கனடா மற்றும் மெக்சிகோவிற்கு இன்று முதல் 25% வரி

மெக்சிகோ மற்றும் கனடா மீதான 25% வரி அதிகரிப்பு இன்று (மார்ச் 04) அமலுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கையைத் தவிர்க்க முடியுமா என்பது குறித்து பல வாரங்களாக இருந்த சந்தேகங்கள் முடிவுக்கு வந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மெக்சிகன் மற்றும் கனேடிய அதிகாரிகள் ஒரு வழியைக் கண்டுபிடிக்க முயற்சித்தாலும், இந்த நடவடிக்கை தொடரும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மேலும் தெரிவித்தார்.

Read More

ஜெர்மனியில் இடம்பெற்ற விபத்தினால் மக்கள் அச்சம்.

இன்று (மார்ச் 03) மேற்கு ஜெர்மனியில் மன்ஹெய்ம் நகரில் பாதசாரிகள் மீது நபர் ஒருவர் காரால் மோதியதில் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விபத்தில் பலர் உயிரிழந்திருக்கக்கூடும் என்றும் தகவல் வெளியாகியுள்ள நிலையில், அப்பகுதியில் பொதுமக்கள் பெரிதும் அச்சமடைந்துள்ள நிலையில் விபத்து இடம்பெற்ற பகுதிக்கு உட்பிரவேசிப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறும், போக்குவரத்துக்கு மாற்றுவீதிகளை பயன்படுத்துமாறும் அப்பகுதி மக்களுக்கு மன்ஹெய்ம் பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் அந்நாட்டுப் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு…

Read More

புனித திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் நோய் குறித்த அறிவிப்பு

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள புனித திருத்தந்தை பிரான்சிஸின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்துள்ளது. அவருக்கு இன்னும் மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன் காரணமாக அவருக்கு செயற்கை ஆக்ஸிஜன் கொடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், போப்பின் தற்போதைய நிலையை அறிய இன்னும் 24 மணிநேரம் அல்லது 48 மணிநேரம் தேவை என்று அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

Read More

உக்ரைன் அதிபரை வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேற்றிய டிரம்ப்

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையேயான சந்திப்பு வெள்ளை மாளிகையில் நடைபெற்றது. உக்ரைனின் கனிம வளங்கள் தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திடவும், ரஷ்யாவுடனான முரண்பாடுகளை தீர்ப்பதற்கான வழிவகைகள் குறித்து கலந்துரையாடவும் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும், அந்த சந்திப்பில் இரு தரப்பினருக்கும் இடையே காரசாரமான வார்த்தைப் பரிமாற்றம் நடந்துள்ளது. இதன்போது உக்ரைனுக்கு அமெரிக்கா அதிக ஆதரவை வழங்க வேண்டும் என்று உக்ரைன் அதிபர் கூறியுள்ள…

Read More

பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டி அட்டவணை அறிவிப்பு

10வது பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் ( PSL) போட்டி அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த போட்டி ஏப்ரல் 11 முதல் மே 18 வரை நடைபெற உள்ளது. 6 அணிகள் விளையாடும் போட்டியில் 34 போட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன. முதல் போட்டி ஏப்ரல் 11 ஆம் திகதி நடப்பு சாம்பியனான இஸ்லாமாபாத் யுனைடெட் மற்றும் இரண்டு முறை பிஎஸ்எல் சாம்பியனான லாகூர் கிலாண்டர்ஸ் இடையே நடைபெறும். இந்த போட்டி நடைபெறும் காலத்திலேயே ஐபிஎல் போட்டியும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது….

Read More

சர்வதேச மீன் ஏற்றுமதியில் இந்தியாவிற்கு இரண்டாம் இடம்

சர்வதேச மீன் ஏற்றுமதியில் இந்தியா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது உலக மீன் சந்தையில் 8% பங்கு வகிக்கும் இந்தியா, கடந்த ஆண்டு மீன் ஏற்றுமதியில் 7000 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஈட்டியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், சர்வதேச மீன் ஏற்றுமதி நாடுகளின் பட்டியலின்படி, கடந்த ஆண்டு, சீனா 67.80 மில்லியன் டன் மீன் பொருட்களை ஏற்றுமதி செய்த நிலையில், இந்தியா 18.40 மில்லியன் டன் மீன் பொருட்களை ஏற்றுமதி செய்து முதலிடத்தில் உள்ளது.

Read More

கோலாகலமாக ஆரம்பமான ஜெர்மனியின் “தெரு திருவிழா”

ஜெர்மனியின் கலாச்சார பாரம்பரியங்களில் ஒன்றான தெரு திருவிழா இன்று ஆரம்பமாகியுள்ளது கொலோன் நகரில் வண்ணமயமான ஆடைஅணிந்து கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் பெண்கள் திருவிழா, கவுன்ட் டவுன் உடன் இவ்விழா ஆரம்பமானது இந்த தெரு திருவிழாவில் விதவிதமான ஆடை அணிந்திருந்த பெண்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

Read More

இலங்கையின் துறைமுக முதலீடுகளுக்கு தயாராகும் நெதர்லாந்து

இலங்கையின் துறைமுகங்களை அண்மித்த முதலீடுகளுக்கு நெதர்லாந்து தயாராக உள்ளதென இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் பொனி ஹோர்பஷ் (Bonnie Horbach) தெரிவித்தார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் பொனி ஹோர்பஷ் (Bonnie Horbach) ஆகியோருக்கு இடையில் இன்று (27) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டது. இலங்கை மற்றும் நெதர்லாந்துக்கு இடையில் காணப்படும் நீண்டகால நட்புறவை பலப்படுத்திக்கொள்வது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், இலங்கையின் சுற்றுலா, துறைமுகம், முதலீட்டு துறைகளின்…

Read More

பஹ்ரைன் செல்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

பஹ்ரைன் செல்பவர்கள் சுற்றுலா விசா மூலம் பஹ்ரைனுக்குள் பிரவேசித்து அனுசரணை இன்றி அதனை பணியாளர் விசாவாக மாற்ற முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பஹ்ரைனில் உள்ள இலங்கை தூதரகத்தை மேற்கோள் காட்டி, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இந்த விடயத்தை அறிவித்துள்ளது. அங்கு சுற்றுலா விசாவை அனுசரணையுடன் பணி விசாவாக மாற்றுவதை அனுமதிக்கும் வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த பணியகம் தெரிவித்துள்ளது. முன்னதாக, 2024ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 13ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில், தொழில்…

Read More

உலகம் போற்றும் மகா சிவராத்திரி தினம் இன்று

உலக வாழ் இந்துக்களால் இன்றைய தினம் மகா சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த விரதம் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் சதுர்த்தசி திதி இரவில் அனுஷ்டிக்கப்படுகிறது. இதற்கமைய உலகெங்கிலும் உள்ள இந்து ஆலயங்களிலும் நாட்டில் உள்ள தொன்மை மிக்க சிவ தலங்கள் உள்ளிட்ட அனைத்து ஆலயங்களிலும் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெறவுள்ளன

Read More