அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் வைத்தியர்கள் பணிபகிஷ்கரிப்பு

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியரை கத்தி முனையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக பணிபகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வைத்தியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சம்பவம் பற்றி தெரியவருவதாவது பாதிக்கப்பட்ட 32 வயது வைத்தியர் நேற்று (மார்ச் 10) தனது கடமைகளை முடித்துவிட்டு, அரசாங்கத்தால் வைத்தியர்களுக்காக வழங்கப்பட்ட அவரின் தங்குமிடத்திற்குச் சென்றுள்ளார். மாலை…

Read More

விலங்கு கணக்கெடுப்பை குறைந்த செலவில் நடத்த திட்டம்.

கால்நடை கணக்கெடுப்பு தொடர்பாக வெளியிடப்பட்ட செலவின அறிக்கைகள் குறித்து, வேளாண்மை, கால்நடை, நிலங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சகத்தின் செயலாளர் டி. பி. விக்கிரமசிங்க நேற்று (மார்ச் 10) ஒரு தெளிவுபடுத்தலை வெளியிட்டார். இந்தப் பணி மிகக் குறைந்த செலவில் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், சேவைகளை வழங்கும் அதிகாரிகள் தன்னார்வத் தொண்டு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் மேலும், விவசாயத் துறையில் விலங்கு சேதம் குறித்த தகவல்கள் நீண்ட காலமாகப் பதிவாகியிருந்தாலும், இன்றுவரை இந்தப் பிரச்சினை குறித்த துல்லியமான மதிப்பீடு இல்லாததால், இந்தக்…

Read More

கரிம உற்பத்தியை நெறிப்படுத்துவதற்கான திட்டம்

சந்தையில் விற்பனைக்கு வழங்கப்படும் கரிமப் பொருட்களை ஒழுங்குபடுத்துவதற்காக சர்வதேச வர்த்தக ஆணையமும் நுகர்வோர் விவகார ஆணையமும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளன. இது சர்வதேச வர்த்தக ஆணையத்திற்கும் நுகர்வோர் விவகார ஆணையத்திற்கும் இடையிலான கலந்துரையாடலின் போது நடந்தது. சர்வதேச சந்தைக்கு ஏற்றவாறு தற்போதுள்ள சட்டங்களை புதுப்பிப்பதே முக்கிய நோக்கம் என்று அமைப்பின் பிரதிநிதிகள் தெரிவித்தனர். அதே நேரத்தில், நுகர்வோரை தவறாக வழிநடத்தாமல், தேவையான தரமான பொருட்கள் சந்தையில் நியாயமான விலையில் விற்கப்படுவதை உறுதி செய்வதற்காக விழிப்புணர்வை ஏற்படுத்துதல்…

Read More

CLEAN SRILANKA வேலைத்திட்டத்துடன் இணைந்து விசேட பணிகள்

CLEAN SRILANKA வேலைத்திட்டத்துடன் இணைந்து இன்று (11) முதல் கொழும்பு மாவட்டத்தில் வாகன புகை சோதனை தொடர்பான சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. ஒரு மாத காலத்துக்குள் 1000 வாகனங்களில் புகைப் பரிசோதனைகளை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வாகன உமிழ்வு நம்பிக்கை நிதியத்தின் பணிப்பாளர் தசுன் கமகே தெரிவித்துள்ளார். மேலும் புகை பரிசோதனையில் தோல்வி அடையும் வாகனங்களுக்கும் பராமரிப்பு உத்தரவு வழங்கப்படும் எனவும்,அதன்படி, 14 நாட்களுக்குள் பராமரிப்பு ஆணையின்படி திருத்தங்கள்…

