புதிய கல்விக் கொள்கை தொடர்பில் பிரதமருக்கு எதிரான தவறான பிரச்சாரங்கள் – அமைச்சர் விஜித்த ஹேரத் கண்டனம்

புதிய கல்விக் கொள்கை தொடர்பில் குறுகிய அரசியல் நோக்கமுடையவர்கள் மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை தோற்றுவித்து பிரதமர் மீது மிக மோசமான குற்றச்சாட்டுக்களையும், விமர்சனங்களையும் முன்வைக்கிறார்கள். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பிரதமரை பதவி விலகுமாறு அரசாங்கத்தில் எவரும் குறிப்பிடவில்லை என வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார். 6ஆம் தர பாடப்புத்தகத்தில் தவறான விடயமொன்று உள்ளடக்கப்பட்டுள்ளமை பாரதூரமான பிழையாகும். தரவு தொகுதி அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளது. உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். எந்நோக்கத்துக்காக…

Read More

அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து அதிருப்தி – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

தற்போதைய அரசாங்கத்தின் நிர்வாகம் மற்றும் கொள்கை ரீதியான தீர்மானங்கள் குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (04) மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர், நாட்டின் தற்போதைய நிலைமை மிகவும் பயங்கரமாகத் தோன்றுவதாகக் குறிப்பிட்டார். விசேடமாக, அரசாங்கம் தற்போது கல்வித்துறையையும் சீர்குலைத்துள்ளதாகக் குற்றம் சுமத்திய அவர், நாட்டின் அனைத்துத் துறைகளும் வீழ்ச்சியடைந்து வருவதாகத் தெரிவித்தார்.  அரசாங்கத் தரப்பினர் கடினமாக உழைப்பதாகக் கூறிக்கொண்டாலும், நடைமுறையில் மக்கள்…

Read More

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு குறித்து மக்கள் போராட்ட முன்னணி நீதியமைச்சரிடம் அதிருப்தி

அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களை ஒடுக்கும் வகையிலான சரத்துக்களை உள்ளடக்கியதாக வெளியிடப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு தொடர்பில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிடம் அதிருப்தி வெளியிட்டிருக்கும் மக்கள் போராட்ட முன்னணியினர், பயங்கரவாதத்தடைச்சட்டம் முற்றாக நீக்கப்படுவதுடன் அதனைப் பதிலீடு செய்வதற்காகப் புதிய சட்டம் கொண்டுவரப்படக்கூடாது என வலியுறுத்தியுள்ளனர். தற்போது நடைமுறையில் உள்ள 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத்தடைச் சட்டத்துக்குப் பதிலாக ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ எனும் புதிய…

Read More

இடைத்தங்கல் முகாம்களிலிருந்து பலவந்தமாக வெளியேற்றம் ; லக்ஷ்மன் கிரியெல்ல குற்றச்சாட்டு

இயற்கை அனர்த்தங்களால் கண்டி மாவட்டமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் தற்போதும் சுமார் 6000க்கும் மேற்பட்டோர் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தற்காலிக இருப்பிடங்கள் கூட அமைத்துக் கொடுக்கப்படாத நிலையில், அவர்கள் குறித்த இடைத்தங்கல் முகாம்களிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களால் மலையகத்துக்கு, குறிப்பாக கண்டி மாவட்டத்திற்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. அனர்த்த நிவாரணப் பணிகளுக்காக ஐக்கிய மக்கள் சக்தி என்ற ரீதியில்…

Read More

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பெத்லகேமில் நத்தார்: நம்பிக்கையும் மீட்சியும்

காஸா பகுதியில் போர்நிறுத்தம் நிலவும் நிலையில், இயேசு கிறிஸ்து பிறந்த பெத்லகேமில் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் நத்தார் கொண்டாட்டங்கள் மீண்டும் உற்சாகமாக தொடங்கியுள்ளன. ஜெருசலேமின் திருச்சபை பேராயர் கர்தினால் பியர்பாட்டிஸ்டா பிஸாபல்லா, பாரம்பரிய ஊர்வலமாக ஜெருசலேமிலிருந்து பெத்லகேம் வந்தார். காஸா கத்தோலிக்க தேவாலயத்திலிருந்து மக்களின் அன்பும் தைரியமும் செய்தியாக கொண்டு வரப்பட்டதாக அவர் தெரிவித்தார். இந்த விழா மத நிகழ்வாக மட்டுமல்லாமல், சுற்றுலாவை சார்ந்த பெத்லகேமின் பொருளாதார மீட்சிக்கான அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது. உள்ளூர் மக்கள் மீண்டும் வாழ்வாதார…

