எதிர்காலத்தில் தேசிய கலாசார நகரங்களாக உருவாக இருக்கும் 3 பெரிய நகரங்க. – அரசு திட்டம்.

எதிர்காலத்தில் இலங்கையின் அனுராதபுரம், யாழ்ப்பாணம் மற்றும் கண்டி ஆகிய 3 நகரங்களையும் தேசிய கலாசார நகரங்களாக அபிவிருத்தி செய்வதற்கு எமது அரசு திட்டமிட்டுள்ளது என பிரதமர் தெரிவித்துள்ளார். ஏப்ரல் முதலாம் திகதி பிரான்சிலுள்ள யுனெஸ்கோ தலைமையகத்தில் இடம்பெற்ற சர்வதேச நிபுணர்களின் மாநாட்டில் ‘இலங்கையின் உலக மரபுரிமை சொத்தான அனுராதபுர புனித நகரத்தை பாதுகாப்பதற்கான ஒன்றிணைந்த மற்றும் நிலையான அணுகுமுறை’ என்ற தொனிப்பொருளில் உரையாற்றிய போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கலாசார முக்கோணம் நிறுவப்பட்டுள்ள அனுராதபுரம்…

Read More

அமெரிக்கா இலங்கைக்கு விதித்துள்ள புதிய பரஸ்பர வரி – சாதக, பாதகங்களை கண்டறிய குழுவொன்றை நியமித்தார் ஜனாதிபதி

இலங்கையில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 44 சதவீத வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தீர்மானித்துள்ளார். இது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி நேற்று (ஏப்ரல் 02) அறிவித்துள்ள நிலையில், இந்த வரித்திட்டமானது நாளை மறுநாள் அதாவது ஏப்ரல் 05ம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த புதிய பரஸ்பர வரியினால் ஏற்படக்கூடிய தாக்கத்தை ஆய்வு செய்து பரிந்துரைகளை சமர்ப்பிக்க நிதி அமைச்சின் செயலாளர், மத்திய வங்கி ஆளுநர், முதலீட்டு சபை…

Read More

பட்டலந்த வதைமுகாம் தொடர்பில் மனுவொன்று சமர்ப்பிப்பு

பட்டலந்த வதைக்கூடம் தொடர்பில் விசாரணை ஒன்றைக் கோரி முன்னிலை சோஷலிஸக் கட்சியின் நிர்வாக உறுப்பினர் இந்திரானந்த டி சில்வா குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார். குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் நேற்று மனுவொன்றைச் சமர்ப்பித்து அவர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்தார். பட்டலந்த வதைக்கூடம் தொடர்பில் கடந்த அரசாங்கத்தைப் போன்று தற்போதைய அரசாங்கமும் விசாரணைகளை மேற்கொள்ளாமல் இருப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். அத்துடன் அரசாங்கம் இவ்வாறு நடந்துகொள்கின்றமை மிகவும் வருத்தமளிப்பதாக முன்னிலை சோஷலிஸக் கட்சியின் நிர்வாக உறுப்பினர் இந்திரானந்த டி…

Read More

இலங்கை பொருட்களுக்கு 44% வரி விதிக்கும் அமெரிக்கா

இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 44 சதவீத வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தீர்மானித்துள்ளார். இது தொடர்பான வரியை அமெரிக்க ஜனாதிபதி நேற்று (02) அறிவித்துள்ள நிலையில்,இந்த வரி நாளை மறுநாள் (05) முதல் அமுல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நேற்று பல நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதிப்பதை நேரலையில் அறிவித்தார். உலகெங்கிலும் 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்கான புதிய வரிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அமெரிக்காவின் வர்த்தக…

Read More

அம்பலாந்தோட்டை முக்கொலை சம்பவம் – ஒருவர் கைது

அம்பலாந்தோட்டை, எலேகொட மேற்கு பகுதியில் கடந்த பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதி நடந்த மூன்று கொலைகளுடன் தொடர்புடையதாகத் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டதில் மூன்று பேர் படுகாயமடைந்து, அம்பலாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மூவரும் உயிரிழந்தனர். அதன்படி, சம்பவம் தொடர்பாக அம்பலாந்தோட்டை பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் போது, ​​பியகம பொலிஸ் பிரிவில் நேற்று (02) மாலை அம்பலாந்தோட்டை பொலிஸாரால் ஒரு சந்தேக…

Read More

1000 ஆங்கில வார்த்தைகளை கூறி 21/2 வயது சிறுமியின் சாதனை.

