காலி, அக்மீமனவில் துப்பாக்கிச்சூடு

காலி, அக்மீமன, வெவேகொடவத்த, திசாநாயக்க மாவத்தையில் உள்ள ஒரு வீட்டில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளதாக முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. இன்று (23) அதிகாலை 5 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று (23) அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் 9 மில்லிமீற்றர் ரக துப்பாக்கியால் வீடு ஒன்றை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட வீட்டின்…

Read More

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தோட்டாக்களுடன் ஒருவர் கைது

பயணப்பொதியில் மறைத்து வைத்துக் கொண்டுவரப்பட்ட தோட்டாக்களுடன், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த 30 வயதுடைவரே கைதாகியுள்ளார். குறித்த நபர் குவைத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குவைத்தில் இருந்து கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்துக்கு வந்து, சென்னை நோக்கிப் பயணிக்கவிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டதாக விமான நிலைய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Read More

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு விலைகளை திருத்தியமைக்க நடவடிக்கை!

இலங்கை நாடாளுமன்ற ஊழியர்களின் கோரிக்கைகளைத் தொடர்ந்து, நாடாளுமன்ற ஊழியர்களுக்கான சமீபத்தில் உயர்த்தப்பட்ட உணவு விலைகளை திருத்தியமைக்க நாடாளுமன்ற அவைக் குழு முடிவு செய்துள்ளதாக நாடாளுமன்றத் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது. ஜூன் 1, 2025 முதல் நிர்வாக தர அதிகாரிக்கு மாதம் ரூ. 4,000 மற்றும் நிர்வாகமற்ற ஊழியர் உறுப்பினருக்கு மாதம் ரூ. 2,500 வசூலிக்க நாடாளுமன்ற அவைக் குழு முன்னதாக முடிவு செய்திருந்தது. இருப்பினும், நாடாளுமன்ற ஊழியர்களின் கோரிக்கைகளைக் கருத்தில் கொண்ட பிறகு, ஜூலை 1 முதல்…

Read More

மத்திய கிழக்கில் நாளுக்கு நாள் மோசமாகும் நிலைமை : இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!

ஈரானின் அணு மின் நிலையங்களுக்கு அருகிலுள்ள பகுதிகளில் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, இஸ்ரேலின் வடக்கு மற்றும் மத்திய நகர்ப்புறங்களில் பல ஈரானிய ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதர் நிமல் பண்டாரா கூறுகிறார். மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் குறித்து அறிக்கை வெளியிட்ட அவர், நாள் முழுவதும் நிலைமை உருவாகக்கூடும் என்று இஸ்ரேலிய பாதுகாப்பு ஆணையம் எச்சரித்துள்ளதாகக் கூறினார். அதன்படி, இந்த சூழ்நிலையில் சாத்தியமான தாக்குதல்களில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள இஸ்ரேலில் வசிக்கும்…

Read More

டிஜிட்டல் கற்றலை அறிமுகப்படுத்த தீர்மானம்

சகல பாடசாலைகளிலும் மனித மற்றும் பௌதிக வளங்களின் நியாயமான விநியோகத்தை உறுதி செய்யும் அதேவேளை டிஜிட்டல் கற்றல் முறைமைகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய வலியுறுத்தினார். உயர் கல்வி, கல்வி மற்றும் தொழில்சார் பயிற்சி அமைச்சர் என்ற வகையில் பிரதமர், டிஜிட்டல் கல்வி நிலை மாற்றத்தை (வகுப்புகள் 6-13) மேற்பார்வையிட அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட பணிக்குழுவுடன் அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த கருத்துகளை வெளியிட்டார். உரிய சவால்களை எதிர்கொண்டு தேவையான கொள்கைகளை செயற்படுத்து…

Read More

யாழில் போதைப்பொருளுடன் பெண் உட்பட இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நாவாந்துறை பகுதியை சேர்ந்த பெண் ஒருவரையும் இளைஞன் ஒருவரையும் பொலிஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவர்களிடம் இருந்து 440 மில்லி கிராம் ஐஸ் போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

Read More

ஓமந்தை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரிப்பு.

யாழ். ஓமந்தை கார் விபத்தில் படுகாயமடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சுவாமிநாத ஐயா என்றழைக்கப்படும் சந்திரன் ஐயா என்பவரே நேற்றையதினம் வெள்ளிக்கிழமை(ஜூன் 20) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வவுனியா ஓமந்தை பகுதியில் கடந்த 26ஆம் திகதி அதிகாலை கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கார், எதிரே வந்த டிப்பருடன் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரக அலுவலர் பிரம்மஸ்ரீ சச்சிதானந்த குருக்கள் பிரபாகரசர்மா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்….

Read More

இலங்கையில் இன்றைய தினமும் கடும் மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த…

Read More

மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு பதவி உயர்வு.!

மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக இரண்டு, மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை ஒப்புதல் அளித்துள்ளது. சபாநாயகர் “ஜகத் விக்ரமரத்ன” தலைமையிலான அரசியலமைப்பு பேரவை அண்மையில் கூடி, தலைமை நீதியரசர் “முர்து பெர்னாண்டோவின்” பரிந்துரையின் பேரில், ஜனாதிபதி “அநுர குமார திசாநாயக்க” சமர்ப்பித்த பரிந்துரைகளை அங்கீகரித்துள்ளது. இதன்படி, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி “ஆதித்ய பட்டபெந்திகே” மற்றும் நீதிமன்ற சிவில் மேல்முறையீடுகள் நீதிமன்ற நீதிபதி “பிராங்க் குணரத்ன” ஆகியோரை மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக நியமிப்பதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது….

Read More

செயற்திறன் இல்லாவிட்டால் அரசாங்கத்தை வரட்டியடிக்கலாம் – சபாநாயகர்

ஒரு அரசாங்கம் செயற்திறன் அற்றதாக காணப்படுமிடத்து பொதுமக்கள் முன்வந்து அவ்வரசாங்கத்தை விரட்டியடிக்க வேண்டும் என்று சபாநாயகர் மருத்துவர் ஜகத் விக்கிரமரத்ன வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் அவர், அரசாங்கம் சரியாக செயற்படாத நிலையில் அதனை விரட்டியடிப்பது ஒவ்வொரு பிரஜையின் கடமையாகும். அரசாங்கத்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது பொதுமக்களின் பொறுப்புகளில் ஒன்றாகும் அதனை பொதுமக்கள் விட்டுகொடுத்துவிடக் கூடாது என்று உரையாற்றினார்.

Read More