Read More

போதைப்பொருள் சுற்றிவளைப்பில் 901 பேர் கைது!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நாடளாவிய ரீதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (23) மேற்கொள்ளப்பட்ட “முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய செயற்பாட்டின் போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 901 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 952 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்போது, 01 கிலோ 487 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 04 கிலோ 925 கிராம் ஐஸ் போதைப்பொருளும், 01  கிலோ  056 கிராம் கொக்கேயின் போதைப்பொருளும்,  05 கிலோ …

Read More

தையிட்டி அமைதி வழி போராட்டத்தில் பொலிஸாரின் சித்திரவதை தொடர்பில் சர்வதேச தூதுவராலயங்களுக்கு முறைப்பாடு

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக அமைதி வழியில் ஜனநாயக ரீதியாக போராடிய எம்மை அரச அறிவுறுத்தலின் பேரில் பொலிஸார் கடுமையாக சித்திரவதை செய்துள்ளனர். சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவேண்டிய பொலிஸாரின் இம் மிலேச்சத்தனமான பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நீதியான அணுகுமுறைகளுக்காக அழுத்தத்தினைப் பிரயோகிக்குமாறு வெளிநாட்டுத் தூதுவராலயங்கள் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் ரீதியிலான பொறிமுறைகளுக்கும் அரசுக்கு உதவி அளிக்கும் நிறுவனங்களுக்கும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா  நிரோஷ் கோரியுள்ளார். இலங்கையில் தமக்கு எதிராக…

Read More

கொழும்பு மாநகர சபை வரவு–செலவு: வருமான இலக்குகள் நடைமுறைக்கு ஏற்றதா? – கூட்டு எதிர்க்கட்சி கேள்வி

கொழும்பு மாநகர சபையின் அடுத்த ஆண்டிற்கான வரவு–செலவு திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில எதிர்பார்க்கப்பட்ட வருமானங்கள் ஆவணத்தில் அழகாக தோன்றினாலும், அவை நடைமுறையில் சாத்தியமா என்பதை தீவிரமாக பரிசீலிக்க வேண்டும் என மாநகர சபையின் கூட்டு எதிர்க்கட்சியின் தேசிய அமைப்பாளர் எச்.எம். மன்சில் தெரிவித்தார். இந்த வருமான இலக்குகளை அடைவதற்காக வரி செலுத்தும் மக்கள்மீது கூடுதல் சுமை விதிக்கப்படுமானால், அதற்கு தாம் ஒருபோதும் அனுமதி வழங்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். தேசிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டிலுள்ள கொழும்பு மாநகர…

Read More

36 மில்லியன் ரூபா சொத்து வழக்கு: பெலியத்த முன்னாள் தவிசாளர் சிறில் முனசிங்க பிணையில் விடுதலை

பெலியத்த பிரதேச சபையின் தவிசாளராக பதவி வகித்த காலத்தில் தனது சட்டபூர்வ வருமானத்தை மீறி சுமார் 36 மில்லியன் ரூபா பெறுமதியுள்ள சொத்துகளை முறையற்ற வகையில் ஈட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் தவிசாளர் சிறில் முனசிங்க, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் திங்கட்கிழமை (22) பிணையில் விடுவிக்கப்பட்டார். சந்தேகநபரை தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க நீதிவான் அசங்க எஸ். போதரகம உத்தரவிட்டதுடன்,…

Read More

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட 50 சதவீத மக்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது 

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 50 சதவீத மக்களுக்கு ரூ.25,000 உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது என அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடகத் துறை அமைச்சருமான வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை (16) இடம்பெற்றது, இதில் கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். “கம்பஹா மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 73.4 சதவீத மக்களுக்கும்  , அனுராதபுரம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட70.05 சதவீத மக்களுக்கும் , இரத்தினபுரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 68.39% சதவீத மக்களுக்கும், மாத்தளை…

Read More