சாவகச்சேரியை சேர்ந்த ஜெயகரன் தர்ஷ்விகா என்ற இரண்டரை வயது சிறுமி நாள்,காலநிலை, விலங்குகள், மின்னியல் சாதனங்கள், தொழில்கள், அன்றாட நடவடிக்கை உள்ளிட்ட 1000ம் தமிழ் சொற்களுக்கான ஆங்கில சொற்களை மிக லாவகமாக கூறி அசத்துகின்றார். சிறுமியின் இந்த அசாத்திய திறமையினை கின்னஸ் சாதனை புத்தகத்தில் பதிவதற்கான முயற்சியில் பெற்றோர் ஈடுபட்டுள்ளனர். சிறுமியின் தந்தையார் முச்சக்கரவண்டி சாரதியாகவும் தாயார் இல்லத்தரசியாகவும் உள்ளனர். சிறுமியின் எதிர்காலத்திற்க்காக அம்மா கல்வி கற்க ஆரம்பித்தார். அதனை கேட்டே வளர்ந்த சிறுமி அம்மா சில…

Read More

தேசபந்து தென்னக்கோனை பதவிநீக்குவது தொடர்பான பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் – ஏப்ரல் 8, 9 மற்றும் 10இல் பாராளுமன்றம் கூடுகின்றது.

பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னக்கோனை அப்பதவியிலிருந்து நீக்குவதற்கான விசாரணைக் குழுவொன்று அமைக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் ஏப்ரல் 08ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றுதற்காகச் சமர்ப்பிக்க சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இன்று (ஏப்ரல் 02) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். பாராளுமன்றத்தை எதிர்வரும் ஏப்ரல் 8, 9 மற்றும் 10 ஆகிய திகதிகளில் கூட்டுவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது. ஏப்ரல் 8ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை…

Read More

பாரத பிரதமர் நரேந்திர மோடியின் விஜயம் ; மூடப்படும் வீதிகள் குறித்து அறிவித்தல்

பாரத பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 4 ஆம் திகதி இலங்கைக்கு வருகைத்தர உள்ள நிலையில், அவரது விஜயத்தை முன்னிட்டு இலங்கை பொலிஸாரால் விசேட போக்குவரத்து திட்டம் செயற்படுத்தப்பட உள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி புத்திக மனதுங்க இன்று(ஏப்ரல் 2) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார். அதற்கமைய ஏப்ரல் 4ஆம் திகதி பிற்பகல் 6.00 மணி முதல் இரவு 10.00 மணிவரை கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மற்றும்…

Read More

51 சக்திபீடங்களில் முதன்மையான திருகோணமலை ஸ்ரீ அருள்மிகு பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பம்

தெட்சண கைலாயம் எனப்படுவதும் பாடல் பெற்றதுமான திருக்கோணேஸ்வரர் வீற்றிருக்கும் திருகோணமலையில் எழுந்தருளி அருளாட்சி புரியும் பூலோக மகாசக்தி , சக்தி பீடங்களில் முதன்மையானதும் வேண்டுவோர்க்கு வேண்டுவன அருளும் ஸ்ரீ அருள்மிகு பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழா சித்திரை மாதம் 1ம் திகதி செவ்வாய்க்கிழமை துவஜாரோகணம் எனப்படும் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. தினமும் காலை 5.30 மணிக்கு அபிஷேகம், காலை 7.00 மணிக்கு மூலஸ்தான பூஜை, 7.45க்கு தம்ப பூஜை, 8.30 மணிக்கு வசந்த மண்டப பூஜையுடன்…

Read More

ஐதேகவின் உப தலைவராக மீண்டும் அகில விராஜ் காரியவசம்

ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று இடம்பெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பில் கட்சியின் செயற்குழுவின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அத்துடன், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.

Read More