செய்து பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வு!

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையிலான குழுவினர், நேற்று (16) எழுவைதீவு பகுதிக்குக் கள விஜயம் மேற்கொண்டு மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்தனர். இந்த விஜயத்தின் முக்கிய அம்சங்கள்: இந்தக் கள விஜயத்தில் மேலதிக அரசாங்க அதிபர், ஊர்காவற்துறை பிரதேச செயலாளர் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Read More

நெற்செய்கையை ஊடறுத்து அடாவடியாக யானைவேலி அமைக்கும் மகாவலி 

முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் பகுதியில் தமிழர்களின் பூர்வீக மானவாரி விவசாய நிலமான கூமடுகண்டல் ஊடாக மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை அத்துமீறி யானைவேலி அமைப்பதாகப் புகார் எழுந்துள்ளது. பெரும்பான்மையினத்தவர்களுக்கு வழங்கப்பட்ட காணிகளைப் பாதுகாப்பதாகக் கூறி, தமிழ் மக்களின் நெற்செய்கை நிலங்களை ஊடறுத்து இந்த வேலி அமைக்கப்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேற்று (16) நேரடியாகச் சென்று கள ஆய்வு மேற்கொண்டார். நில அபகரிப்பு நோக்கிலான இந்த அடாவடித்தனமான செயலுக்கு…

Read More