ஈரான் துறைமுகத்தில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் 400 பேர் காயம்

தெற்கு ஈரானின், பந்தர் அப்பாஸ் பகுதியிலுள்ள ஷாஹித் ராஜீ துறைமுகத்தில் இன்று (26) பாரிய வெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.  குறித்த சம்பவத்தில் 400ற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  ஈரான் தனது அணுசக்தி திட்டம் குறித்து அமெரிக்காவுடன் ஓமானில் மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.  அத்துடன் வெடிப்பு சம்பவத்திற்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை.

Read More

கார் குண்டு வெடிப்பில் ரஷ்ய ராணுவ ஜெனரல் மரணம்

மாஸ்கோ அருகே நிகழ்த்தப்பட்ட கார் குண்டு வெடிப்பில் ரஷ்ய ராணுவத்தின் மூத்த ஜெனரல்களில் ஒருவரான யுராஸ்லவ் மொகாலிக் கொல்லப்பட்டார். வீட்டருகே அவர் நடந்து செல்லும் பாதையில், வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரை முன்கூட்டியே நிறுத்திவிட்டு, ரிமோட் மூலம் அதை சிலர் வெடிக்கச் செய்துள்ளனர். ரஷ்ய அரசு சார்பில் பல்வேறு உயர்மட்ட பேச்சுவார்த்தைகளில் பங்கேற்றவர் யுராஸ்லவ் மொகாலிக். உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக டிரம்பின் உயர்மட்டக் குழு அதிகாரிகள் புடினை சந்தித்து பேச இருந்த நிலையில், மொகாலிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.கொலையின்…

Read More

பரிசுத்த பாப்பரசரின் இறுதி ஆராதனைகள் இன்று

நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் திருத்தந்தையின் இறுதி ஆராதனைகள் இன்று (26) நடைபெறவுள்ளன. இலங்கை நேரப்படி இன்று மாலை 1.30 மணியளவில் வத்திக்கான் நகரில் உள்ள புனித பேதுரு சதுக்கத்தில் இறுதி ஆராதனைகள் நடைபெறவுள்ளன. இறுதித் திருப்பலியை கர்தினால் கல்லூரியின் தலைவர் கர்தினால் ஜியோவானி பெட்டிஸ்டா ரே நடத்தவுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் உட்பட 2 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் இறுதி ஊர்வலத்தில்…

Read More

காஷ்மீருக்கு செல்ல வேண்டாம் – அமெரிக்கா எச்சரிக்கை

காஷ்மீரில் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. அதே சமயத்தில், அமெரிக்கர்களுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்களும், வன்முறை சம்பவங்களும் அவ்வப்போது நடந்து வருகின்றன. இந்தியா-பாகிஸ்தான் இடையிலான எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் வன்முறை சம்பவங்கள் நடப்பது இயல்பாகி விட்டது. காஷ்மீரில் உள்ள சுற்றுலா பகுதிகளான ஸ்ரீநகர், குல்மார்க், பஹல்காம் ஆகிய இடங்களிலும் தாக்குதல்கள்…

Read More

தென்கொரிய முன்னாள் அதிபர் மீது ஊழல் குற்றச்சாட்டு

தென்கொரியாவின் முன்னாள் அதிபர் மூன் ஜே இன். கடந்த 2017 முதல் 2022-ம் ஆண்டு வரை அதிபராக இருந்த அவர் சட்ட விரோதமாக தனது முன்னாள் மருமகனை விமான போக்குவரத்து துறை இயக்குனராக பதவியமர்த்தி உள்ளார். எனவே அவர் பெற்ற ஊதியம், சலுகைகள் மூலம் தாய்லாந்தின் தாய் ஈஸ்டர் ஜெட் விமான நிறுவனத்திடம் இருந்து சுமார் ரூ.1¼ கோடி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனையடுத்து ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய அதிபரின் பட்டியலில் மூன் ஜே இன்னும்…

Read More

ஜப்பானால் அறிமுகம் செய்யப்பட்ட ரோபோ சிங்கம்

சவாரி செய்யக்கூடிய ரோபோ சிங்கத்தை சொந்தமாக வைத்திருப்பதை கற்பனை செய்ய முடிகிறதா? என்று சவால் விட்டு ரோபோ சிங்கம் ஒன்றை கவாசாகி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ஜப்பான் ஒசாகா நகரில் கண்காட்சியில் குறிப்பிட்ட ரோபோவை காட்சிப்படுத்தி பார்வையாளர்களை கவரும் வகையில் விளக்கப்படத்தையும் ஒளிபரப்பி வருகிறது. CORLEO என்று அழைக்கப்படும் ரோபோ சிங்கம், அனைத்து நிலப்பரப்புகளிலும் செல்லக்கூடிய தனிப்பட்ட போக்குவரத்து வாகனம் ஆகும். ஒவ்வொரு காலிலும் ரப்பர் குளம்பு பொருத்தப்பட்டுள்ளது. புல்வெளிகள், பாறைப் பகுதிகள் மற்றும் இடிபாடுகள் நிறைந்த…

Read More

பாகிஸ்தானின் தாக்குதல் – இந்தியாவின் பதிலடி

காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22ஆம் திகதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.  இந்த தாக்குதல் சம்பவத்துக்கு தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான டி.ஆர்.எப். பொறுப்பேற்றுள்ளது.  இந்த நிலையில், எல்லை பகுதியில் பாகிஸ்தான் இராணுவம் தாக்குதலை தொடங்கியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பந்திபோராவில் பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்துள்ளது.  எல்லையில் துப்பாக்கிச்சூடு நடத்திய பாகிஸ்தான் இராணுவத்திற்கு இந்திய இராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது….

Read More

காசா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் – 23 பேர் பலி

காசா – இஸ்ரேல் இடையேயான போர் ஒப்பந்தம் காலாவதியான நிலையில் காசா மீது இஸ்ரேல் ராணுவம் மீண்டும் போர் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. பணய கைதிகளை மீட்கவும், ஹமாஸ் ஆயுத குழுவினரை முழுவதுமாக அழிக்கும் நோக்கிலும் இஸ்ரேல் ராணுவம் சரமாரி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. 2 ஆண்டுகளாக நீடித்து வரும் இந்தபோரில் இதுவரை 50 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர். இந்தநிலையில் நேற்றும் இஸ்ரேல் ராணுவம காசா மீது அதிபயங்கர தாக்குதலில் ஈடுபட்டது. காசாவின் ராபா பகுதியை நோக்கி…

Read More

பாகிஸ்தானியர்களை 48 மணிநேரத்தில் வெளியேறுமாறு இந்தியா உத்தரவு

பாகிஸ்தானியர் இந்தியா வருவதற்கான விசா தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்திய பிரதமர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு, வாகா எல்லையை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணிநேரத்தில் வெளியேறவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. பாகிஸ்தானியர்கள் இந்தியா வருவதற்கு இனி விசா வழங்கப்படாது என்றும் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்புக்கான அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பாகிஸ்தான் சென்றுள்ள…

Read More

காஷ்மீரில் துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் -28 பேர் பலி

காஷ்மீர் – பஹல்கம் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட 28 பேர் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  முக்கிய சுற்றுலாத் தலமொன்றை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.  பாகிஸ்தான் லஸ்கர் ஈ தாய்பாவின் நிழல் அமைப்பான ரெஸிஸ்டண்ட் முன்னணி, குறித்த தாக்குதலைப் பொறுப்பேற்றுள்ளது.

Read More