அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்கவேண்டும் – வஜிர அபேவர்தன

தற்போதைய அரசாங்கம் அரச ஊழியர்களின் சம்பளத்தை 50 ஆயிரம் ரூபாவாக அதிகரித்திருக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ள சம்பள அதிகரிப்பினால் எந்த பிரயோசனமும் இல்லை. ஏனெனில் 77 வருடங்களாக நாட்டில் தேங்காய் ஒன்றின் விலை 80 ரூபா முதல் 100 ரூபா வரை இருந்தது. அதனால் மக்களுக்கு வாழ்வது மிகவும் கஷ்டமான நிலை…

Read More

மின்சார கட்டண குறைப்பு சரியா? தவறா?

செலவுகள் குறையாமல் மின்சார கட்டணங்களை மேலும் குறைப்பது இலங்கை மின்சாரசபையின் நிதி செயல்திறனை கணிசமாக பாதிக்கக்கூடும் என இலங்கை மத்திய வங்கியின் வருடாந்த பொருளாதார விமர்சன அறிக்கையின் படி தெரியவந்துள்ளது. 2024 ஜனவரி மாதத்தில் மின்சார கட்டணங்கள் 20% இனால் குறைக்கப்பட்டு கட்டண திருத்தம் ஒன்று செய்யப்பட்டது. இருப்பினும், இந்த திருத்தம் உண்மையான செலவுகளை எவ்வளவு பிரதிபலிக்கிறது என்பதில் இன்னும் தெளிவின்மை உள்ளது என்று அறிக்கை குறிப்பிடுகிறது. 2024 இல் மின்சார கட்டணங்கள் இரு முறைகள் திருத்தப்பட்டுள்ளன….

Read More

பண்டிகை காலத்தில் போக்குவரத்து சேவைகள் தொடர்பில் தகவல் அறிய அழையுங்கள்.

பண்டிகை காலத்தில் போக்குவரத்து சேவைகள் தொடர்பில் தகவல் அறிந்துகொள்ளுவதற்கு அவசர தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த அவசர தொலைபேசி இலக்கங்கள் 24 மணிநேரமும் சேவையில் இருக்கும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, போக்குவரத்து சேவைகள் தொடர்பில் தகவல் அறிந்துகொள்ளுவதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் 1955 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்கு அல்லது 0712 595 555 என்ற வாட்ஸ்அப் இலக்கத்துக்கு தொடர்பு கொள்ள முடியும். மேலும், பஸ்…

Read More

24 மணி நேரமும் சேவையில் இருக்கும் அவசர தொலைபேசி இலக்கம்!

கடல்சார் பிரச்சினைகள் தொடர்பில் அறிவிப்பதற்கு 106 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளுமாறு இலங்கை கடற்கரையோர காவல் படையினர் தெரிவித்துள்ளனர். இந்த அவசர தொலைபேசி இலக்கத்தின் மூலம் கடல்சார் பாதுகாப்பு மற்றும் கடல்சார் அனர்த்தங்கள் தொடர்பில் அறிவிக்க முடியும். இந்த அவசர தொலைபேசி இலக்கமானது 24 மணிநேரமும் சேவையில் இருக்கும் எனவும் இலங்கை கடற்கரையோர காவல் படையினர் தெரிவித்துள்ளனர்.

Read More

பொலிஸ் நிலையங்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்.

பொலிஸ் நிலையங்களில் ஏற்பாடு செய்யப்படும் விருந்துபசாரங்கள் தொடர்பில் சகல பொலிஸ் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பொலிஸ் அதிகாரிகள் மற்றும் வர்த்தகச் சங்கத்தினரிடமிருந்து நிதி நன்கொடைகளைப் பெற்று பொலிஸ் நிலையங்களில் விருந்துபசாரங்களை ஏற்பாடு செய்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளைப் பாராட்டும் விதமாக அவர்களுக்கு பரிசுகள் வழங்கக்…

Read More

பண்டிகைக்காலத்தை முன்னிட்டு கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

பண்டிகைக்காலத்தை முன்னிட்டு கடவுச்சீட்டு விநியோகத்தில் சில மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய எதிர்வரும் 15, 16 மற்றும் 17ஆம் திகதிகளில் கடவுச்சீட்டு விநியோகத்திற்கான ஒருநாள் மற்றும் சாதாரண சேவைகளை வழங்குவதற்காக டோக்கன் வழங்கும் செயற்பாடு நண்பகல் 12 மணிவரை மட்டுமே இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நாட்களில் ஒரு நாள் சேவைக்காக நடைமுறையில் உள்ள 24 மணி நேர சேவை நாட்களில் இடம்பெறாது என குடிவரவு மற்றும் குடியகல்வு பதில் கட்டுப்பாட்டாளர்…

Read More

நீண்ட விடுமுறை – அதீத மின் உற்பத்தி – இலங்கை மின்சார சபை கோரிக்கை!

கூரைகளில் பொருத்தப்பட்டிருக்கும் சூரியசக்தி படலங்களைப் பகல் நேரங்களில் மாலை 3:00 மணி வரை தாமாகவே முன்வந்து அணைக்குமாறு இலங்கை மின்சார சபை உரிமையாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. நீண்ட விடுமுறைக் காலத்தில் தேசிய மின்சார பாவனையில் ஏற்பட்ட வீழ்ச்சி மற்றும் மறுபுறம் இது சூரியன் சுச்சம் குடுக்கும் காலம் என்பதால் அதிக சூரிய மின் உற்பத்தி நடைபெறுவதால், தேசிய மின்சாரக் கட்டமைப்பில் அழுத்தம் ஏற்பட்டுள்ளது இஇதன் காரணமாகவே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நாளை…

Read More

பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயம்

கிரிபத்கொடை, கால சந்தி பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் அருகில் இன்று (11) அதிகாலை பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 29 வயதுடைய நபர் ஒருவரே துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமுற்றுள்ளார்.

Read More

பண்டிகை காலத்திற்காக விசேட போக்குவரத்து சேவைகள்

பண்டிகை காலத்தில் தூரப் பிரயாணங்களை மேற்கொள்வோரின் வசதி கருதி, விசேட போக்குவரத்து சேவைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்காக 500 பேருந்துகள் மேலதிகமாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. அத்துடன் 40 தொடருந்து சேவைகள் மேலதிகமாக சேவையில் இணைக்கப்பட்டுள்ளதாகத் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து, பதுளை, பெலியத்த, திருகோணமலை, கண்டி, அனுராதபுரம் மற்றும் காலி ஆகிய நகரங்களுக்கு இந்த விசேட தொடருந்து சேவைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

Read More

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அநுராதபுரம், மாத்தளை மற்றும் மன்னார் மாவட்டங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவில் இடைக்கிடையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேல்…

Read More