மியன்மாரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியன்மார் மக்களுக்கு நிவாரணமாக இலங்கை அரசாங்கம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை வழங்கியுள்ளது. அதற்கான காசோலை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, இலங்கைக்கான மியன்மார் தூதுவர் மார்லர் தான் ஹடாயிக்கிடம்( (Marlar Than Htaik) இன்று (10) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கினார். தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும், பாதிக்கப்பட்ட மியன்மார் மக்களுக்கு நிதி உதவி வழங்கியதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட அரசாங்கத்திற்கு இலங்கைக்கான மியான்மார்…

Read More

பட்டலந்த வதைக்கூடத்தின் பின்னணியில் இருந்தவர்களை நிச்சயம் தண்டிக்குமாறு இராமலிங்கம் சந்திரசேகர் வலியுறுத்து!

1977 ஆம் ஆண்டு முதல் 1994 ஆம் ஆண்டு வரை இந்நாட்டை கொலை களமாக்கிய ஐக்கிய தேசியக் கட்சியே பட்டலந்த வதைக்கூடத்தின் சூத்திரதாரிகள் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். பட்டலந்த வதைக்கூடத்தின் பின்னணியில் இருந்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். பட்டலந்த வதைக்கூடம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தின் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இதன் போது தொடர்ந்தும் உரையாற்றுகையில், “நல்ல…

Read More

பட்டலந்த தவிர வேறு சித்திரவதைக்கூடங்கள் தொடர்பான தகவல்கள் வெளியீடு

நாடாளுமன்றத்தில் இன்று விவாதிக்கப்படும் நான்கு தசாப்தங்களுக்கு முன்னரான பட்டலந்த சித்திரவதை கூடத்தைப் போலவே, ஏராளமான அரசாங்கத்துக்கு ஆதரவு சித்திரவதைக்கூடங்கள் இலங்கையில் இருந்ததை உறுதிப்படுத்தும் சில தகவல்களை இலங்கையில் காணாமல் போனார் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் செயலாளர் வெளியிட்டுள்ளார். ஜே.வி.பி.யின் இரண்டாவது கிளர்ச்சியின் போது காணாமல் போனவர்களை விசாரிக்க ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவால் நியமிக்கப்பட்ட மத்திய வலய ஆணைக்குழுவின் செயலாளர், சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டம் (ITJP), இலங்கையில் ஜனநாயகத்திற்கான பத்திரிகையாளர்கள் (JDS) மற்றும் இலங்கை…

Read More

தேசபந்துவிற்கு எதிரான பிரேரணை சட்ட விரோதமானது – விஜயதாச ராஜபக்ஷ

தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை, சட்டத்துக்கு முரணானது என முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தேசபந்து தென்னகோன் காவல்துறைமா அதிபராக நியமிக்கப்பட்டமை செல்லுபடியற்றது என உயர்நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவு இன்னும் அமுலில் உள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவு அமுலில் இருக்கையில், தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து நீக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்டு…

Read More

விடுதலைப் புலிகள் மீண்டும் தலைதூக்குகின்றனர் – அஜித் பி. பெரேரா

சர்வதேச ரீதியில் விடுதலைப் புலிகள் மீண்டும் எழுச்சி பெறுவதற்குச் சாதகமான சாத்தியக்கூறுகள் உருவாகி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.  ஹிரு செய்திப் பிரிவுக்கு நேற்று வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதே நாடாளுமன்ற உறுப்பினர் இதனைத் தெரிவித்தார்.  விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் தலைதூக்குமா என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அதற்கான சாத்தியக்கூறுகள் சர்வதேச ரீதியில் உருவாகி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.

Read More

முன்னாள் இராணுவத் தளபதிகள் மீதான தடைகள் குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை

இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களை விசாரிக்க இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தவறும் வரை, நீதி நிலைநாட்டப்படுவதை உறுதி செய்வதற்கு சர்வதேச நடவடிக்கை அவசியம் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.  இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு பிரதானி உட்பட நான்கு நபர்கள் மீது ஐக்கிய இராச்சியம் விதித்த தடைகள் குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளது.  இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைச் சேகரித்து…

Read More

வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கு கடுமையான சட்டம்

வரி ஏய்ப்பு மற்றும் வரியை ஏமாற்றும் அனைத்து வர்த்தகர்களுக்கும் எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துவதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அறிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று (21) இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போதே அவர் இதனை தெரிவித்தார் மேலும் லஞ்சத்திற்கு எதிராக கடுமையான முடிவு எடுக்கப்படும் என்றார். ஒவ்வொரு அரசாங்க உத்தியோகத்தரும் மேலதிகக் கட்டணங்கள் இன்றி ஒதுக்கப்பட்ட கடமையை நிறைவேற்ற வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

Read More

2025 வரவு செலவு திட்டத்திற்கு சபாநாயகரின் சான்றிதழ்

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திற்கு சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன தனது சான்றிதழை பதிவு செய்துள்ளார். இதன்படி, 2025 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டமாக இந்த ஒதுக்கீட்டுச் சட்டமூலம் அமுலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்படுகிறது. வேலை நிறுத்த சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நேற்று (21) நடைபெற்றது. ஆதரவாக 159 வாக்குகளும் எதிராக 45 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதன்படி, 2025 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் 114…

Read More

அமெரிக்காவில் மாநில பட்டியலுக்கு கல்வி மாற்றம்..

அமெரிக்காவில் கூட்டாட்சி அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கல்வித்துறையை கலைக்கும் உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார் இதன்மூலம் அமெரிக்காவில் மாநில பட்டியலுக்கு கல்வி மாற்றப்பட்டுள்ளது. 50 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்போவதாக அந்நாட்டு கல்வித்துறை கடந்த வாரம் அறிவித்திருந்த நிலையில், தேர்தல் வாக்குறுதியில் தான் அறிவித்ததைப் போலவே கல்வித்துறையை கலைக்க டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். டிரம்பின் இந்த உத்தரவால் தனியார் பள்ளிகள் பய ன் பெறக்கூடும் என கூறப்படுகிறது.

Read More

62 வங்கிகளில் கொள்ளையடித்த மக்கள் விடுதலை முன்னனி

1985 ஆம் ஆண்டுகளில் மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்தவர்கள்தான் வங்கிகளை கொள்ளையடித்தார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன தெரிவித்தார். பாதீடு தொடர்பான விவாதத்தின் போது கலந்து கொண்டு உரையாற்றுகையில் நாடாளுமன்ற உறுப்பினர் இதனைத் தெரிவித்தார். 1985 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்தவர்கள் வங்கிகளைக் கொள்ளையடித்ததாக ரோஹினி குமாரி விஜேரத்ன குறிப்பிட்டார். மேலும் இந்தக் காலப்பகுதியில் மக்கள் விடுதலை முன்னணியினர் 62 வங்கிகளைக் கொள்ளையடித்ததாக அவர் தெரிவித்தார். இதன் போது வங்கிகளிலிருந்து…

Read More