Read More

இலங்கைக்கு கிடைத்த மற்றுமொரு அங்கிகாரம்

உலகில் மிகக் குறைந்த பயங்கரவாத அச்சுறுத்தல்கள் உள்ள நாடுகளில் ஒன்றாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில் உலகளாவிய பயங்கரவாதத்தின் தாக்கம் குறித்து நடத்தப்பட்ட பகுப்பாய்வுகளின் அடிப்படையில், 2025 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய பயங்கரவாத குறியீட்டால் பட்டியல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது. பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான சர்வதேச நிறுவனத்தினால் பயங்கரவாதத்தின் தாக்கத்தின் அடிப்படையில் நாடுகளை தரவரிசைப் படுத்துதல் இந்த உலகளாவிய பயங்கரவாத குறியீட்டால் மேற்கொள்ளப்படுகிறது. தெற்காசிய பிராந்தியத்தில் கடந்த 5 ஆண்டுகளில் எந்தவொரு பயங்கரவாதத் தாக்குதல்களும் பதிவாகாத நாடுகளாக…

Read More

க.பொ.த சாதாரண தர பரீட்சையுடன் தொடர்புடைய மேலதிக வகுப்புகள் இன்றுடன் நிறைவு

2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சையுடன் தொடர்புடைய மேலதிக வகுப்புகள்அனைத்தும் இன்று (11) நள்ளிரவு 12.00 மணி முதல் தடை செய்யப்படுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். மேலும், இந்த சட்டத்தை மீறும் கல்வி ஆசிரியர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை சாதாரண தர பரீட்சை மார்ச் 17ஆம் திகதி ஆரம்பமாகி மார்ச் 26ஆம் திகதி நிறைவடைகின்றது

Read More

நாட்டின் வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று (11) அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், மற்ற பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா, பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த…

Read More

பிரபல நடிகை “மாலினி பொன்சேகா” வைத்தியசாலையில் அனுமதி.

இலங்கை சிங்கள சினிமாவின் நடிப்பரசி என மகுடம் சூட்டப்பட்ட மாலினி பொன்சேகாவின் உடல்நிலை மோசமடைந்து நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில காலமாக அவர் புற்று நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார் எனவும் அதற்க்கான உரிய சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள கவனயீனமாக இருந்ததாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையிலேயே நோயின் வீரியம் அதிகரித்தமையினால் தற்பொழுது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Read More

மாணவர்களுக்கு 2028-ல் அறிமுகமாகவுள்ள புதிய பரீட்சை.

மாணவர்களின் மன உளைச்சலை குறைக்கும் விதமான பரீட்சை ஒன்றை 2028ம் ஆண்டு நடத்த உள்ளதாக நாடளுமன்றத்தின் இன்றைய(மார்ச் 10) அமர்வின் போது பிரதமர் மற்றும் கல்வி அமைச்சரான ஹரிணி அமரசூரிய மாணவர்களின் மன உளைச்சலை குறைக்கும் விதத்திலான பரீட்சை ஒன்றை 2028ல் அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்ததுடன் இதன்போது தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானம் தொடர்பிலும் தெளிவூட்டினார், புலமைப்பரிசில் பரீட்சை மூலம் ஏற்படும் குழந்தைகளின் மன அழுத்தத்தை குறைக்க அரசாங்கம் நிபுணர் குழுவொன்றை நியமிக்கும் எனவும்…

Read More

25 இலட்சம் தென்னங்கன்றுகளை நடுவதற்குத் திட்டம்

இந்த வருடத்தில் 25 இலட்சம் தென்னங்கன்றுகளை நடுவதற்குத் திட்டமிட்டுள்ளதாகத் தென்னைப் பயிர்ச்செய்கை சபையின் தலைவர் வைத்தியர் சுனிமல் ஜயகொடி தெரிவித்தார். அதில் வடக்கின் முக்கோண வலயத்தில் 10 இலட்சம் மற்றும் ஏனைய பிரதேசங்களில் 15 இலட்சம் தென்னங்கன்றுகளை நடுவதற்குத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். தேங்காய் விலை அதிகரித்தல், தென்னை உற்பத்திகளின் வீழ்ச்சி உட்பட தென்னைப் பயிர்ச் செய்கையாளர்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் தொடர்பாக இன்று (10) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே…

Read More