மார்பில் குழந்தையோடு மிடுக்காக தொழில் புரியும் தாய்…

டெல்லி ரயில் நிலையத்தில் தனது குழந்தைக்கான அரவணைப்பை வழங்கியபடி நேர்த்தியாக தனதுதொழிலையும் செய்யும் பெண் ரயில்வே பாதுகாப்பு சிறப்பு படை(RPSF) காவலரது காணொளி சமூகவலைத்தளத்தில் பெரும் பெற்றுள்ளது. அவருடைய பெயர் ரீனா RPSF இன் அதிகாரப்பூர்வ X கணக்கிலேயே இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது.பெண் காவலரான ரீனா ஒரு பரபரப்பான ரயில் நிலையத்தில் கையில் தடியுடன் கடைமையாற்றும் போது அவரது ஒரு வயது நிரம்பிய குழந்தையை நெஞ்சில் சுமந்தபடி அமைந்த அந்தக்காணொளி தாயின் அன்பை மற்றுமோர் தளத்தில் அமரவைத்துள்ளது.

Read More

ஆர்ஜெண்டினாவில் அரசியல் பதற்றம்.

ஆர்ஜென்டினாவில் ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லாத தீர்மானனத்தை கொண்டுவர எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆர்ஜெண்டீனா ஜனாதிபதியின் அண்மைக்கால செயற்பாடுகள் முதலீட்டாளர்களை பாதிப்பதாக கூறப்படுவதோடு அந்த நட்டு சட்டத்தரணிகள் பலர் ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனிடையே இந்த ஊழலில் இருந்து தன்னை விடுவிக்குமாறும், தான் நல்லேன்னுத்துடன் செயற்பட்டதாகவும் ஆர்ஜென்டினா ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Read More

கனடா டொராண்டோவில் நடந்த விமான விபத்து.

கனடா டொராண்டோவில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளாகி வீழ்ந்த விமானத்தில் இருந்த 80 பேரும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர், மின்னியாபோலிஸிலிருந்து வந்த டெல்டா ஏர் லைன்ஸ் விமானம் ஓடுபாதையில் சறுக்கிச் சென்ற போது தீப்பொறிகள் பறக்க ஆரம்பித்து தலைகீழாக கவிழ்ந்துள்ளது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு மீட்ப்பு பணிகள் ஆரம்பமாகின. இருப்பினும் பதினெட்டு பேர் காயமடைந்துள்ளனர். மேலும் விபத்துக்கான காரணம் என்னவென்று புலனாய்வாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

Read More

Adani to Develop India’s Largest ‘Skill and Employ’ Program to Support ‘Make in India’.

17th February 2025:  In line with Adani Group Chairman Gautam Adani’s social philosophy सेवा साधना है, सेवा प्रार्थना है और सेवा ही परमात्मा है, the Adani Group has partnered with ITE Education Services (ITEES) of Singapore to build a skilled talent pipeline for serving the needs of industries, including Green Energy, Manufacturing, Hi-tech, Project Excellence and Industrial Design. To build this talent pool of industry-ready…

Read More

அவசர அவசரமாக கூடவுள்ள உச்சி மாநாடு.

உக்ரைன் குறித்து அமெரிக்கா ஐரோப்பாவை தவிர்த்துவிட்டு ரஸ்யாவுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கான ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகின்ற நிலையில் ஐரோப்பிய தலைவர்கள் அவசர அவசரமாக சந்திப்பொன்றை செய்யவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரான்ஸ் தலைநகரில் இடம்பெறவுள்ள இந்தமாநாட்டில் பிரிட்டிஸ் பிரதமர் சேர் கெய்ர் ஸ்டார்மெர் உட்பட பல ஐரோப்பிய தலைவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர். சுமுகமான ஒரு அணுகுமுறையை உக்ரைனிற்கான சமாதானத்தில் உருவாக்குவதற்காக ஐரோப்பாவையும் அமெரிக்காவையும் இணைப்பதே தனது பணி என பிரிட்டிஸ் பிரதமர் கூறியதோடு ஐரோப்பிய தலைவர்களுடன் இந்த மாநாட்டில்…

