போதைப்பொருட்களுடன் தம்பதியினர் கைது

25 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒரு தம்பதியினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது மொரட்டுமுல்ல காவல் அதிகார வரம்பிற்குட்பட்ட கட்டுபெத்த பகுதியில் இந்த கைது நடந்தது. போதைப்பொருள் கடத்துவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், முச்சக்கர வண்டியை சோதனை செய்தபோது, ​​15 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் (17) போலீசார் கைது செய்துள்ளனர். சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது தெரியவந்த தகவலின்படி, அகுலன பகுதியில் உள்ள அவரது வீட்டை சோதனை செய்தபோது, ​​சந்தேக நபரின் மனைவியையும் 10 கிராம்…

Read More

இரத்தினபுரியில் தொடர்ச்சியான மழையால் பல பகுதிகளில் மண்சரிவு

இரத்தினபுரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக இம்மாவட்டத்தில் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டு வருகிறது. இதனால், மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு இரத்தினபுரி மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது . இம்மாவட்டத்தில் 500 க்கு மேற்பட்ட மண்சரிவு அபாயமுள்ள பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  இரத்தினபுரி கொழும்பு பிரதான பாதையில்  புதிய நகரப்பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது இதனால்  ஒருவழி பாதை மட்டுமே போக்குவரத்துக்காக திறக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

Read More

கொலன்னாவை முதல் கொழும்பு துறைமுகம் வரை குழாய் அமைக்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

கொலன்னாவை முனையம் தொடக்கம் கொழும்பு துறைமுகம் வரைக்குமான குழாய் வழியில் குழாயிடல் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.  2025.11.17 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்க்கிழமை ( 18 நவம்பர் 2025) ஊடக அமைச்சில் இடம்பெற்றது. இறக்குமதி செய்யப்படும் பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள் கொழும்பு துறைமுகம் தொடக்கம் கொலன்னாவை முனையம் வரைக்குமான 05 குழாய் வழிகள் மூலம் எடுத்துச் செல்லப்படுகின்றது. குறித்த குழாய் வழிகள் மிகவும் பழையவையாவதுடன், கடந்த…

Read More

பருத்தித்துறை நகரசபைக்கு எதிராக போராட்டம்!

யாழ்ப்பாணம் – வடமராட்சி பருத்தித்துறை நகரசபைக்கு எதிராக பருத்தித்துறை கொட்டடி மக்கள் போராட்டம் ஒன்றினை இன்று திங்கட்கிழமை (17) காலை முன்னெடுத்துள்ளனர். கொட்டடி மீனவர்களின் படகு தரிப்பிடத்திற்காக தூர்வார்ப்பட்ட மண்ணை இதுவரை அகற்றவில்லை என தெரிவித்தே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதில் குறித்த மண்ணை அகற்றுமாறு கோரி தவிசாளரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

Read More

அசாதாரண காலநிலை காரணமாக யாழில் 3 குடும்பகள் பாதிப்பு!

நாடு முழுவதும் நிலவுகின்ற அசாதாரண காலநிலை காரணமாக யாழ்ப்பாணத்தில் மூன்று குடும்பங்களை சேர்ந்த 10பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். வேலணை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/28 கிராம சேவகர் பிரிவில் உள்ள புங்குடுதீவில் இந்த பாதிப்பு இடம்பெற்றுள்ளது. கடுமையான காற்றுடன் கூடிய கனமழை காரணமாக அங்கு மூன்று வீடுகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Read More
arrest

வெளிநாட்டு பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முற்பட்ட சம்பவம் ; கைதான நபருக்கு விளக்கமறியல்

திருக்கோவில் பிரதேசத்தில் சுற்றுலா வந்து நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு அந்தரங்க உறுப்பை காட்டி பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பொகவந்தலாவை பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர்  பொத்துவில் நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எதிர்வரும் 28 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று திங்கட்கிழமை (17) உத்தரவிட்டார். பொத்துவில் அறுகம்பை பிரதேசத்துக்கு அக்கரைப்பற்று பொத்துவில் பிரதான வீதி ஊடாக வீதியால் முச்சக்கர வண்டி ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணியான…

Read More

வானில் லியோனிட்ஸ் விண்கல் பொழியும்

வானில் இன்று திங்கட்கிழமை (17) இரவு முதல் செவ்வாய்க்கிழமை (18) அதிகாலை வரை லியோனிட்ஸ் விண்கல் பொழியும் என வானியலாளர்கள் தெரிவித்தனர். இந்த அறிய காட்சியை வெற்று  கண்ணால் பார்க்க முடியும் எனவும் சிறப்பு உபகரணங்கள் எதுவும் தேவையில்லை எனவும்  வானியல் சிரேஷ்ட விரிவுரையாளர் கிஹான் வீரசேகர தெரிவித்தார்.

Read More

கத்தியால் தாக்கப்பட்டு வயோதிபர் படுகாயம்!

களுத்துறை – பயாகலை பிரதேசத்தில் இரு நபர்களுக்கு இயைடில் ஏற்பட்ட தகராறை சமரசம் செய்ய முயன்ற வயோதிபர் ஒருவர் மன்னா கத்தியால் தாக்கப்பட்டு படுகாயமடைந்துள்ளதாக பயாகலை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) மாலை 05.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பயாகலை பிரதேசத்தில் வயோதிபர் ஒருவர் தனது மருமகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுக்கொண்டிருக்கும் போது உணவகம் ஒன்றுக்கு அருகில் வீதியின் குறுக்கே முச்சக்கரவண்டி ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதை கண்டுள்ளனர். பின்னர் மோட்டார் சைக்கிளில்…

Read More

அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..!

திருகோணமலை கடற்கரையை அண்டிய பகுதியில் புதிதாக புத்தர்சிலை வைக்கும் வைபவம் இன்று திங்கட்கிழமை  (17) பிற்பகல் 1.35 மணிக்கு பௌத்த சம்பிரதாய அடிப்படையில் இடம்பெற்றது. நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) இரவு அவசர அவசரமாக தற்காலிக கட்டடம் அமைத்து புத்தர்சிலை கொண்டு வந்து வைக்கமுற்பட்ட போது ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக மீண்டும் புத்தர்சிலை கொண்டு செல்லப்பட்டு இன்றையதினம் மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இது தொடர்பாக இன்று பாராளுமன்றத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் #ஆனந்த_விஜயபால அவர்கள் புத்தர்சிலைக்கு பாதுகாப்பு…

Read More

பெரிய வெங்காய விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நிரந்தர வேலைத்திட்டமொன்றை தயாரிப்பது குறித்து ஆராய்வு

உள்ளூர் பெரிய வெங்காய விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முறையான வேலைத்திட்டத்தை உருவாக்குவது குறித்து விவசாயிகளுடனான கலந்துரையாடல் இன்று (17) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த மற்றும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது. நெல் பயிற்செய்கை தொடர்பில் நீண்ட காலமாக கவனம் செலுத்தி நெல் விவசாயியைப் பாதுகாக்க ஒரு குறிப்பிட்ட திட்டம் வகுக்கப்பட்டுள்ள…

Read More