கடற்படையின் சோதனையில் சிக்கிய போதைப்பொருட்கள்

இலங்கை கடற்படை, மேற்கு கடற்கரையில் உள்ள கடல் பகுதியில், போதைப்பொருள் தடுப்பு பணியகத்துடன் இணைந்து நடத்திய சிறப்பு நடவடிக்கையில் பாரியளவிலான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையானது, சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலை தடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டது. கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் வகைகள், அளவு மற்றும் இதில் ஈடுபட்டவர்கள் பற்றிய முழுமையான விபரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. இதுபோன்ற நடவடிக்கைகள், பிராந்தியத்தில் போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்துவதற்காக இலங்கை கடற்படை மற்றும் சட்ட அமலாக்க நிறுவனங்களால் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன. மேலதிக தகவல்கள் விரைவில்…

Read More

மட்டக்களப்பில் கடலில் மூழ்கிய சிறுவர்கள்

மட்டக்களப்பு, நாசிவன்தீவு கடற்பகுதியில் நீராடிக் கொண்டிருந்த 7 வயதுடைய இரு சிறுவர்கள் நீரில் மூழ்கிய நிலையில் காப்பாற்றப்பட்டு, மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (4) மாலை 6 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர். வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட காவத்துமுனை பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், உறவினர்களுடன் நேற்று மாலை நாசிவன்தீவு கடற்கரைப் பகுதிக்குச் சென்று கடலில் நீராடிக் கொண்டிருந்தனர். இதன்போது, 7 வயதுடைய ஆண் மற்றும் பெண் சிறுவர்கள் இருவரும் கடல்…

Read More

இன்றைய வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய, வட மத்திய, ஊவா மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. குறித்த சந்தர்ப்பங்களில் பலத்த மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடுமென திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. காலி, மாத்தறை, மன்னார், வவுனியா மாவட்டங்களின் சில இடங்களிலும் மழையுடன் பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பலத்த மழையுடனான வானிலை நிலவும் சந்தர்ப்பங்களில் கடும் காற்றும் வீசக்கூடுமென தெரிவித்துள்ளது. இவ்வாறான சந்தர்ப்பங்களில்…

Read More

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் அதிகரிக்கும் முறைப்பாடுகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 71 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மேலும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கடந்த 20 ஆம் திகதியிலிருந்து நேற்று வரை 527 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதில் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 4 முறைப்பாடுகளும், சட்டத்தை மீறியமை தொடர்பில் 492 முறைப்பாடுகளும் வேறு குற்றங்கள் தொடர்பில் 29 முறைப்பாடுகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

Read More

இந்திய பிரதமருக்கு இலங்கையில் அமோக வரவேற்பு.

இலங்கையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பதவியேற்ற பின்னர் மோடியின் முதல் உத்தியோக பூர்வ இலங்கை விஜயமாக இது அமைந்துள்ளது. இந்த நிலையில் தனது எக்ஸ் தளத்தில் இந்திய சமூகத்தினரின் வரவேற்பு தொடர்பில் காணொளியொன்றை பதிவிட்டு “அவர்களது அன்பான அரவணைப்பு மற்றும் உற்சாகத்தினால் நான் மிகுந்த நெகிழ்ச்சி அடைந்தேன். அவர்களுக்கு எனது நன்றி!” எனவும் கூறியுள்ளார். அதேநேரம் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி அநுர குமார திஸ்ஸாநாயக்க தலைமையில் இன்று (ஏப்ரல்…

Read More

இந்திய பிரதமரின் வருகையும் , இலங்கையில் உருவான பேசுபொருளும்.

இந்திய பிரதமர் மோடியின் இலங்கை வருகைக்காக கொழும்பில் வைக்கப்பட்டுள்ள வரவேற்பு பதாகைகளில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்ட சர்ச்சைகளையடுத்து, பதாகையின் வடிவமைப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார். மாற்றம் செய்யப்பட்ட வடிவமைப்பை தனது Facebook கணக்கிலும் பகிர்ந்துள்ளார். இந்த மாற்றம், டிஜிட்டல் வடிவமைப்பில் மாத்திரமா அல்லது கொழும்பில் வைக்கப்பட்டுள்ள பதாகைகளிலும் மேற்கொள்ளப்படுகிறதா என்பதை நாம் பொறுத்திருந்தே பார்க்கவேண்டும். இதற்கிடையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சற்றுமுன் நாட்டை வந்தடைந்துள்ளார். இலங்கை வந்தடைந்த…

Read More

அமெரிக்கா விதித்துள்ள புதியசுங்கவரிகுறித்து பிரதிபலிக்கும்  இலங்கைஆடைத்தொழில்துறை

அமெரிக்காவின் புதிய சுங்கக் கொள்கைக்குஇலங்கை ஆடைத் தொழிற்துறை எதிர்ப்பு அமெரிக்கா அண்மையில் அறிவித்த புதிய சுங்க வரி கொள்கை தொடர்பாக இலங்கையின் ஆடைத் தொழில்துறை தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது. இந்த புதிய சுங்க வரி மாற்றங்கள், இலங்கையின் மிகப்பெரிய ஏற்றுமதித் துறையான ஆடைத் தொழிலை பெரிதும் பாதிக்கும் என்றும், ஆயிரக்கணக்கானோரின் வேலைவாய்ப்புகள் அபாயத்தில் உள்ளன என்றும் தொழில்துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கடந்த ஏப்ரல் 2ம் திகதி அறிவித்த 10% அடிப்படை சுங்கவரியை…

Read More

வட மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை முறையாகவும் முழுமையாகவும் பயன்படுத்துவது தொடர்பில் சிறப்பு கலந்துரையாடல்

வட மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை வினைத்திறனாகவும், ஒருங்கிணைந்தும், விரைவாகவும் செலவு செய்வது தொடர்பாக கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்று (ஏப்ரல் 03) நடைபெற்றது. வழக்கமாக வடமாகாணத்திற்கு ஒதுக்கப்படும் நிதி முறையாகவும் முழுமையாகவும் பயன்படுத்தாமல் திரும்பி அனுப்பப்படுவதாக ஒரு குற்றச்சாட்டு இருந்துவரும் நிலையில் அண்மையில் இது தொடர்பான பேசுபொருள் அதிகமானதை முன்வைத்து இம்முறை தங்களுக்கு வழங்கப்பட்ட நிதியை முறையாக பயன்படுத்த முனைப்புடன் இந்த கலந்துரையாடலை முன்னெடுத்திருக்கின்றார்கள். வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் கூட்டுறவு…

Read More

இந்திய பிரதமரை வரவேற்க தயாராகியுள்ள இலங்கை

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கும் வகையில், கொழும்பின் பல்வேறு பகுதிகளில் இந்திய தேசியக் கொடிகள் மற்றும் வரவேற்பு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. மற்றும் மிக உன்னிப்பாக கண்காணிப்பும், முறையான செயற்திட்டமும் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் அதிரடி வரி மற்றும் நிபந்தனைகளின் மாற்றத்தின் பின் நடைபெறும் முக்கிய சந்திப்பாகவும் உத்தியோக பயணமாகவும் இந்திய பிரதமர் மோடியின் இலங்கை விஜயம் சர்வதேசத்தினால் பார்க்கப்படுகின்றது.

Read More

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், தென் மற்றும் வடமேல் மாகாணங்களின் கடலோரப் பகுதிகளில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும் எனவும் அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக பலத்த மழைவீழ்ச்சி பதிவாகுமென எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய, சப்ரகமுவ,…

Read More