பல்கலைக்கழக மரணம் குறித்து விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனத்தின் அறிக்கை

சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பொறியியல் பீடத்தில் இரண்டாம் ஆண்டு படிக்கும் 23 வயதுடைய சரித் தில்ஷான் மாணவனின் திடீர் மரணம் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தால் தங்களது விரிவுரையாளர்கள் சம்மேளனம் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனத்தின் செயலாளரும், சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இளங்கசிங்க கருத்து வௌியிடுகையில், இந்த துயர சம்பவத்திற்கு பகிடிவதையே காரணம் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Read More

இன்றும் மழையுடனான வானிலை

அயனமண்டலங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு வலயம் (வட அரைக் கோளத்திலிருந்தும் தென் அரைக்கோளத்திலிருந்தும் வீசும் காற்று ஒடுங்கும் இடம்) தீவின் வானிலையை பாதித்துக் கொண்டு இருக்கின்றது. மேல், மத்திய, சப்ரகமுவ, தென், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலை அல்லது இரவில் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய சில பிரதேசங்களில்…

Read More

பெரும்பான்மையை மீண்டும் நிரூபித்த தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம்.

தேசிய மக்கள் சக்தியின் வருடாந்த மே தினக் கூட்டம் சற்று முன்னர் கொழும்பு காலி முகத்திடலில் நடைபெற்றது.. இலட்சக்கணக்கான ஆதரவாளர்களின் அதாவது கிட்டத்தட்ட கால் மில்லியன் அரசாங்க ஆதரவாளர்கள் பங்குபற்றுதலில் இந்த மே தினக் கூட்டம் நடைபெற்றது.. ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பல அரசியல்வாதிகள் இதன்போது கலந்து கொண்டனர். மேலும், சீன மற்றும் இந்திய கம்யூனிசக் கட்சிகளின் பிரதிநிதிகளும் இந்த மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளமை சிறப்பம்சமாகும். கூட்டத்தின்…

Read More

கட்சிகளின் மே தின கூட்டங்கள் இடம்பெறும் இடங்கள்

நாளைய (01) சர்வதேச தொழிலாளர் தினத்தை கொண்டாட அனைத்து தரப்பினரும் தற்போது தயாராகி வருகின்றனர். இதற்கமைய தேசிய மக்கள் சக்தி தனது மே தினக் கூட்டத்தை காலி முகத்திடலில் நடத்த திட்டமிட்டுள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில், “நாட்டைக் கட்டியெழுப்பும் மக்கள் சக்தி அணிதிரளும் என்ற தொனிப்பொருளில் இந்த மே தினக் கொண்டாட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். அதேநேரம் ஐக்கிய மக்கள்…

Read More

வவுனியாவில் விற்பனை செய்யப்பட்ட பழுதடைந்த முட்டைகள்

வவுனியா, பட்டாணிச்சூர் பகுதியில் உள்ள முட்டை விற்பனை நிலையத்தில் பாடசாலை உட்பட பலருக்கு பழுதடைந்த முட்டை விற்பனை செய்ததாக கிடைத்த முறைப்பாட்டையடுத்து சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை நடவடிக்கையை இன்று (30) மாலை மேற்கொண்டனர். இதன்போது பொது சகாதார பரிசோதகர்களால் பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட முட்டைகளும் மீட்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டன. வவுனியா, பட்டாணிச்சூர் பகுதியில் இயங்கி வரும் முட்டை விற்பனை நிலையத்தில் இருந்து பாடசாலை மற்றும் பொது மக்களுக்கு வழங்கப்பட்ட முட்டைகள் பழுதைடைந்த நிலையில் கணப்பட்டதாக வவுனியா…

Read More

லாஃப்ஸ் எரிவாயுவின் விலையில் மாற்றமில்லை

மே மாதத்தில் லாஃப்ஸ் எரிவாயுவின் விலையில் எந்த திருத்தமும் மேற்கொள்ளப்படாது என லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி நிரோஷன் ஜே பீரிஸ் அறிவித்துள்ளார்.

Read More

எரிபொருள் விலைகளில் மாற்றம்- வௌியான அறிவிப்பு

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று(30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய, 299 ரூபாவாக இருந்த ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 6 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 293 ரூபாவாகும். 361 ரூபாவாக இருந்த ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 341 ரூபாவாகும். இதேவேளை…

Read More

மின்சாரக் கட்டணத்தை 50 வீதமாக அதிகரிக்கக் கோரிக்கை

ஜூலை மாதம் முதல் மின்சாரக் கட்டணங்களை சுமார் ஐம்பது சதவீதம் அதிகரிக்க வேண்டும் என்று இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாட்டு ஆணையத்திடம் முன்மொழிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இந்த முன்மொழிவை முற்றிலுமாக நிராகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆணையத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஜனாதிபதி கலந்து கொண்ட இந்த சிறப்புக் கூட்டத்தின் போது, ​​இலங்கை மின்சார சபை அதிகாரிகள் இந்த முன்மொழிவை முன்வைத்தனர், ஆனால் ஜனாதிபதி அதற்கு உடன்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்படாவிட்டால்,…

Read More

குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்கு அஸ்வெசும நிச்சயம் – ஜனாதிபதி

குறைந்த வருமானத்தினைக் கொண்ட மேலும் 4 இலட்சம் குடும்பங்களுக்கு எதிர்வரும் ஜூன் மாதம் முதல் அஸ்வெசும நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மக்கள் சந்திப்பொன்றின் போது ஆற்றிய உரையில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் “நாட்டில் குறைந்த வருமானம் கொண்ட மிகவும் சிரமத்திற்கு மத்தியில் வாழும் மக்கள் உள்ளார்கள். அவர்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும தொகையில் நாங்கள் மாற்றங்களைச் செய்துள்ளோம்” 8500 ரூபா அஸ்வெசும தொகையைப் பெற்றவர்கள் தற்போது 10 ஆயிரம் ரூபாவைப் பெறுவார்கள். 15ஆயிரம்…

Read More

மே தினத்திற்கு மூடப்படும் மதுபானசாலைகள்

உழைப்பாளர் தினமான மே தினத்தை முன்னிட்டு நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகள் தொடர்பில் மதுவரித் திணைக்களம் அறிவிப்பொன்றை இன்று (ஏப்ரல் 30) வெயிட்டது. உலக தொழிலாளர் தினத்திற்காக நாளை (மே 1) மே தின பேரணிகள் நடைபெறும் பிரதேச செயலகப் பிரிவுகளில் இயங்கும், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையுடன் இணைக்கப்பட்ட ஹோட்டல் உரிமங்கள் (R.B. 07/08, புட்டிக் விலா அனுமதிப் பத்திர பகுதிகளின் சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டும் ) தவிர, அனைத்து சில்லறை மதுபானசாலைகளும் மூடப்பட வேண்டும்…

Read More