Read More

முதன்முறையாக படம்பிடிக்கப்பட்ட கடல் சாத்தான்

கருப்பு கடற்பறவை என்று அழைக்கப்படும் ஒரு வகை ஆழ்கடல் ராட்சத ஆங்லர்ஃபிஷ் சமீபத்தில் கேனரி தீவுகளில் உள்ள டெனெரிஃப் கடற்கரையில் ஒளி நிறைந்த நீல நீரில் அரிதாகத் தோன்றியிருக்கின்றது. இந்தவகை கடல் சாத்தன் மீன்கள் பொதுவாக ஆழ்கடலில் வாழ்வதால் இதுவே அது படமாக்கப்படுவது முதல் முறையாகும்.அண்ணல் இந்த வகை மீன் ஏன் இவ்வளவு ஆழமற்ற நீர் பரப்புக்கு வந்ததென்பது தெரியவில்லையென ஆய்வாளர்கள் கூறுகின்றனர். குறிப்பாக பெண் ஆங்லர்ஃபிஷ்கள் தங்கள் தலையில் உள்ள “மீன்பிடி கம்பம்” போன்ற அமைப்பிற்க்காய்…

Read More

அமெரிக்காவில் மேலும் பல அரசு ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம்…!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் அவரது ஆலோசகர்ரும் டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியுமான எலோன் மஸ்க்கும் பதவியேற்ற குறுகிய காலத்திற்குள், அமெரிக்காவில் கிட்டத்தட்ட பத்தாயிரம் அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளனர். உள்துறை, எரிசக்தி, வேளாண்மை மற்றும் சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் துறைகளில் இருந்து ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் அமெரிக்காவில் அதிகாரத்துவத்திற்கு எதிரான ஒடுக்குமுறையின் ஒரு பகுதியாக அரசு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதாக…

Read More

பாகிஸ்தானில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.

தென்மேற்கு பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது, சுரங்கத் தொழிலாளர்கள் குழுவை ஏற்றிச் சென்ற வாகனத்தை குறிவைத்து குறித்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தத் தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Read More

90ஸ் கிட்ஸ்சின் கிரிக்கட் ஆதர்ச நாயகர்கள் கலந்து கலக்கும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் (IML) வெப்ரவரி 22ம் திகதி ஆரம்பமாகின்றது.

விளையாட்டுகளில் கணவான்கள் விளையாட்டாக அறியப்படும் கிரிக்கெட்டுக்கு ரசிகர்கள் என்றும் குறைவதில்லை. குறிப்பாக 90ஸ் கிட்ஸ் ஆதர்ச நாயகர்கள் என்று அழைக்கப்படும் தற்போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வேபெற்ற வீரர்கள் மீண்டும் களத்தில் கலக்குவதை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றார்கள். இதனை அறிந்தே சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் (IML) கிரிக்கெட் போட்டி தொடர் நடத்தப்படவுள்ளது. டி20 பாணியில் நடத்தப்படும் இந்த தொடரில் ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்க உள்ளனர். 2025ம் ஆண்டுக்கான சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடர் வெப்ரவரி 22ம்…

Read More

பாப்பரசரின் உடல்நிலை குறித்து வெளியான அறிவிப்பு.

பாப்பரசர் பிரான்ஸிஸின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும் அவருக்கு லேசான காய்ச்சல் உள்ளதாகவும் வத்திக்கான் தெரிவித்துள்ளது. சுவாசத்தொற்று நோயால் பாதிக்கப்பட்டு, மூச்சுக்குழாய் அழற்சி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே வத்திக்கான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 88 வயதான பாப்பரசர் பிரான்ஸிஸ், வெள்ளிக்கிழமை (14) திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட்டதையடுத்து, வத்திக்கானில் உள்ள வைத்தியசாலையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதன்போது அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் நுரையீரலில் தொற்றுப் பாதிப்பு இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Read More